கோடம்பாக்க ரீலும், ரியலும்! – சாப்டர் 1

கோடம்பாக்க ரீலும், ரியலும்! – சாப்டர் 1

இயக்குநர் சி.வி.ஸ்ரீதருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையில் அந்த காலத்தில் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி.எதிர்பாராதது, அமரதீபம், உத்தமபுத்திரன், விடிவெள்ளி என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒருவகையில் ஸ்ரீதரின் கைவண்ணம் மிளிர்ந்தது. அமரதீபம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஸ்ரீதரின் வீனஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தது. இந்தநிலையில் ஒரு விழாவில் இயக்குநர் ஸ்ரீதரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டார்கள். ‘என்னங்க, எப்பப் பார்த்தாலும் நடிகர் திலகத்துக்கு கூடவே ஒட்டி உறவாடுறீங்க? அவரை வச்சே படம் எடுக்கிறீங்க? ஏன் மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்டிருக்கிறார் அந்த வேண்டப்பட்டவர். ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவர் இயக்குநர்களுக்கான நடிகர். இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பார். சொந்த ஐடியாக்கள் எதுவும் இருந்தால் அதை இயக்குநரிடம் சொல்லி தனது நடிப்பை…
Read More
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

சில சினிமாக்க காலத்தால் அழியாதவை. அவை வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமின்றி எப்போது பார்த்தாலும் புதுத்தன்மையும் மெருகும் குறையாமல் அப்படியே ஒவ்வொரு சூழலிலும் புது செய்தி சொல்லியபடி இருக்கும். அழகியல்ரீதியான படமாக இருந்தாலும் சரி, அரசியல் படங்களானாலும் சரி, ஒரு கதையைத் திரைக்குள் செலுத்தி நிரந்தரத்தன்மை அடையச் செய்வது என்பது அசாதாரண விஷயம் என்பதை சினிமா தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அம்புட்டு பேரும் ஒப்புக் கொள்வாய்ங்க. டைரகடர் மணிரத்னத்தின் பல படங்கள் இந்தச் சட்டகத்தினுள் அடங்கும். இதே மார்ச் 11, 1995-ஆம் வருஷம் ரிலீஸான 'பம்பாய்' முப்பது ஆண்டுகள் கழிச்சும், இன்று பார்த்தாலும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி படைப்பு சார்ந்தும் அது சொல்லும் மெசெஜில் தனித்தன்மையுடன் திகழ்கிறது என்பது நெசந்தானே? மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்...தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய…
Read More
36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

ஆம்.. இன்னியோட அக்னி நட்சத்திரம் ரிலீஸாகி 35 வருஷங்கள் நிறைவாகி போச்சு ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார். ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார். ஆனால் ‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடிச்சிருந்த நேரம். நெக்ஸ் உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பிச்சு ஃப்ர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடிச்சுப்புட்டார். இடையில் வந்ததுதான்…
Read More
ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்னியோட 24 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இப்படம் வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை…
Read More
மெல்லிசை  மாமணி & மெலடி கிங் வி.குமார்

மெல்லிசை மாமணி & மெலடி கிங் வி.குமார்

கடந்த 1996இல் காலமான இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும்போழுது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசையமைப்பாளருடயது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பார்கள்., இதற்கு நானும் விதி விலக்கல்ல.. பிறகு நான் நினைத்த இசையமைப்பாளரின் இசையில் அமைந்த பாடல் இது இல்லை, இது வேறு ஒருவர் என்று அறியும் போது ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.பெரும்பாலும் இவ்வாறு நான் MSV , இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தவர் வி. குமார். மெல்லிசை மன்னர்கள் பிரிந்து அவர்களில் எம்.எஸ்.வி. உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் அறிமுகமான ஏனைய இசையமைப்பாளர்களில் வி.குமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் மெலடிப்பாடல்கள் எம்.எஸ்.வியின் பாணியிலிருந்து வித்தியாசமாக இருந்தன. உன்னிடம் மயங்குகின்றேன், என்ற ஜேசுதாசின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பாடலை உருவாக்கியவர் இவர்தான். ஆனால் வி.குமார் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படாதவர். இவரது பெற்றோர்…
Read More
இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

பி. கே. ராஜா சாண்டோ ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். அக்காலத்தில் திரைப்பட தயாரிப்பு களுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு. மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை…
Read More
எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு  தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும்…
Read More
ஷோபா – நினைவிருக்கா?

ஷோபா – நினைவிருக்கா?

அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் (மே1ல்) அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்... "தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேக கதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா... குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...? அந்த…
Read More
இதயக்கனி – ரிலீஸான தினமின்று!

இதயக்கனி – ரிலீஸான தினமின்று!

எம்ஜிஆர் நடிப்பில் 48 வருடங்களுக்கு முன் அதாவது 1975, ஆகஸ்ட் 22-ஆம் தேதி இதே நாளில் வெளியான படம் இதயக்கனி. 🫶 48 வருடங்களுக்கு முன் இதயக்கனி வெளியான போது அது திரைப்பட வெளியீடாக மட்டுமின்றி, அரசியல் செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது. 1972-ல் தான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்திருந்தார். அவர் பின்னால் கணிசமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இந்த நேரத்தில் ஒரு திரைப்படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியானால் என்ன விதத்தில் அது எதிர்கொள்ளப்படும் என்பது அறியாததல்ல. படம் வெளியான முதல் நாளிலேயே அதன் வெற்றி உறுதியானது. காதல், சென்டிமெண்ட், சமூக அக்கறை, த்ரில் என அனைத்தும் கலந்த பூவை கிருஷ்ணனின் கதைக்கே முதலிடம் தர வேண்டும். அவரது கதைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை அமைத்தார். அவரது சத்யா மூவிஸ் தான் படத்தை தயாரித்தது. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சினிமாவுக்கென, வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு. அந்த…
Read More
தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.’அன்னக்கிளி’ ரிலீஸான தினம்!

தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.’அன்னக்கிளி’ ரிலீஸான தினம்!

தமிழ் சினிமாவின் இசையை, அ.மு., - அ.பி. என்று, அதாவது அன்னக் கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று பிரித்துப் பார்ப்பதுதான் சாமான்ய இசை ரசிகனின் அளவுகோல். அந்தப் படத்தின் மூலமாக வந்தது, தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல். கொஞ்சம் விளக்கமாக பஞ்சு அருணாசலம் சொன்னதைக் கேட்டு விட்டு தொடரலாமா? இப்போதெல்லாம் படம் ஒரு வாரம் ஓடினாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். அப்போது 50-வது நாளை கடந்தால்தான் அந்தப் படம் ஓரளவுக்கேனும் வெற்றிபெற்றது என அர்த்தம். வெற்றி விழாக்களை அப்போது வெவ்வேறு ஊர்களில் நடத்துவார்கள். டீமாக அந்த விழாக்களுக்குச் செல்வோம். அப்போது, `எவ்வளவுக்கு வாங்குனீங்க... எவ்வளவு லாபம்?’ என்று தியேட்டர்காரர்களிடம் விசாரிப்பேன். `நல்ல ஷேர் சார். ஒன்றரை லட்சம் வந்துச்சு... ரெண்டைத் தாண்டிடும்’ என்பார்கள். `அடேங்கப்பா... என்னா லாபம்’ என நினைத்துக் கொள்வேன். ஆனால், அதே பகுதியில் வெவ்வேறு தியேட்டர்களின் போஸ்டர்களில் `ஆராதனா’ வெற்றிகரமான 20-வது வாரம்’ என்று ஒட்டியிருக்கும்.…
Read More