ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், '' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை…
Read More
‘மொத ராத்திரி’ – ஒரு சுவாரஸ்யமான கிராமத்து காதல் கதை !

‘மொத ராத்திரி’ – ஒரு சுவாரஸ்யமான கிராமத்து காதல் கதை !

‘மொத ராத்திரி’ – தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்பைத் தாண்டி சொல்லப்படும் ஒரு சுவாரஸ்யமான கிராமத்து காதல் கதை! ‘மொத ராத்திரி’ என்ற தலைப்பைக் கேட்டவுடன் படம் எந்த மாதிரியான களத்தில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே ஏற்படும். ஆனால், அந்த எதிர்பார்ப்பை மட்டும் நம்பாமல், ஒரு திருமண இரவை மையமாக வைத்து காதல், உறவு, நம்பிக்கை, பொய், சமூகப் பார்வை மற்றும் குடும்ப மனநிலைகளை கலந்து ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை பெரும்பாலும் ஒரே இரவைச் சுற்றியே நகர்கிறது. என்ன கதை? காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் ரிஷிகாந்த், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அவருக்கே தெரியாமல் திருமண…
Read More
பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!

பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது. பிரபு தேவாவின் ஸ்டைலான தோற்றமும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மாஸ் அம்சத்தை கொடுக்க, வடிவேலுவின் காமெடி அதற்கு நேர்மாறான சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த…
Read More
‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினபுதிய போஸ்டர் வெளியீடு !!

‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினபுதிய போஸ்டர் வெளியீடு !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது. பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு…
Read More
‘தர்மன்’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடக்கம் !!

‘தர்மன்’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடக்கம் !!

  'தர்மன்' படக்குழுவினர் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிப்பின் அடுத்த கட்டத்திற்கு இத்திரைப்படம் முன்னேறியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தர்மன்' திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சில ஆளுமைகளின் அற்புதமான கூட்டணியாக அமைந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்குநராகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், அன்பரிவ் சண்டைப் பயிற்சியாளராகவும் தங்களின் தனித்துவமான ஆற்றலை வழங்கியுள்ளனர். 'தர்மன்' தனது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறது. இது ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  
Read More
‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !!

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !!

    முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது. இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை…
Read More
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையை எதிர்பார்க்க வைக்கிறது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மையத்தில், ராயா மற்றும்…
Read More
சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் !

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் !

இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களை கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு ஏற்ற கலை வடிவமைப்பும் பாடலுக்கு வலுவூட்டும் நிலையில், சாம் சி எஸ் அமைத்துள்ள…
Read More
‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்  ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும்

‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ் ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும்

  ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக…
Read More
‘I-POPSTAR Tamil’-ல் சென்னையின் அடுத்தகட்ட சுயாதீன இசை நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகிறார் யுவன் சங்கர் ராஜா

‘I-POPSTAR Tamil’-ல் சென்னையின் அடுத்தகட்ட சுயாதீன இசை நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகிறார் யுவன் சங்கர் ராஜா

  அசல் தமிழ் இசையை மையமாகக் கொண்ட புதிய இசை ரியாலிட்டி ஷோவை 'Rusk Media'-வின் OTT தளமான 'Alright! TV' அறிமுகப்படுத்துகிறது. இதில் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் வழிகாட்டிகளாக (mentors) இணைகிறார்கள். சென்னை, இந்தியா, 21 ஜூலை 2026: தமிழ் சுயாதீன இசை (indie music) இப்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டிலிருந்தே இசையமைக்கும் கலைஞர்கள், பாடலாசிரியர்கள்-பாடகர்கள் முதல் ராப்பர்கள் மற்றும் மேடைக்கலைஞர்கள் வரை, ஒரு புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் இசையின் போக்கை மாற்றியமைத்து வருகின்றனர். இப்போது, ​​அவர்களுக்கென ஒரு பிரத்யேக மேடை கிடைத்துள்ளது. ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள 'I-POPSTAR Tamil', அசல் தமிழ் இசையையும் அதை உருவாக்கும் கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு புதிய இசை ரியாலிட்டி தொடராகும். இத்தொடர் 'Alright! TV'-யில் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், 'Media Masons' யூடியூப் சேனலில் ஒவ்வொரு வியாழன் மற்றும்…
Read More