பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப் பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி... வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகி விடுவார்கள்.…
Read More
நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

கவிதையோ, கதையோ அல்லது நகைச்சுவை என்றால் கூட மறக்க முடியாத கேரக்டர் கள் இருப்பது போல் சினிமாவிலும் நிறையவே உண்டு. பல சினிமாக்களில் சம்பந்தப் பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்திருப் பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து காட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப் பட்டது.…
Read More
சிவாஜி கணேசன் கொடை வள்ளல் தனம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சிவாஜி கணேசன் கொடை வள்ளல் தனம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

😡தமிழ்நாடே அறியாத நடிகர் திலகத்தின் மறுபக்கம்..!! 😷ஏன் ஊடகங்கள் இவற்றை வெளி கொணரவில்லை?  நடிகர் திலகம் சிவாஜி அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்யுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1962ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார். புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ளார்..நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார். 1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில்…
Read More