எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் விவரித்த போது ,” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும்.…
Read More
இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை. என்னுடைய பெயரை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்திவர்கள் மீதே புகார் அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். ஆர் .ஜே. மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இங்கிலிஷ் படம். புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த  'இங்கிலிஷ் படம்' இயக்குநர் மீது ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது, அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், அது குறித்து தனது விளக்கத்தைக் கடிதமாக வெளியிட்டுள்ளார். "இங்கிலிஷ் படம்…
Read More
பலூன் படத்தில் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியை இமிடேட் செய்யும் ஜனனி ஐயர்!

பலூன் படத்தில் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியை இமிடேட் செய்யும் ஜனனி ஐயர்!

ஒரு குறிப்பிட்ட கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால் அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் - அஞ்சலி இணையாக நடிக்கும் "பலூன்".புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் "பலூன்" படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். "என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பின்னணியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏது ,…
Read More
என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

பிரபல பத்திரிகை ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப் பிடித்த 70 படங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் தான் எழுதி, நடித்த 'மகாநதி' படத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதல்முறையாக, அந்தக் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளர். அதில், "எது என்னை 'மகாநதி' எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை சொன்னதில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இப்போது சொல்கிறேன். எனது வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டம் போட்டிருந்தார்கள். ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தது. ஆனால் எதேச்சையாக அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு கோபம் வந்தது, பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்தது.…
Read More
ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகி யுள்ள படம் தான் 'களத்தூர் கிராமம்' . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர 'தகராறு  'சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர​, ​​ஜினி மகா தேவ​ய்​யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை என்ன? இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவ மதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள் .…
Read More