30
Jun
94 வயதிலும் புதிய சிந்தனையுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய சிங்கீதம், வழக்கமான கமர்ஷியல் சினிமா அல்ல. இசை, கற்பனை, மனிதநேயம், சுற்றுச்சூழல், பேராசை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க முயற்சித்திருக்கிறது. இந்தப் படத்தில் கிராம மக்கள் அனைவரும் பாடல்களின் மூலமாக மட்டுமே பேசும் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் திரைக்கதை அமைந்துள்ளது. கதையின் மையத்தில் இருக்கும் இளைஞராக நடித்துள்ள ஆயான் கே. தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். கதாநாயகியாக நடித்துள்ள அஹில்யா பம்ரூ கதையின் அப்பாவித்தனத்தையும் உணர்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஷாலினி கொண்டேபுடி, துளசி சிவமணி, பானர்ஜி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கற்பனை உலகிற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். புதுமுகங்கள் நடித்திருந்தாலும், எந்த இடத்திலும் அது பலவீனமாகத் தெரியவில்லை. இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது அனுபவத்தை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். குழந்தைகள் முதல்…
