ஹேப்பி பர்த் டே சூர்யா!

ஹேப்பி பர்த் டே சூர்யா!

"அவள் வருவாளா" என கைகளை குவித்து காதலியை அழைக்க கூட சரியாக வராது தடுமாறினார் சரவணன் எனும் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் ஒளிப் பதிவாளர் 'கே.வி ஆனந்த்' பேட்டியொன்றில் " சத்தியமாக இந்த பையன் எல்லாம் பணக்கார நடிகர் வீட்டுல பொறந்துட்டு வராத நடிப்பை செய்யறேன்னு வந்துட்டு ஏன் நம் உயிரை வாங்கறானுக...னு தா நினைச்சேன்." என பேசியிருந்தார். சூர்யாவுடன் ஜோடி போட்ட சிம்ரனுக்கும் கிட்டதட்ட (விஐபி லேட் ரிலீஸ்) அது முதல் படம் தான் எனினும் சிம்ரன் தன்னுடைய பெர்பாமன்சில் வெளுத்து வாங்கியது வேறு சூர்யாவை தியேட்டர்களில் கேலி பொருளாக்கி யிருந்தது. மணிரத்னமின் பேனர், உடன் நடித்த விஜயின் மாஸ், அட்டகாசமான பாடல்கள், வசந்தின் ஜனரஞ்சக இயக்கம் அனைத்துமாக இணைந்து படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டன. சூர்யா தமிழகத்துக்கு அறிமுகமாகினார். சிவக்குமாரின் "உள்ளத்தை அள்ளித்தா ஜெய்கணேஷ்" தனமான மிலிட்டரி வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை இது என்பது சூர்யாவின் ஆரம்பகால…
Read More
நெல்லை மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா பிறந்த நாள்!

நெல்லை மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா பிறந்த நாள்!

T.S.பாலையா..one and only...! "அசோகரு நம்ம மகருங்களா?"...என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், "என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானா"?ன்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, வேதாசலம் ஆகட்டும்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட, அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டிவரைஉறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம். அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.. பாலையாவின் நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம்.,’ எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்ம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என…
Read More
முதிய பிரம்மச்சாரி ஆக்டர் எஸ். சூர்யாவுக்கு 56வது ஹேப்பி பர்த் டே💐

முதிய பிரம்மச்சாரி ஆக்டர் எஸ். சூர்யாவுக்கு 56வது ஹேப்பி பர்த் டே💐

டைரக்டராக முதல் இரண்டு படங்களிலேயே அழுத்தமான தடம் பதிச்சு ஹீரோவா நடிக்கத் தொடங்கி முதலில் வெற்றி பிறகு தொடர் தோல்வி ஒரு இடைவெளிக்குப் பிறகு துணை நடிகரா ரீ எண்ட்ரீ . வில்லனாக பதவி உயர்வு. மறுபடிம் நாயகனாக வெற்றிப் படங்கள் என்று ஏற்றம், இறக்கம் மீண்டும் படிப்படியாக முன்னேற்றம் என்று சூர்யாவின் திரைப்பயணம் அவருடைய திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமானது, தன்னுடைய நடிப்புப் பயணம் பற்றிப் பேசும்போது இலக்கை நோக்கிய பயணத்தில் எது கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டுமே தவிர நான் இதைத்தான் செய்வேன் அதைத்தான் செய்வேன் என்று காத்துக்கொண்டிருந்தால் முன்னேறவே முடியாதுன்னு சொன்னார், 1966இல் அப்போதைய நெல்லை டிஸ்டிரிக்கான வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பிறந்தவர். அவரது நிஜப் பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்றபோதிலும் அப்பா ஆடியோ கேசட் கடை வைத்து நடத்திவந்துள்ளார். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை…
Read More
இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.)🥰 அல்லிநகரம் என்றொரு வில்லேஜில் பிறந்து கோலிவுட் சினிமாவின் ஆளுமையாக மாறிய இந்த மாபெரும் கலைஞன், ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்து வருகிறார். ஸ்டூடியோக்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி படையெடுக்க வைத்தவர் பாரதிராஜா தான். இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரின் படங்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றன. ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை…
Read More
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

முன்னொரு காலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்... எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன். இசைக்கு தலையாட்டலாம். ஆனால் அந்த உணர்வை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளமுடியாது என்பதாகவே திரையிசையும் அந்தக் காலத்தில் இருந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டாக இருந்தாலும் அதில், கர்நாடக சங்கீதத்தின் சாரமும் தாக்கமும் நிறைந்திருக்க, பாட்டைக் கேட்டு ரசித்தார்களே தவிர, அதை ராகம் பிசகாமல் சேர்ந்து பாடமுடியாத நிலைதான் இருந்தது. பிறகு அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம்.…
Read More
கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட்டில் ஒரு டைரக்டராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன... இன்றைய ஒரே நாளில் ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது.. செயலில் ஒழுக்‍கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்‍கப்படும் கே.பாலசந்தர். நாடகங்கள் நடத்திக்‍கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக்‍ கொண்டிருந்த பாலசந்தருக்‍கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்‍கு அறிமுகப் படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த 'தெய்வத்தாய்' என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார். எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத்…
Read More
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பர்த் டே டுடே!

நாளைய முதல்வராக ஆசைப்படும் நடிகரின் அப்பா & டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் 82ஆவது பிறந்தநாள் இன்று 💐 ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஏபி நாகரஜன்,பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த டைரக்டர்கள் வரை எத்தனை எத்தனையோ விதங்களில் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இப்போது இந்தியாவில் ஹாட் டாபிக் ஆகி இருக்கும் சட்டப் பிரச்சினைகளை அலசி, கூறுப் போட்டு நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்து வாயை பிளக்க வைத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர். கோலிவுட் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான்…
Read More
ஜூனியர் இளையராஜா கார்த்தி ராஜா பர்த் டே!

ஜூனியர் இளையராஜா கார்த்தி ராஜா பர்த் டே!

எப்பேர்பட்ட பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி. ஆனால் திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 51வது பிறந்தநாளாகும். கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.நாம் தினசரி கேட்டும் பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்தார் என ஒருவரை நினைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் தான் அந்த பாட்டுக்கு சொந்தக்காரர் என்னும் போது அவரின் பாடல்களை தேடிச் செல்வோம். அப்படி…
Read More
தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'ஈநாடு' நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள். ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள்…
Read More
பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப் பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி... வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகி விடுவார்கள்.…
Read More