எப்படி இருக்கு இந்த வாய்தா?

எப்படி இருக்கு இந்த வாய்தா?

வாய்தா விமர்சனம் : நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் மற்றும் பலர்
எழுத்து &; இயக்கம்: மதிவர்மன்
இசை: லோகேஸ்வரன்
ஒளிப்பதிவு: சேது முருகவேல்
படத்தொகுப்பு: நரேஷ் குணசீலன்
தயாரிப்பு: கே வினோத் குமார் கதைக்களம்.. ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் ஒரு விபத்து நடக்கிறது. சாலை ஓரம் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிற பெரியவர் மு ராமசாமிக்கு அடி படுகிறது. இதை சுற்றி மேல் ஜாதிக்காரர் இருவர் கோர்ட் வழக்கு வரை சென்று சண்டையிடுகிறார்கள் இதில் அந்த எளியவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே கதை. ஒரு சிறு பைக் விபத்து அதை சுற்றி சுழலும் கதை அதில் நம் சமூக அமைப்பையும், ஏழை மக்களின் வாழ்வியலையும், கோர்ட் நடவடிக்கைகளையும் தத் ரூபமாக எடுத்துள்ளார்கள். பைக் பெரியவர் மீது மோதிவிட்டு பைக்காரன் பயத்தில் ஓடிவிடுகிறான். இதனால் பெரியவரின் பையன் வண்டியை தன் வீட்டுக்குள் எடுத்து வைத்து பூட்டி விடுகிறான். பைக்காரன்…
Read More
கோர்டு டிராமாவாக உருவாகியுள்ள “வாய்தா” திரைப்பட விமர்சனம்!

கோர்டு டிராமாவாக உருவாகியுள்ள “வாய்தா” திரைப்பட விமர்சனம்!

  எழுத்து & இயக்கம்: மதிவர்மன் தயாரிப்பு: கே வினோத் குமார் இசை: லோகேஸ்வரன் ஒளிப்பதிவு: சேது முருகவேல் படதொகுப்பு: நரேஷ் குணசீலன் நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் ஒரு அப்பாவி முதியவர் மேல் ஒருவன் பைக்கால் மோதுகிறான்,  அது வழக்காய் பதியபடுகிறது. இந்த வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களுமே திரைப்படம். முழுக்க புதுமுகங்களால் உருவாக்கபட்ட இந்த திரைப்படம், சமூகத்தில் இருக்கும் அவலங்களையும், ஏற்ற தாழ்வுகளையும், எளியவர்களிடமிருந்து நீதியும், நியாயமும் எப்படி பறிக்கபடுகிறது என்பதை கூற முயற்சிக்கிறது. ஜாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதும், இழிவு நிலைக்கு தள்ளபடுவதுமாய் ஒரு சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்திற்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற சமூக நடப்பை ஆணித்தனமாக கூறுகிறது இந்த வாய்தா திரைப்படம். லோ பட்ஜெட் திரைப்படங்களுக்கே உண்டான சமரசங்களால் படத்தின் மேக்கிங்க் இருக்கிறது, முழுவதுமாய் திரை நேர்த்தி இல்லை. இதுபோன்ற குறைகள்…
Read More
திரைத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் -தயாரிப்பாளர் சி. வி. குமார்

திரைத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் -தயாரிப்பாளர் சி. வி. குமார்

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியான சி மகேந்திரன், தயாரிப்பாளர் சி. வி. குமார்,…
Read More