‘ACKO போல வருமா’  விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது

‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது

முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ்  விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த விளம்பரத் திரைப்படங்களைப் பிரபல தமிழ் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் பிரபல தமிழ் நடிகரான யோகி பாபு மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்  பால் டப்பா ஆகியோர் அப்பா-மகன் ஜோடியாக நடித்துள்ளனர்.   சென்னை முழுவதும் 500,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், ACKO சந்தையில் ஒரு பாராட்டத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் புதிய தலைமுறை  காப்பீட்டுத் தீர்வுகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது.  காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதே, இந்த விளம்பர பிரச்சாரத்தின் நோக்கமாகும். நகைச்சுவை கலந்து, நம் வாழ்வியல் அம்சங்களை மையப்படுத்தி, நம் நண்பர்களைக்…
Read More
மழையில் அலைந்து திரியும் சினிமா பத்திரிக்கையாளனின் மனக்குமுறல்! – From The Dsek of ✍️கட்டிங் கண்ணையா!

மழையில் அலைந்து திரியும் சினிமா பத்திரிக்கையாளனின் மனக்குமுறல்! – From The Dsek of ✍️கட்டிங் கண்ணையா!

கோலிவுட் பீஃல்டில் உலா வரும் பத்திரிக்கையாளர் பற்றி இந்த சினிமா பீ ஆர் ஓ பெரிசுகளுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா ? அவர்களுக்கு என்று சங்கம் ஒன்று எதற்கு இருக்கிறது எப்படி, எப்போது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருகிறார்கள் ! தொடர்ந்து நாலு நாட்கள் எந்த நிகழ்ச்சியும் வைப்பதில்லை. நிகழ்ச்சி வைத்தால் ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகள் .. இதில் எதைப்பற்றி அவர்கள் ரிப்போர்ட் செய்வது?கேட்டால் புரொடியூசர் சொல்வதைத்தானே கேட்க முடியும் என்ற பதில் வருகிறது. இப்போதெல்லாம் 100க்கும் அதிகமான YouTube ல் உடனுக்குடன் நிகழ்ச்சியை போட்டு விடுகிறார்களே அது போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள். அவர்களையும் ஒரு மனிதர்களாக மதிப்பதே இல்லை. உண்மையில் நீங்கள் சினிமா மீடியத்தில்தான் இருக்கிறீர்களா ? சக மனிதனை ஒரு மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளவே மாட்டீர்களா? ஒரு விஷயத்தில் உண்மையை சொல்ல முடியுமா? உங்களால் உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளை செலவிட திட்டமிட முடியுமா?..…
Read More
வள்ளலார் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் மஹாவிஷ்ணு

வள்ளலார் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் மஹாவிஷ்ணு

தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்! தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் சமூகத் தொண்டு நிறுவனத்தை குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் நடத்தி வருகிறார்.தனது இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஏராளமான அறப்பணிகளைச் செய்து வருகிறார். தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை எளிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி, அரசுப் பள்ளி கட்டடங்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் போன்ற சேவைகளை இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து குருஜி மஹாவிஷ்ணு, பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக்கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் அவர்கள் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு…
Read More
கமல்ஹாசன் தலைமையில் அப்துல் ஹமீது  புத்தகம் வெளியீடு

கமல்ஹாசன் தலைமையில் அப்துல் ஹமீது புத்தகம் வெளியீடு

வானலையில் ஒரு வழிபோக்கன் என்ற தலைப்பில் சிலோன் வானொலியின் பி.எச்.அப்துல் ஹமீது எழுதிய புத்தகம் வெளியிடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.  இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக்ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது உடனான நீண்ட கால தொடர்பை அவர் நினைவு கூர்ந்தார். பி. சுசீலா பேசும் போது, ஒரு ஒலிபரப்பாளர் பலராலும் பாராட்டப்படுவது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்பின் ஆழத்தை பாராட்டிய அவர், தானும் ஒரு தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட போதிலும் , தமிழ்ப் பாடல்களை ஒழுங்காகவும், கச்சிதமாகவும் பாடியதாகக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது தனது நன்றி உரையில், ஒலிபரப்பாளராகவும், நடிகராகவும் மற்றும்…
Read More
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.
Read More
நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் !  ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் ! ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா 83 பட ஷீட்டிங்கில் கலந்து கொண்ட போது, சிகரெட் பிடித்தே மொத்த ஹோட்டலையும் அலாரமடிக்க வைத்து காலி செய்திருக்கிறார். 1983 கிரிக்கெட் உலககோப்பையை வென்ற தருணத்தை மையமாக வைத்து உருவான பாலிவுட் படத்தில் நடிகர் ஜீவா ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் அனைத்து மொழிகளிலும் பெரு வெற்றி பெற்றிருக்கிறது இந்தப்படத்தின் ஷூட்டிங்கின் போது லண்டனில் ஒரு ஹோட்டலி படக்குழு தங்கியுள்ளது. அங்கே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை குறித்து நடிகர் ஜீவாவே இரு பேட்டியில் கூறியதாவது… 83 பட ஷீட்டிங்கில் பண்ண கலாட்டா எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகா தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட…
Read More
கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

சமீபத்த்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்த ‘ஏ சாமி’ பாடல் கேரள கோவிலில் நாதஸ்வர கலைஞர்களாக வாசிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையே திரும்பி பார்க்கும், பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது. கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகளில் கூட்டத்தை வரவைத்ததோடு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் இந்தியா முழுதும் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மிக முக்கியமாக இருந்தது குறிப்பிடதக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆனது குறிப்பிடதக்கது.…
Read More
சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

  24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - 24 HRS புரொடக்‌ஷன்ஸ் எழுத்து இயக்கம் - K.திருஞானம் ஒளிப்பதிவு -…
Read More
20 வருடங்களை கடந்த அழகி திரைப்படம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நடிகை நந்திதாஸ் !

20 வருடங்களை கடந்த அழகி திரைப்படம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நடிகை நந்திதாஸ் !

தமிழ் சினிமா வரலாற்றில் பொன் மகுடமாக திகழும் ‘அழகி’ படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டி பார்க்கும் டைரியை போன்று, பள்ளிக்கால காதல், வாழ்வின் மீதேற்படுத்தும் தாக்கத்தை அழகான காவியமாக சொன்ன படம் அழகி. இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதாஸ், தேவயானி நடித்த இப்படம் தமிழகத்தில் வெள்ளி விழா கொண்டாடியது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்தின் ரசிகர்கள் உட்பட பலரும், படம் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை இணையமெங்கும் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து நம் அனைவர் மனதையும் கவர்ந்த நடிகை நந்திதா தாஸ் இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது… எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்பமுடியவில்லை. படத்தின்…
Read More
காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பாடல்

காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பாடல்

காக்கும் காக்கிக்கு வீரவணக்கம், காக்கிற காக்கிக்கு வீர்வணக்கம் ! ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மறறும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் இன்று 21.102021 வெளியாகியுள்ளது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது… “வீரவணக்கம்” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன்…
Read More