சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,'' தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு…
Read More
தல-தளபதி படங்கள் ரிலீஸ் தேதி!

தல-தளபதி படங்கள் ரிலீஸ் தேதி!

  கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு திரைத்துறை இப்போது தான் மூச்சு விட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி இழுத்து வந்தது. ரஜினியின் அண்ணாத்த கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், தீபாவளிக்கு தியேட்டர்கள் கலைகட்சியதென்னவோ உண்மை. அடுத்தடுத்து விஜய், அஜித் படங்கள் முதலாக பல பெரிய நடிகர்களின் பெரும் பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு பக்கம் நேரடி தமிழ் படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் வேளையில் பல தெலுங்கு படங்களும் கூட தமிழிலும் இணைந்து பன்மொழி தயாரிப்பாக உருவாகி, ரிலீஸுக்கு காத்திருக்கின்றன வரும் மாதங்களில் அடுத்தடுத்த மாதங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸை உறுதி செய்து, தியேட்டருக்கு வரவுள்ளது என்பதை பார்க்கலாம். முதலில் அடுத்த வாரத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. இப்ப்டத்துடன் சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படமும் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. அடுத்து…
Read More
மலையாளத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடையும் நடிகர் நரேன்!

மலையாளத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடையும் நடிகர் நரேன்!

  சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஜெய்பீம்'. இந்தப் படம் தமிழ் மொழியில் பெற்ற அதே வரவேறப்பை மலையாளத்திலும் பெற்றுள்ளது. மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, 'மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.   'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி. ஜெய்பீம்!
Read More
நடிகர் சூர்யாவை தாக்கி அன்புமணி இராமதாஸ் கடிதம் !

நடிகர் சூர்யாவை தாக்கி அன்புமணி இராமதாஸ் கடிதம் !

நடிகர் சூர்யாவுக்கு காட்டமாக கடிதம் எழுதிய அன்புமணி இராமதாஸ் ! சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதமெழுதியுள்ளார். படைப்புச்சுதந்திரம்என்றபெயரில்இன்னொருசமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை; ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடிதத்தின் விவரம்: அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு வணக்கம்! தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சிவக்குமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும்  தமிழ்த் திரையுலகில்…
Read More
தமிழ் சினிமாவின் பொன் மகுடம்  ஜெய்பீம் !

தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய்பீம் !

இயக்கம் - த.செ.ஞானவேல் நடிகர்கள் - சூர்யா, மணிகண்டன், லியோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் கதை - மனிதனின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும், கள்ளர் இனக்குழுவில் ஒரு சிலரை, ஒரு கொள்ளைவழக்கில் போலீஸ் தவறுதலாக கைது செய்து போகிறது.  அவர்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி குற்றத்தைஒப்புக்கொள்ள சொல்கிறது. அதில் அவர்கள் தப்பி விட்டதாக அவர்களின் குடும்பத்திடம் சொல்ல, கணவனைகாணாத மனைவி, தன் கணவனை மீட்டு கொடுக்க சொல்லி வக்கீல் சந்த்ருவை அணுகுகிறார். அவர்களைநீதிமன்றம் மூலம் கண்டுபிடிக்கிறாரார சந்த்ரு என்பது தான் கதை. தமிழ் சினிமாவுக்கு மிக நீண்ட காலம் கழித்து ஒரு அற்புதமான படைப்பாக பலரது மனதையும் கலங்கடிக்கும்படைப்பாக உருவாகி, வந்திருக்கிறது ஜெய் பீம். ஒரு இனக்குழு மொத்தமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை, அவர்களின் உரிமைகள்மறுக்கப்பட்டதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக  ஒருஅற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு மொத்த குழுவிற்கும் பூங்கொத்துக்கள். ஒரு படம் என்ன செய்ய வேண்டும்…
Read More
இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததேஇல்லை- சூர்யா

இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததேஇல்லை- சூர்யா

ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கேநாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான்ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக்கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார். 20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளார். ஜெய் பீம்' திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது, "24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லாதருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு.…
Read More
வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது. தங்களுக்கென…
Read More
அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

  எழுத்து இயக்கம் - இரா சரவணன் நடிப்பு - ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி கதை - பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை. கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும்…
Read More
தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்த திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தீபாவளிக்கு அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான, வன்முறை  காட்சிகள் படத்தில் இருக்கிறது. இது மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் படமாக இருக்கும் என படக்குழு நம்பிவருகீறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Read More
பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன் " . சன் பிக்சர்ஸ் உடைய தயாரிப்பில் , இயக்குநர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். கடைக்குட்டி சிங்கம், எங்க வீட்டு பிள்ளை என இரண்டு பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதாலும், நடிகர்  சூர்யா- இயக்குநர் பாண்டிராஜ் இணையும் படம் என்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்துள்ளது.  படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.  பிரமாண்டமாக உருவாக்கும் இத்திரைப்படம் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்டு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். டி.…
Read More