மழையில் நனைகிறேன் – திரை விமர்சனம் !!

மழையில் நனைகிறேன் – திரை விமர்சனம் !!

இயக்கம் : T. சுரேஷ் குமார் தயாரிப்பு : ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் நடிகர்கள் : அன்சன் பால், ரெபா மோனிகா ஜான்,  'சங்கர் குரு' ராஜா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஸ், கிஷோர் ராஜ்குமார், வெற்றி வேல் ராஜா மற்றும் பலர். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் கதைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தது ஆனால் இப்போது இரத்தம் தெறிக்கும் கதைகளே அதிகம். அந்த வகையில் இளைப்பாறும் வகையில் வந்திருக்கிறது மழையில் நனைகிறேன் திரைப்படம். தமிழ் அடித்துதுவைக்கப்பட்ட கதை, ஆனால் அதை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்களா ? வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத இளைஞனாக ஊதாரியாக இருக்கும் ஜீவா செபாஸ்டியன் ( அன்சன் பால்) எனும் கதையின் நாயகன்-  அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வியை கற்று, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையை சொகுசாக வாழ வேண்டும் என லட்சிய வேட்கையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ( ரெபா மோனிகா ஜான்) எனும் இளம்பெண்ணை சந்திக்கிறார்.…
Read More
ஒழுக்கம் எத்தனை முக்கியம் – ராஜாகிளி  படம் பேசும் அரசியல் !!

ஒழுக்கம் எத்தனை முக்கியம் – ராஜாகிளி படம் பேசும் அரசியல் !!

தம்பி ராமையா கதை, வசனம் எழுதி இசையமைக்க அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? சமூகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள், சிறு சபலத்தால் எத்தனை கீழே போய் விடுகிறார்கள், உலகம் அவர்கள் வீழ்ச்சியை எப்படி ரசிக்கிறது என்பதை சொல்லி, வாழ்வின் ஒழுக்கத்தின் அவசியத்தை பேசியிருக்கும் படம் தான் ராஜாகிளி. தமிழகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொழிலதிபரின் கொலை வழக்கை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உண்மை சம்பவத்தை அப்படியே எடுக்காமல் படத்திற்கான மசாலா சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதை ஆக்கியதில், தம்பி ராமையா ஜெயித்து விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக் கொள்ளும் ஆஸ்ரமம் நடத்தும் சமுத்திரகனி, ரோட்டில் பிச்சைக்காரனாக மனநலம் குன்றி, அலையும் தம்பி ராமையாவை அழைத்து வருகிறார். தம்பி ராமையா ஒரு காலத்தில்…
Read More
கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

இயக்கியவர்: விஜய் கார்த்திகேயா நடிகர்கள்: சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோஹிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு இசை: பி அஜனீஷ் லோக்நாத் தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு, கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்தில் தயாரித்திருக்கும் திரைப்படம். இப்படத்தை அறிமுக் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார். இது முழுமையான ஹீரோ ஆக்சன் மசாலா படம் ஆனால் முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஆக்சன் படத்தில், இயக்குநர் புத்திசாலித்தனமான திரைக்கதையை மட்டும் புகுத்திவிட்டால், அது பார்ப்பவர்களுக்கு ட்ரீட் தான். அதை மிக அட்டகாசமாக இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளது படக்குழு. கதை நாயகனை வைத்து, மொன்னையான காட்சிகளின் மாஸ் காட்டாமல், கதையில் வரும் டிவிஸ்ட்டை வைத்து, புத்திசாலியான திரைக்கதை அமைத்தால் அது தான் பக்கா மாஸ். கிட்டதட்ட ஒரே இரவில் நடக்கும்…
Read More
மனிதனுக்கு நேர்மை எத்தனை முக்கியம் – திரு மாணிக்கம் விமர்சனம்!!

மனிதனுக்கு நேர்மை எத்தனை முக்கியம் – திரு மாணிக்கம் விமர்சனம்!!

தயாரிப்பு : ஜி பி ஆர் கே சினிமாஸ் நடிகர்கள் : சமுத்திரக்கனி, அனன்யா , பாரதிராஜா , கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, வடிவுக்கரசி, ஸ்ரீமன், சுலீல் குமார் மற்றும் பலர். இயக்கம் : நந்தா பெரியசாமி இந்தக்கால கட்டத்தில் மனிதனின் நேர்மை என்பது எத்தனை கேலிக்குறியதாகி விட்டது என்பதை பலமாக பேசியிருக்கும் படம் திரு மாணிக்கம். சமுத்திரக்கனி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். குடும்ப பிரச்சனை, கடன் சுமை என பல பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. லாட்டரி சீட்டு விற்பனை செய்வதுதான் இவருடைய தொழில். ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். அவரிடம் பணம் இல்லாததால் அவரது சீட்டை எடுத்து வைக்க சொல்லிச் செல்கிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது. பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார். ஆனால் மனைவி…
Read More
சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

