வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி- ரகுவரன்: பிறந்த நாளின்று!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக் கலைஞன் அவர். இன்று டிசம்பர் 11, அந்தக் கலை ஆளுமையின் பிறந்த தினம்.  வில்லனுக்கும் ஒரு ஆத்மா உண்டு ரகுவரனின் நடிப்பு எல்லைகள் அற்றது. அவர் வில்லனாகத் திரையில் தோன்றியபோது, அது வெறும் வில்லத்தனமாக மட்டும் இருந்ததில்லை; அது புத்திசாலித்தனம், வலி, இயலாமை, மற்றும் துரோகம் ஆகிய உணர்வுகளின் சிக்கலான கலவையாக இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே . புதிய பரிமாணம்:…
Read More
கருப்பு வெள்ளை காலத்தில் கலர் ஃபுல்லான  காதல் நாயகன் ஜெமினி கணேசன் பிறந்த நாள்!

கருப்பு வெள்ளை காலத்தில் கலர் ஃபுல்லான காதல் நாயகன் ஜெமினி கணேசன் பிறந்த நாள்!

வெள்ளித் திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல உருமாறி வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் ஹீரோவாக மாறிப்புட்டார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் கம்பீரமாக கோடம்பாக்கத்தில் தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது நெக்குருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’.  தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான இருதுருவ நாயகர்களின் இருப்பினை ஓரளவில் அசைத்துப் பார்த்த ஆளுமை ஜெமினி. ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகளின் இடைக்காலம் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவாஜி, எம்ஜிஆர் எனும் பேராளுமைகளிடையே தனக்கான ஓர் இருப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டவர் இவர்.சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை –…
Read More
கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ ரிலீஸான நாள்!

கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ ரிலீஸான நாள்!

சில படங்களை நெனச்சு பக்கம் பக்கமாக எழுதலாம். கமலின் குணா அப்படியொரு படம். 34 ஆண்டுகளுக்கு முன் 1991 இதே நவம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் குணா ரிலீஸாச்சே பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரிய அலையை ஏற்படுத்திச்சு. அதேநேரம் பொதுப்பார்வையாளர்களை படம் சென்றடையுமா என்ற கேள்வியும் எழுந்துச்சு. மாஸ் ஹீரோ படத்திற்கென ஒரு ஃப்ரேம் உண்டு. அவன் எவராலும் வெல்ல முடியாதவன், தீமைகளை அழிப்பவன்... இப்படி. ஆனா குணா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் அம்புட்டும் அதுவரை தமிழ் சினிமா அறியாத தளத்தை, வண்ணத்தை கொண்டிருந்துச்சு..அந்த வகையில் குணாவின் கதையும் காட்சிகளும் பல வருடங்களாக இன்னிக்கும் பேசப்பட்டும், வியந்து போற்றப்பட்டும் வருது. குணா படத்தின் பின்னணி தகவல்களும் அதேயளவுக்கு ஆச்சரியம் கொண்டவை. மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களை தமிழில் பயன்படுத்தோணும் அப்படீங்கற விருப்பம் கமலுக்கு முன்பே இருந்துச்சு. பரதன், சிபி மலையில், பாலச்சந்திர மேனன் என பலருடன் இணைஞ்சு படம்…
Read More
காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள்!

காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள்!

ஆகச் சிறப்பான சொற்கோர்வை, சந்தம் என தமிழ் இலக்கணத்தின் அத்தனை கூறுகளையும் மிகச் சிறப்பா கையாண்ட கவிஞர் வாலி தாயைப் பற்றி எழுதியுள்ள அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, தாய் இல்லாமல் நான் இல்லை, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும் போன்ற பாடல்கள் எல்லாம் இன்னிக்கும் நம்மை தாலாட்டிக் கொண்டு தானே இருக்கின்றன. அதே மாதிரி கற்பகம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மன்னவனே அழலாமா', 'அத்தை மடி மெத்தையடி', அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம் பெற்று 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' தளபதி படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்கள், மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பிடிச்ச 'மன்றம் வந்து தென்றலுக்கு', காதல் தேசம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னை காணவில்லையே நேற்றோடு', காதலர் தினத்தில் இடம் பெற்ற 'என்ன விலை அழகே', சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன்பே வா என் அன்பே…
Read More
கோலிவுட்டின்‘மார்க்கண்டேயன்’ சிவகுமாருக்கு 84 வயசு!

