சியான்கள் – வரும் டிசம்பர் 25ல் ரிலீஸ்!

சியான்கள் – வரும் டிசம்பர் 25ல் ரிலீஸ்!

சியான்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது! தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு. அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்‌. இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. https://www.youtube.com/watch?v=qqZf5xqjzIQ&feature=youtu.be
Read More
குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் ” தகவி”. படத்தில் கல கலப்பு

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் ” தகவி”. படத்தில் கல கலப்பு

ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் " த க வி". "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ..... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் " நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்." என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார்…
Read More
பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா? இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. கவலையால் தோன்றும் நோய்கள் நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும் பலத்தை இழக்கச் செய்யும் பலவகை ஏக்கங்களை உண்டாக்கும் மூளைக்கோளாறு இரத்த அழுத்தம் இருதய நோய் மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல்…
Read More
சம்சாரம் அது மின்சாரம்  2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

சம்சாரம் அது மின்சாரம் 2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

'சம்சாரம் அது மின்சாரம் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986 ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.விசு மறைவுக்கு முன்பு 'சம்சாரம் அது மின்சாரம் 2' படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தார். ஆனால், அதற்கான தயாரிப்பாளர் இன்னும் அமையவில்லை என்று 'கூட தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய மறைவுக்குப் பிறகு, 'சம்சாரம் அது மின்சாரம் 2' உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விசு…
Read More
தமிழில் வெளியான முதல் திரைப்படம் காளிதாஸ்! – எக்ஸ்க்ளூசிவ் By கட்டிங் கண்ணையா!

தமிழில் வெளியான முதல் திரைப்படம் காளிதாஸ்! – எக்ஸ்க்ளூசிவ் By கட்டிங் கண்ணையா!

1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது சம்ஸ்கிருத கவிஞர் காளிதாசாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் முக்கிய வேடத்திலும், டி.பி.ராஜலக்ஷ்மி முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், டி.சுஷீலா தேவி, ஜே.சுஷீலா மற்றும் எம்.எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது. அதுவரை ஊமைப்படம் என்று சொல்லப்பட்ட மவுனப்படங்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் பேசும் பாத்திரங்களைக் கண்டதுமே, படத்திலிருந்த சிறுசிறு குறைகளையும் தாண்டி கொண்டாடித் தள்ளிவிட்டார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) தயாரித்த…
Read More
அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

பத்திரிகையாளர் MP ஆபிரகாம் லிங்கன் இயக்கி பிக் பிரிண்ட் கார்த்தி தயாரித்த தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான "பசும்பொன் தேவர் வரலாறு" டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா நாளை வெளியிடுகிறார். இது குறித்து பிக் பிரிண்ட் கார்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும்…
Read More
விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஆனால் ஈழ தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழ்ச்சியைக் கண்ட முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் (அக்டோபர் 19) முத்தையா முரளிதரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு…
Read More
என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையின் விளையாட்டு சாதனை வரலாற்றை படமாக 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், ராஜபக்சேவின் இன்னொரு முகம் எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடங்கி ஏகப்பட்ட விஐபி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்க அறிக்கையில், "இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய…
Read More
மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர் களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி…
Read More
நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் S.R.பிரபாகரன், தற்போது ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஒரு புதிய படத்தைத் படத்தை தயாரித்து அதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்த ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். மேலும் நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகுகிறார்கள். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - S.R.பிரபாகரன். தயாரிப்பு நிறுவனம் - பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ். ஒளிப்பதிவு - கணேஷ்…
Read More