ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்னியோட 24 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இப்படம் வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை…
Read More
தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை…
Read More
என்னை ஏன் சந்தித்தார் கெஜ்ரிவால்? – கமல் பேட்டி!

என்னை ஏன் சந்தித்தார் கெஜ்ரிவால்? – கமல் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக ட்விட்டர் மூலம் அன்றாட அரசியல் நடப்புகள் குறித்து கமெண்ட் போடும் சில வார்த்தைகளே தமிழக ஊடகங்களின் விவாதப் பொருளாக மாறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் பினராயி விஜயனைச் சந்தித்த கமல், அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகக் கூறியதையடுத்து, கமல் மார்க்சிஸ்ட்டில் சேரப் போகிறார் என்று தகவல் வெளியாகியது. ஆனால், அதை கமல் மறுத்துவிட்டார். தொடர்ந்து கட்சி ஆரம்பிப்பது குறித்துச் சிந்தித்து வருவதாகவும் தனியார் இணையதளத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. அதன்படி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்டம்பர் 21) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் மகள் அக்ஷராஹாசன், கெஜ்ரிவாலை வரவேற்றார். பின்னர் ஆழ்வார்பேட்டை யிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தில் அவரை சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்…
Read More
நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவதால் மீடியாக்கள் மூலம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கிளப்பப்படு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி  யான தந்தி டிவிக்கு  அவர் அளித்த பேட்டியில் , “நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக் கூடாது என்பதால் அதை சுட்டிக் காட்டுகிறேன்.னது கருத்து அரசியல் தொடர்பானது, அதிமுக பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும் என்றார். மேலும்  அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:-  கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:-…
Read More
’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! –  அக்‌ஷராஹாசன் விளக்கம்!

’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! – அக்‌ஷராஹாசன் விளக்கம்!

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக அவர் அளித்த பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு, "கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன்” என்றார்.  மேலும் அவர், “என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்விய லோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்'' என்றார். இதையடுத்து அக்‌ஷரா ஹாசன் பெளத்த மதத்தை தழுவி விட்டார் என்று செய்திகள் பரவின. உடனே கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹாய் அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? நீ மாறியிருந்தா லும் எனக்கு உன்னைப் பிடிக்கும். அன்பு மதம்…
Read More
ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.அதில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்…
Read More
நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வணக்கம், இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராத வர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி தான். நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி…
Read More
சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும் போது, முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியின் உரிமையா ளர்கள் என்னைத் தேர்வுசெய்தி ருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார். மேலும் கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தமிழ் தலைவாஸ் அணி, புரோ கபடி லீக் தொடரில் முதல்…
Read More
என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

கமல்ஹாசன் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சபாஷ் நாயுடு வெளிவராது என்று செய்திகள் வெளியாவதை கமல் தரப்பு மறுத்து உள்ளது. .   முன்னதாக இந்த சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு…
Read More
பிக் பாஸ் பார்க்கலை! – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்!

பிக் பாஸ் பார்க்கலை! – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது…”ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்காகவே படித்து இசை துறையில் "உன்னை போல் ஒருவன்" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானேன் ஆனால் காலச்சூழ்நிலை என்னை நடிகை ஆக்கிவிட்டது. அப்பா இதுவரை எனக்கு எந்த சிபாரிசும் யாரிடமும் செய்தது இல்லை. நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு. விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்பா சாதித்து காட்டியுள்ளார். நான் இதுவரை அப்படி எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. படம் இயக்கம் எண்ணம் தற்போது இல்லை ஏனென்றால் இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தவறவிடமாட்டேன். அதுமட்டுமல்லாமல் நான்…
Read More