23
Mar
சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது. அதாவது நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இவரின் காதலி ஒரு நியூஸ் ரீடர் (ரம்யா நம்பீசன்) வற்புறுத்தலின் பேரில் ஒரு எக்ஸ்குளூசிவ் இண்டர்வியூ எடுக்க வரும் லேடி நிருபர், பஸ் ஸ்டாண்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது…
