விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி 'திமிரி எழுடா' என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட…
Read More
விமர்சனரீதியாகவும் வசூலிலும் சாதனை படைக்கவுள்ளது கவினின் ‘ஸ்டார்’

விமர்சனரீதியாகவும் வசூலிலும் சாதனை படைக்கவுள்ளது கவினின் ‘ஸ்டார்’

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர். எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர். 'தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப்…
Read More
எப்படி இருக்கிறது ஸ்டார் ?

எப்படி இருக்கிறது ஸ்டார் ?

  இளம் நட்சத்திரம் கவின் நடிப்பில், இளம் இயக்குனர் நலன் இயக்கத்தில், இந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஸ்டார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் இத்தனை எதிர்பார்ப்பை தந்ததில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இன்றைய கால இளைஞர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது சமீபத்தில் ஒரு டிரெய்லர் மிக அழகாக கட் செய்யப்பட்டு வந்தது என்றால் அது ஸ்டார் படத்திலிருந்து என்று தாராளமாக சொல்லலாம். முழுப் படத்தின் கதையையும் வாழ்க்கையையும் டிரெய்லரிலேயே படக்குழு தந்து விட்டது. இயக்குனரின் முந்தைய படம், நடிகர் கவினின் முந்தைய படமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திந் மீது ஆர்வத்தை தூண்டியது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா? ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன்…
Read More
அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் 'ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் இளன் பேசியதாவது, ' எனக்கு' மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்... ஒரு…
Read More
யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை

யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான். யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார். திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது. இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும்…
Read More
விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

மாமனிதன் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இசையில் உருவான வாழ்வியல் சார்ந்த திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.   ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு நல்லவன் சூழ்ச்சியில் தோற்றுப்போக, அந்த ஊரிலிருந்து அவன் ஓடுகிறான். பின்னர் அவன் தன் குடும்பத்தை காக்க என்ன செய்கிறான் அந்த குடும்பம் என்ன ஆனது என்பதே படம் 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. யுவன் சங்கர் ராஜா, இளையராஜா முதல் முறை இணைந்து இசையமைத்துள்ள படம் என்பது கூடுதல் சிறப்பு. தோற்றுப்போகும் ஒருவனின் கதையை சொல்லவும் இங்கு ஆள் வேண்டும் அந்த வகையில் தோற்றுப்போனவனின் கதையை தொடர்ந்து சொல்லி வருகிறார் சீனு ராமசாமி. ஏமாற்றுக்காரன் ஓடிப்போவதில்லை நல்ல மனதுக்காரன் மட்டுமே ஓடுகிறான் என்ற ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த கதையை…
Read More
“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் –  தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. தமிழின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  “நிலமெல்லாம் ரத்தம்” எனும்  ஜீ5 பிரத்யேக தொடரை அறிவித்தார்.  இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில்  ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர்,  நடிகை ராதிகா…
Read More
சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

இயக்கம் - வெங்கட்பிரபு நடிப்பு - சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி கதை - நண்பனுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க, துபாயிலிருந்து வருகிறார் அப்துல்காலிக் (சிம்பு). ஒரு ஆக்சிடெண்டில் சிக்கி கொள்ளும்போது,  போலீஸ் தனுஷ்கோடி (எஸ் ஜே சூர்யா)  சிம்புவை வைத்து முதலமைச்சரை மாநாட்டில் வைத்து கொலை  செய்ய திட்டமிடுகிறார். கொலை நிகழந்த பிறகு, சிம்புவை சுட்டுக்கொள்ள மீண்டும் அதே நாளின் தொடக்கத்தில் கண் விழிக்கிறார் சிம்பு.  ஒருநாளின்லூப்பில்சிக்கிகொள்வளும்சிம்புமுதலமைச்சரைஎப்படிகாப்பாற்றமுயற்சிக்கிறார்அதில்வென்றாராஎன்பதுதான்கதை ஹாலிவுட்டில் மட்டுமே செல்லுபடியாகும் டைம் லூப் கதையை, தமிழ் மசாலா சினிமா ரசிகனுக்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றி அதில் முன்னணி நாயகனை வைத்து, அட்டகாச மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் மூன்று வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகியிருக்கும் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஹாலிவுட்டில் டைம் லூப் கதைகள் நிறைய வந்திருக்கிறது…
Read More
சிம்பு படம்னாலே பிரச்சனை- கண் கலங்கிய சிம்பு

சிம்பு படம்னாலே பிரச்சனை- கண் கலங்கிய சிம்பு

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வர இருந்த இந்த திரைப்படம் சில பிரச்சினைகளால் நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, 'நான் மாநாடு படத்தில் நடிக்க காரணம் 'அப்துல்காலிக்' என்கிற கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாவதற்குள் நான் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டேன். எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள். பல பிரச்சினைகளைத் தாண்டியே மாநாடு…
Read More
பேய் பசி படத்துக்காக ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார் யுவன்!

பேய் பசி படத்துக்காக ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார் யுவன்!

பொதுவான் பழமொழிதான் என்றாலும்  தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் "பியார் பிரேமா காதல்" படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது…
Read More