அக்னி தேவி – விமர்சனம்!

அக்னி தேவி – விமர்சனம்!

சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது. அதாவது நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இவரின் காதலி ஒரு நியூஸ் ரீடர் (ரம்யா நம்பீசன்) வற்புறுத்தலின் பேரில் ஒரு எக்ஸ்குளூசிவ் இண்டர்வியூ எடுக்க வரும் லேடி நிருபர், பஸ் ஸ்டாண்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது…
Read More
ஜூலைகாற்றில் விமர்சனம்!

ஜூலைகாற்றில் விமர்சனம்!

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஓர் அர்த்தம் உள்ளது. அதன் விளைவால் இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கி இருக்கிறார். “நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். “நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் ,…
Read More
நெடுநல் வாடை விமர்சனம்!

நெடுநல் வாடை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமின்றி தலைப்புக்கும் பஞ்சம் வந்து ரொம்ப நாளாகிறது. அதனால் தான் முன்னொருக் காலத்தில் ஹிட் அடித்த படங்களின் பெயரை மறுபடியும் உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புது முயற்சியாக தூய தமிழில் அதுவும் பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை என்னும் தலைபில் ஒரு படம் வந்துள்ளது. அதுவும் நெல்லையின் மண் மனம், மணம், குணம், நிறம், காரம், இனிப்பு, புளிப்பு என்ற பல்வேறு சுவைகளை கொஞ்சம் கூட மா(ற்)றாமல் ஒரு சினிமாவாகக் கொடுத்துள்ளார்கள். படத்துக்குள் நுழைவதற்கு முன் சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த நெடுநல் வாடை-யைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார். இப்பாடலானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுவதாக உள்ளது. அதில் கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்ற தலைவனை எதிர்பார்த்து அவன் வராததால் தனிமைத் துயரில் தவிக்கும் தலைவி யின் காதலை அழகுபட எடுத்துரைக்கிறார். அவளுக்கு…
Read More
பூமராங் – திரைப்பட விமர்சனம்!

பூமராங் – திரைப்பட விமர்சனம்!

சினிமாக்களில் எக்கச்சக்கமான வெரைட்டி உண்டு.. அந்த கால படங்களை விடுங்கள்.., இன்றைய சூழ்நிலையில் காதல் படம், குடும்பப் படம், பேய் படம்,சிரிப்புப் படம், அடல்ட் படம், யூத் படம் என்ற வரிசையில் யூஸ்ஃபுல் மெசெஜ் சொல்லும் சினிமா என்றொரு வகை உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத் தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் படத்தைப் பாருங்கள்.  உண்மைதான் இன்னொரு உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ள தண்ணீர் பிரச்னைக் குறித்து இன்றைய இளைஞர் களும் ரசிக்கும் விதத்தில் படமாகி இருக்கிறது பூமராங். அதாவது நாட்டில் ஆங்காங்கே உள்ள நதிகளை இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக ஏட்டளவில் (இணைய அளவில் என்றும் கொள்ளலாம்) அலசப்பட்டும் விஷயம்தான், ஆனால் இந்த நதி நீர் இணைப்பிற்காக அரசாங்கம் கொஞ்சம் கூடஎதுவும் செய்ததில்லை. மக்கள் நலனுக்கான…
Read More
90 ML மூவி ரிவியூ!

90 ML மூவி ரிவியூ!

ஆச்சரியமாக இருக்கிறது.. கொஞ்சம் ஆயாசமாகவும் இருக்கிறது.. நாட்டில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்து விடுமோ என்றொருப் பக்கம் பதட்டமான சூழல்., கூடவே விரைவில் வந்து விடும் என்று நம்பப்படுகிற பார்லிமெண்ட் தேர்தலில் யார் யாரோடு கூட்டணி என்பதை கவனிக்க வேண்டிய தொழில்.. இதையெல்லாம் தாண்டி இன்றைய பிழைப்புக்காக இந்த வாரம் ரிலீஸான  90 எம்.எல். சினிமா எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து எழுத வேண்டிய சூழ்நிலையை நினைத்தால் வேதனை மற்றும் வெட்கத்தையும் தாண்டி கடமையுணர்வை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் தோன்றுகிறது. இந்த மேற்கண்ட பேராவை எழுத வேண்டிய சூழலை விவரிக்கும் முன்னர் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி .. அது கூட என்னிடம் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கேட்ட கேள்வி. அதாவது நான் ஜூ.வி. என்னும் வார இதழில் இணைந் திருந்த போது ஃபுளூ பிலிம் குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் எழுத (இது 1987 என்பதை நினைவு…
Read More
சேரனின் திருமணம் – விமர்சனம்!

சேரனின் திருமணம் – விமர்சனம்!

நம்மில் எல்லோர் இல்ல திருமணங்களில் வண்ணமும், வாசமும் நிறைந்திருக்கும். பல்வேறு சடங்குகளுக்கும் குறைவிருக்காது. மணமக்கள் மகிழ்ச்சியாக நீடுழி வாழ வேண்டும் என்பதே அதற்கு அடிப்படை. இதையொட்டி சில திருமண நிகழ்வுகள் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அத்தனை பேருக்கும் அறு சுவை விருந்து. அதற்கான செலவைச் சத்தமாகச் சொல்லி விட முடியாது. இந்த ஒற்றைத் திருமணத்திற்காக, வாழ் நாள் சேமிப்பைச் செலவிடத் தயங்குவதில்லை பாசமிக்க தந்தையர் பலர். அண்மையில் சினிமா பிரபலம் ஒருவரின் மகளுக்கு இரண்டாம் திருமணம். செலவு எவ்வளவு தெரியுமா? அது சரி.. அது எதற்கு இப்போது? ஆனால் இந்த போக்கால் கவரப்பட்டு அவரது ரசிகர் ஒருவர் தன் மகளுக்கு கடன் வாங்கி இதே பாணியில் மேரேஜ் நடத்த ஆசைப் பட்டு அதற்கு வழியில்லாததால் சூசைட் செய்து கொண்டார் என்றொரு செய்தி சென்னை நாளிதழ்களில் இடம் பெற வில்லை என்பதுதான் சோகம். பெரும்பாலும் இந்த திருமண கோலாகல…
Read More
ஒரு அடார் லவ் – விமர்சனம்!