கோலிவுட்டின்‘மார்க்கண்டேயன்’ சிவகுமாருக்கு 84 வயசு!

தூரிகையால் ஓவியத்தை அழகாக வரைவது என்பது ஒருபக்கம். அப்படி வரையும் ஓவியரே அழகானவராக இருந்தால்...? அப்படியொரு அழகுடன் இருந்ததால், உடனிருந்த ட்ரண்ட்ஸ் ‘நடிகனாகலாமே...’ என்று சீரியஸா சொன்னாய்ங்க. அப்ப ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது கைவந்த கலையாகிபுடுச்சுது. கூடவே, நடிப்பின் மீதும் லப் பத்திக்கிச்சு. முன்னரே கோவையில் இருந்து மெட்ராஸூக்கு வந்தவர், கோடம்பாக்கத்துக்குள் நுழைஞ்சு வாய்ப்புகளைத் தேடினார். ’நம்மைக் காக்கவும் கரம் இருக்கும்; கைதூக்கிவிடும்’ அப்படீன்னு நம்பிக்கை கொண்டிருந்தார். அப்படி நம்பியகரை புகழ்மிக்க ஏவி.எம் நிறுவனம் கைகொடுத்து, கைகுலுக்கி வரவேற்று ‘காக்கும் கரங்கள்’ (1965) படத்தில் அறிமுகப்படுத்திச்சு. அந்தப் படத்தில் நடிக்கும்போது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இன்னிக்கும் இருக்கிறார் என்று பார்த்தவய்ங்க சொல்லிபுடுவாய்ங்க. அதனால்தான் அவரை ‘மார்க்கண்டேயன்’ என்று எல்லோருமே சொல்றாய்ங்க. சிவகுமாரின் 24-வது வயசில் மொத சினிமா வாய்ப்பு கிடைச்சுது. அந்த கா. க.வில் பாத்துப்புட்டு ’அட்டேபையன் ரொம்ப லட்சணமா இருக்கானே...’ -நு சொல்லி அடுத்த ஆண்டே டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்’…
Read More
கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

ஒரு டைரக்டரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே ஒட்டு மொத்த படைப்பின் ஜீவனாகிறார். அப்படி இன்றும் நினைவில் வாழ்பவர் கேமராமேன் அசோக் குமார் யர்லி மார்னிங். மிஸ்ட் எனப்படும் பனியின் ஈரம் போர்த்திய தாவரங்களும் புதர்களும் சாலையின் இருபுறங்களிலும் இன்னும் உறங்கிக்க்கிட்டிருக்குது. ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டில் அவுட்டில் ‘ஜாகிங்’ போறாய்ங்க. காலடி ஓசையின் ‘தட் தட்’ ஒலியின் பின்னணியில் ஒரு பூவைப் போல் மலருது ஒரு பாடல். ‘பருவமே… புதிய பாடல் பாடு’. பனிப் படலத்தில் அமிழ்ந்து கிடக்கும் புல்வெளிப் பரப்பு, புதர்களுக்கு இடையில் படுத்திருக்கும் ஈரமான பாதைகள் என்று அழகாகக் காட்சிகள் விரியுது. அதிகாலையில் காணும் கனவு போன்ற அந்தப் பாடலில், மகேந்திரன், இளையராஜாவின் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு அத்தனை குளுமையாகப்…
Read More
கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு  பர்த் டே!

கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு பர்த் டே!