இயக்கம்: ஷ்யாம்-பிரவீன் நடிகர்கள்: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் இசை: கவாஸ்கர் அவினாஷ் தயாரிப்பு: சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தமிழின் முன்னனி நடிகராக வலம் வரும் சரத்குமார் மீண்டும் நாயகன் வேடமேற்று நடித்திருக்கும் படம், அதுவும் இது அவரது 150 வது படம். மெமரீஸ், க் படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் கூட்டணி மிஈண்டும் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் படம் இது சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அவரது உயரததிகாரி அந்த கொலையாளியை கொலை செய்து விட்டு காணாமல் போகிறார். சில வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தொடர் கொலைகள் அதே பாணியில் நடைபெற ஆரம்பிக்கிறது. கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு…
Read More
அரசை ஆளும் தகுதி என்ன ? முஃபாசா தி லயன் கிங் விமர்சனம் !!

அரசை ஆளும் தகுதி என்ன ? முஃபாசா தி லயன் கிங் விமர்சனம் !!

டிஸ்னி தயாரிப்பில் தி லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக அப்படத்தின் முன் கதையாக வந்துள்ள படம் தான் முஃபாசா தி லயன் கிங். ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசை ஆளலாமா ? என்பது தான் இப்படத்தின் அடிநாதம். தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா ஒரு பெரும் துயரால், அவன் மண்ணை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது. நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி. இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை…
Read More
விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ளது விடுதலை 2 திரைப்படம். விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து துவங்கி அப்படியே ஆரம்பித்து வாத்தியாரின் வாழ்க்கை கதையை சொல்கிறது விடுதலை 2. வாத்தியார் கைதுக்கு பிறகு காவலதிகாரி, கலக்டர், அமைச்சர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அந்த கைதை எப்படி அறிவிக்கலாம் என விவாதிக்கிறார்கள். கைது விவரம் வெளியில் பரவ அதை தடுக்க நினைத்து, வாத்தியார் விஜய் சேதுபதியை, காட்டுக்குள் சிறு குழுவை வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள், ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன?…
Read More
தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ?

தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ?

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் சென்னைக்கு பல முகங்கள் உண்டு பல கதைகளும் உண்டு ஆனால் வட சென்னை பற்றி எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இதுவரை தென் சென்னை பற்றி யாரும் படமெடுக்கவில்லை. அந்தக்குறையை போக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது? சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் ஒரு ஹோட்டலை உருவக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும்…
Read More
கிராமியக்கலையை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் ”டப்பாங்குத்து” !!

கிராமியக்கலையை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் ”டப்பாங்குத்து” !!

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, S ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்து வீரா இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் ''டப்பாங்குத்து''. தமிழகம் மறந்து விட்ட தெருக்கூத்து கலையை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் இது. தமிழகத்துக்கென பல கலைகள் இருந்தது ஏன் சினிமா பிறந்ததே நாடகக்கலையில் இருந்து தான், ஆனால் அந்த நாடகமே தெருக்கூத்தில் இருந்து தான் பிறந்தது தான். நம் நவீன வாழ்வியல் காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும், இந்த தெருக்கூத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது இந்த படைப்பு. மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட…
Read More
தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

சொர்க்கவாசல் இன்று முதல் திரையரங்குகளில் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இது தான் படத்தின் மையம். அப்பாவி ஒருவன் அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டால் என்னாகும்? என்பது தான் ஒன் லைன். உண்மை சம்பவங்களை டீடெயிலான திரைக்கதையாக்கி, அட்டகாசமான படமாகத் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஆனால் தமிழில் அது பெரிதாக நடந்ததே இல்லை. இங்கு உண்மையைச் சொன்னால், பிரச்சனை வந்து விடும். மூலைக்கு மூலை நியாயவான்கள் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அசுர உழைப்புடன் பக்கா டீடெயிலுடன், ஒரு அருமையான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள் சொர்க்கவாசல் படக்குழுவினர். டிரெய்லர் பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்தீர்களானால், படத்தை கண்டிப்பாக பார்த்து விடுங்கள் படம் உங்களை ஏமாற்றாது. ஜெயிக் கலவரம் ஒரு கேயாஸ்! அதைச்சுற்றி கதை எழுதும்போது, எக்கசக்க கேரக்டர் இருக்கும், அதை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுவது, இன்னும் கஷ்டம், இதில் விசாரணை வழியே அந்த கலவரத்தின் பின்னணியை அலசுவதாக திரைக்கதையை…
Read More