ஒரு அடார் லவ் – விமர்சனம்!

மனிதர்கள் அது ஆணோ, பெண்ணோ.. ஒவ்வொருவருக்குள்ளும் பூக்கும் ஓர் மென்மையான உணர்வே காதல். இது இனிமை யானது, இளமையானது, அழகானது, ஆழமானது, மென்மை யானது, ஆனாலும் இந்த காதல் பல தரப்பிலும் பல வயதிலும் பல்வேறு காரணங்களால் வருவது இயல்பே. அந்த வகையில், பள்ளிப் பருவக் காதல் பலருக்கும் வந்த உணர்வு. அதை ‘இன்பாச்சு வேஷன்’ என்னும் ‘இனக் கவர்ச்சி’ என்றெல்லாம் மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டாலும் அந்த வயசில் வருவதை யாராலும் தடுக்கவும் முடியாது., மறைக்க அல்லது மறுக்கவும் முடியாது. அப்படியான ஒரு அடல்ட் லவ் ஸ்டோரி தான் -ஒரு அடார் லவ் படம். ஒரு பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் வந்து சேருகிறார் பிரியா வாரியர். வந்த அந்த புது கேர்ளை பார்த்தவுடன் ரோஷனுக்கு காதல் மயக்கம் வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க…
Read More
தேவ் – திரை விமர்சனம்!

தேவ் – திரை விமர்சனம்!

காதல் என்பது ஆழமானது, தெய்வீகமானது.,கண்டவுடன் வருவதே காதல்.,அந்த காதலுக்கு கண் கள் கூட கிடையாது என்றெல்லாம் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர்களை பார்த்தி ருக்கிறோம். ஆனால் மேற்கண்ட விஷயத்தை லாஜிக், கதை, திரைக்கதை அல்லது ஈர்ப்பு எதுவுமே இல்லாமல் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சினிமாவாகவே எடுத்துக் காட்டி நம்ப வைத்திருக்கிறார்கள். ஆம். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்  டைரக்‌ஷனில்  கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம்தான் அது. விட்டேத்தியாக பொழுது போக்கிக் கொண்டு  ஹாபி, என்ஜாய்,  காதல் &  இசை, அது , இது என்று  எதையதையோ பேசித் திரிவதை விரும்பும் இன்றைய சில இளைஞர்களின் கனவுப் படம்தான் இந்த தேவ்.  அதாவது அட்வெஞ்சர் (என்ற சொல்லை மட்டும்) விரும்பும் ஹீரோ கார்த்தி. இவர் எங்கே போனாலும் தனது நண்பர்களான விக்னேஷ் காந்த் மற்றும் அம்ருதாவை கூடவே கூட்டிச் செல்கிறார். கார்த்தியின்…
Read More
சித்திரம் பேசுதடி 2 – திரை விமர்சனம்!

சித்திரம் பேசுதடி 2 – திரை விமர்சனம்!

சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான ‘முரண்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். அடுத்ததாக விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு முன்னதாக  ‘உலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விளம்பரப்படுத்து வதற்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவை வைத்து வீடியோ பாடல் ஒன்றும் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை முடித்தும் ஆண்டுக் கணக்கில் வெளியிட சூழ்நிலை சரியாக அமையாத நிலையில், தற்போது படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர். ‘உலா’ என்ற தலைப்பை கடாசி விட்டு, ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற டைட்டிலுடன் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் . 48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இதன் கதைக்களம். 2006 ஆம் ஆண்டு வெளியான…
Read More
தில்லுக்கு துட்டு 2 ரிவியூ!

தில்லுக்கு துட்டு 2 ரிவியூ!

சினிமா எடுப்பதே கஷ்டம் என்பதும் அதை ரிலீஸ் செய்வது அதை விட கஷ்டம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சினிமாவை சிரிப்பு படமாக எடுப்பது மிகக் கஷ்டம் அதை விட பேய் படம் எடுப்பது கஷ்டமோ கஷ்டம் என்பார்கள். இதற்குக் காரணம் எவ்வளவோ உண்டு.. அதையெல் லாம் இப்போது அலச வேண்டாம். ஆனால் கொஞ்ச காலமாக திரைக்கே வராமல் இருந்த சந்தானம் ஒரு பேய் படத்தை அதையும் சிரிப்புப் படமாக எடுத்து இரட்டை மாங்காய் விழ வைத்து ரசிக்கவும் வைத்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட். இந்த படத்தில் வழக்கம் போல் லாஜிக் ஐல்லை, அது சரி இல்லை இது தப்பு என்றெல்லாம் சொல்லும் விமர்சனங் களை ஓரங்கட்டி வைத்து விட்டு தியேட்டருக்கு போய் தில்லுக்கு துட்டு 2’ படத்தை பார்த்தால் குடுத்த காசு ஜீரணமாகி விடும் என்பது மட்டும் நிஜம். 2016ம் வருஷம் வெளியான ‘தில்லுக்கு துட்டு ‘ படம் ரசிகர்களுக்கு…
Read More