நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி!

நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி!

1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் ஐயா ஆர். நல்லகண்ணு. பள்ளி மாணவனாக விளங்கியபோதே ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் உரைகளைக் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தானும் ஒரு உணர்வாளராக உருவெடுத்தார். பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ நூல்களைப் படித்த அச்சிந்தனைக்கு ஆட்பட்டார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்து முடித்து பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பைப் பாதியில் விட்டு விட்டார். 1945 இல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். ஆதிக்கங்களுக்கு எதிராகவும், ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகவும் இளம் வயதிலேயே போராட்டக்களம் இறங்கினார். சுதந்திரத்திற்குப் பின்னர் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். 1949 இல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல…
Read More
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’.!

குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’.!

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி, மீனா சப்ரியா பேசியதாவது, “கோடைகால சிறப்பு வகுப்புகளும் இங்கு நிறைய தொடங்க இருக்கிறோம். ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்றவற்றை குழந்தைகளை எண்டர்டெயின் செய்யும்…
Read More
‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின்…
Read More

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்

வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு “வேல்ஸ் சென்னை கிங்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இருபெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் வேல்ஸ் ஃபிலிம்…
Read More
சத்யபாமா கல்லூரிக்கு வருகை தந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!

சத்யபாமா கல்லூரிக்கு வருகை தந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!

*மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!* இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில், சத்யபாமா அறிவியல்…
Read More
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதியில், சென்னையின் PROVOKE ART FESTIVAL 2025 நடைபெறுகிறது

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதியில், சென்னையின் PROVOKE ART FESTIVAL 2025 நடைபெறுகிறது

சென்னையில் நவம்பர் 1மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் PROVOKE LIFESTYLE வழங்கும் PROVOKE ART FESTIVAL - 2025 மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை தனது கலாசார இதயத்துடிப்பை மேலும் உற்சாகமாக்கவுள்ளது. PROVOKE ART FESTIVAL 2023-ல் துவங்கியதில் இருந்து, பாரதநாட்டியத்தின் உணர்வுமிக்க ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தை வெல்லும் சுவையையும், இந்தியக் கலைகளின் நீங்காத மரபையும் கொண்டாடி வருகிறது. இது இந்தியாவின் வளமான கலை செழுமைக்கு செலுத்தும் மரியாதையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுமையான அணுகுமுறைகளையும் அங்கீகரிக்கிறது..இரு நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பிரபல கலைஞர்களின் மெய்மறக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன: முதல் நாள் (நவம்பர் 1) ருக்மிணி விஜய்குமார் சுபஸ்ரீ தனிகாசலம் ஹரிச்சரன், சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ் மற்றும் பலர். இரண்டாம் நாள் (நவம்பர் 2) ரோஹினி மற்றும் பிரலயன் மற்றும் பிறர் ராஜேஷ் வைத்யா, ரஹுல் வெல்லால்,…
Read More
நெல்லையின் மாண்பு: உழைப்பின் யாகமா? சாதியின் பாரமா?- ‘பைசன் காடன்’ முன்வைக்கும் விவாதம்!

நெல்லையின் மாண்பு: உழைப்பின் யாகமா? சாதியின் பாரமா?- ‘பைசன் காடன்’ முன்வைக்கும் விவாதம்!

தென்பாண்டிச் சீமையின் தலைநகரமான திருநெல்வேலி, வெறும் ஒரு மண் அல்ல; அது தியாகத்தின் தழும்புகளையும், உழைப்பின் வியர்வையையும் சுமந்து நிற்கும் ஓர் உன்னத பூமி. மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. போன்றோர் இந்நாட்டுக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தியாகச் சரித்திரம் ஒருபுறம். சிவ் நாடார், விஜிபி, சரவணா குழுமம், ஏவிடி போன்ற சாம்ராஜ்யங்களை உருவாக்கிய ஆதிக்கம் நிறைந்த உழைப்புச் சரித்திரம் மறுபுறம். இந்த மண், அதன் மக்களை வெறும் "சூத்திரர்கள்" என்று இழித்துரைத்த சமூகப் படிநிலைகளைத் தாண்டி, உழைப்பால் உயர்ந்த ஒரு மாபெரும் வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. உழைப்பே மூலதனம்: நெல்லையின் வெற்றிக்கான சூத்திரம் திருநெல்வேலி மக்களின் வெற்றிக்கான சூத்திரம், உங்கள் தலையங்கத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: தியாகத்தின் வலிமை: பாரதியார், வ.உ.சி. போன்றோர் நாட்டுக்காகத் தங்கள் சுகபோகங்களைத் துறந்தார்கள். அவர்களின் தேசப் பற்று எந்தச் சாதி அடையாளத்தையும் சுமக்கவில்லை. தொழிலின் வித்தகம்: சிவ் நாடார் உலக அளவில் தொழில்நுட்ப…
Read More
கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !

கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும்…
Read More
“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக்கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் !!

“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக்கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் !!

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. இந்த சூப்பர் சிங்கர் போட்டியில், பல பின்னணியிலிருந்து வரும் அற்புதமான பல பாடகர்கள், மக்களின் மனங்களைக் கவர்ந்ததோடு, திரைக்கலைஞர்களையும் கவர்ந்துள்ளனர். இந்த பக்தி சூப்பர் சிங்கரிலிருந்து உதித்த ஒரு நட்சத்திரமாக இளம் திறமையாளரான அபிராமி ஜொலித்து…
Read More
’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் பாதி விலையில் வீட்டு மனைகள் !!

’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் பாதி விலையில் வீட்டு மனைகள் !!

AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது. ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் தன்னிறைவான சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி…
Read More