ஒரு ஆக்டர் என்பவர், எல்லா விதத்திலும் நடிக்கோணும். அதாவது முகத்தால் நடிக்கோணும். கண்களால் நடிக்கோணும். கை அசைவுகளால் நடிக்கோணும். நடையிலும் ஓட்டத்திலும் நடிக்கொணும். இதைத்தான் ‘பாடி லாங்குவேஜ்’ என்று கொண்டாடுவாய்ங்க ரசிகர்களுங்க. மிகச் நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் சேஷ்டைகளும் கோணங்கித்தனங்களும் மட்டுமே நமக்குள் வெடிச்சிரிப்பைக் கொடுத்துவிடும். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்களில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து நினைத்து விகசிப்போம். கண்ணீர்விடுவோம். சார்லி சாப்ளின் நம்மைச் சிரிக்கவைத்தார். அவரின் வாழ்க்கையோ நமக்கு துயரத்தைக் கொடுத்தது. நம்மூரிலும் அப்படியொரு நடிகரைச் சொல்லலாம். நம்மவரும் ஓடுவார். தடக்கெனக் குதிப்பார். பரபரவென பாய்வார். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்வார். அவர் செய்வதெல்லாம் இருக்கட்டும். அந்தக் கண்களை வைத்துக்கொண்டு உருட்டினாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அப்பேர்பட்ட பண்பட்ட நடிகர்தான்... சந்திரபாபு. முத்து நகரம் என்று போற்றப்படுகிற தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. அவரின் தந்தை சுதந்திரப்…
Read More
தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமா இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சினிமா உலகம் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. அவர்களில் மிக முக்கியமானவர், தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர். அவர் இல்லையென்றால், இன்று ஒரியா அல்லது போஜ்புரி படங்களைப் போலத்தான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியும் இருந்திருக்கும்; அவர்தான் அதை மாற்றினார். செட்டியார்களின் கலை உணர்வும் தொழில் பக்தியும் பொதுவாக நகரத்தார் எனப்படும் செட்டியார்களின் இயல்பு அல்லது தர்மம் காலத்திற்கேற்ற தொழில்களை மேற்கொள்வதும், அதனை கலை உணர்வுடன் ரசிக்கும்படியாகச் செய்வதும்தான். செட்டியார்களின் பெருவாழ்வுக்குக் காரணம் தொழில்பக்தி என்றாலும், எல்லாவற்றையும் கலை உணர்வுடன் செய்வது அவர்களின் பெருமைக்கு முக்கியக் காரணம். அது வீடு, உணவு, நகை என்றல்லாமல், வழிபாட்டிலும் கோயில்களிலும் கூட ஒரு…
Read More
தனுஷ்: ‘விடலை’யில் இருந்து ‘உலக சூப்பர் ஸ்டார்’ வரை – ஓர் உழைப்பின் கதை!

தனுஷ்: ‘விடலை’யில் இருந்து ‘உலக சூப்பர் ஸ்டார்’ வரை – ஓர் உழைப்பின் கதை!

சினிமா ஒரு மாய உலகம். யார் எப்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. யார் என்றே தெரியாத ஒருவரை நூற்றாண்டின் நடிகராக மாற்றும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும், சில படங்களிலேயே ஒரு கலைஞனை ஒதுக்கி வைக்கவும் இந்த சினிமா தயங்காது. இந்த புரிதல் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த மாய உலகில் நுழைந்து, காணாமல் போய் உள்ளனர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றும் ஒருவனை கடைசிவரை கண்டுகொள்ளாது. அதுவே சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை தனக்குள்ளே இழுத்து, நீச்சல் அடிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுத்து, இந்த சினிமா கடலில் மாபெரும் மரியானாவாக மாற்றும். அப்படி மாறிய ஒருவர் தான் நடிகர் தனுஷ். மழித்த மீசை; பென்சில் தேகம்; அப்பாவி முகம்; விடலைப்பருவம்... இப்படியான உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை 19 வருடங்கள் கழித்து உலக சினிமாவே கொண்டாடப் போகிறது என்று…
Read More
லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் சின்னம் திறக்கப்பட்ட நாள்!

லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் சின்னம் திறக்கப்பட்ட நாள்!

1923 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, உலகத் திரைப்படத் துறையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அடையாளச் சின்னமான 'ஹாலிவுட்' (Hollywood) சின்னம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் மலைகளில் இருக்கும் லீ குன்றில் (Mount Lee) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. ஹாலிவுட் சின்னத்தின் ஆரம்பம் இந்தச் சின்னம் முதலில் "HOLLYWOODLAND" என்று அழைக்கப்பட்டது. இது ஹாலிவுட்லாண்ட் என்ற புதிய குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. ஹாரி சந்த்லர் (Harry Chandler) என்ற லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் வெளியீட்டாளர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்தார். ஒவ்வொரு எழுத்தும் சுமார் 30 அடி அகலமும், 50 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இந்த எழுத்துகள் தகரம், கம்பிகள் மற்றும் கம்பங்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டு, இரவில் ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டன. ஒரு பாதுகாவலர் ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. விளம்பரச் சின்னத்திலிருந்து…
Read More
error: Content is protected !!