இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

  உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம் இனிமேல்…
Read More
பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

  நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி. அதுமட்டுமல்லாமல், 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர். கமலின் வெற்றிப்படங்களான 'விக்ரம்', 'சத்யா', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'குணா', 'கலைஞன்' என எல்லா படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 1989ல் வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. '8 தோட்டாக்கள்', 'வனமகன்', என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடனான இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார். மேலும் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல்…
Read More
“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்) இயக்கம் - லோகேஷ் கனகராஜ் இசை - அனிருத் சண்டை பயிற்சி - அன்பறிவு ஒளிப்பதிவு -…
Read More
ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இன்று எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் 'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை 'அட்டு 'படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். A.D.R புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த உலக நாயகன் கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்' கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் .அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார். ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப் படுகிறது. இதற்கு ஒளிப்பதிவு - பாலாஜி,இசை - விக்ரம், ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம்,…
Read More
பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கி யது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம். இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், "இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக்…
Read More
கமலின் விருமாண்டி (மீண்டும்) ஓடிடியில் ரிலீஸாகுது!

கமலின் விருமாண்டி (மீண்டும்) ஓடிடியில் ரிலீஸாகுது!

பிக் பாஸ் எபிசோட் ஹீரோ &‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படம் வருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக திரைப் படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த பெயர் ‘சண்டியர்’. அந்தப் பெயரை மையமாக கொண்டுதான் படத்தின் பிரதான பாடலும் உருவாக்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ‘விருமாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவாவின் ‘ரோஷமன்’ திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் விருமாண்டியின் திரைக்கதையை வடிவமைத்திருப்பார் கமல். ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்கள் சொல்லும் போது, அது எப்படி மாற்றம் பெறுகிறது என்கிற வித்தியாச பாணியில் உருவாக்கப்பட்ட படம் விருமாண்டி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த விருமாண்டி, தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அமேசான் பிரைம் தளத்தில் வரும்…
Read More
தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை…
Read More
என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

பிரபல பத்திரிகை ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப் பிடித்த 70 படங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் தான் எழுதி, நடித்த 'மகாநதி' படத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதல்முறையாக, அந்தக் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளர். அதில், "எது என்னை 'மகாநதி' எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை சொன்னதில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இப்போது சொல்கிறேன். எனது வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டம் போட்டிருந்தார்கள். ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தது. ஆனால் எதேச்சையாக அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு கோபம் வந்தது, பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்தது.…
Read More
கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன்  ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.  இதையொட்டி, நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடிகர் பார்த்திபனிடம்,‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று  கேட்டனர். அதற்கு பார்த்திபன் அவர் பாணியிலேயே “கமல் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அவரிடமே வருகிறீர்களா, இல்லையா எனக் கேட்டு சொல்லிவிடுவேன். ரஜினியை பொறுத்தவரை அவர் ஆண்டவனை கேட்டுத்தான் சொல்வேன் என்பார். எனக்கு…
Read More
விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா  தற்கொலை முயற்சி?

விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா தற்கொலை முயற்சி?

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிப்பரப்பப்படும் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இநீகழ்ச்சியை ஒரு சாரார், இது முன்பே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு Scripted நிகழ்ச்சி என்று கருத்து தெரிவித்தாலும், உள்ளே நடக்கும் பல நிகழ்வுகள் தினந்தோறும் சமூகவலை தளங்களில் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இந்நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரிய இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில்,இந்நிகழ்ச்சி தினந்தோறும் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணியும் சக பங்கேற்பாளர்களின் நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் பித்து பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சி யிலும் அவர் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பரணியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரை சிலிண்டரை கொண்டு தாக்க முற்பட்டார் கஞ்சா கருப்பு. அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால் அன்றே பிக்பாஸ் வீடு ரத்த களரியாக மாறியிருக்கும். தற்போது பங்கேற்பா ளர்களை உளவியல் ரீதியாக…
Read More