பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2". இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் "நந்தினி" எனும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகின்றன. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…
Read More
சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!

சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!

மணிரத்னம் டைரக்ஷனில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இச்சூழலில் இந்தப் படத்தின் வெற்றியால் நடிகர் ஜெயம் ரவி தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திப்புட்டார் இந்தப் படத்தின் வெற்றியால் படம் வெளியாவதற்கு முன்பே ஜெயம் ரவியின் படம் ப்ரீ பிசினஸாக 70 கோடி வரை செல்கிறது எனவும் இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய ஜெயம் ரவி இனிவரும் படங்களில் இதை அதிகரிசுப்புட்டார். இவரது நடிப்பில் அடுத்து ’இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, கைவிட்டார்கள். அதனை கையில் எடுத்து இந்த படத்தை…
Read More
‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

'லைகா' சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும்…
Read More
‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்

‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்

  ‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள் “பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவினருடன் சென்னையில் பார்வையிட்டார். படத்தைப் பார்த்தபின் அவர் பேசுகையில்,“ ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக…
Read More
பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம் இயக்கம் - மணிரத்னம் நடிகர்கள் - விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஷ்வர்யா ராய், திரிஷா பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வரலாற்றிலும் வாழ்விலும் இரண்டறக் கலந்த ஒரு புதினம். பலர் படமாக்க நினைத்து கைவிடப்பட்ட நிலையில் பெரிய நடிகர் பட்டாளத்துடன் நினைத்து பார்க்க முடியாத பிரமாண்டத்தில் அதை கண்முன் கொண்டு வர முயன்றிருக்கிறார் மணிரத்னம் புத்தகம் படித்தர்வர்களின் முழு கற்பனையை நெருங்கா விட்டாலும் இப்படம் தமிழின் மிக முக்கிய படமாக ஒரு அற்புத திரை அனுபவமாக மிளிர்கிறது. நாவல்ல இருக்க கதாபாத்திரங்ளுக்கு கச்சிதமான நடிகர்கள் ஆதித்த கரிகாலனா விக்ரம் மிரட்டியிருக்கிறார் அவரின் ஓபனிங் போர்க்காட்சி புத்தகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் அதை பிரமாண்டமாக காட்டி தன் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம் இடைவேளை காட்சியில் விக்ரம் நடிப்பு பட்டாசு. வல்லவரையன் சேட்டை பிடித்தவனாக குறும்புக்காரனாக நாயகனாக கார்த்தி இனிமேல் எல்லார் மனதிலும் இருப்பார். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி,…
Read More
நடிகர் ரஹ்மான் ரொம்ப பிசி!

நடிகர் ரஹ்மான் ரொம்ப பிசி!

ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். . புத்தாண்டு ரஹ்மானை பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும் . இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்த படமான ' ஜன கன மன ', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் ,தெலுங்கு பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ' சமரா ' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைகிறது…
Read More
மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இறுதியாக ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே அடுத்த மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்கள். நடிகர்களாக நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இப்படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய்  சேதுபதி கவுரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னரே மன்மதன் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கின்றனர். ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு…
Read More
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி?

படு கேஷூவலாக பல்வேறு ரோக்லளில் நடிக்க ஆரம்பித்து தர்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று கடந்த ஆண்டு 6 படங்களை வெளியிட்டு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மார்ச் மாதம் வெளியான 'கவண்' ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாதாவாக அவர் நடித்த 'விக்ரம் வேதா' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும் தற்போது கருப்பன், அநீதி கதைகள், 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், புரியாத புதிர் ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,…
Read More