‘மழை பிடிக்காத மனிதன்’தான் எனது முதல் பிரம்மாண்டப்படம்!விஜய் ஆண்டனி!

‘மழை பிடிக்காத மனிதன்’தான் எனது முதல் பிரம்மாண்டப்படம்!விஜய் ஆண்டனி!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்".என்றார் இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது, " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்" என கூறினார் இயக்குநர் சசி பேசியதாவது,…
Read More
Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

  ஹிட் லிஸ்ட் திரைப்படம் விமர்சனம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா வரலாறு மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் அட்லீஸ்ட் இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ரவிக்குமார் தயாரித்துள்ளார் அவரது உதவியாளர்கள் சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு அறிமுக ஹீரோவுக்கான கதையை வடிவமைத்து அவரை நிலை நிறுத்தும் எண்ணத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் இளைஞன் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் திடீரென அவர் என் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள் முகமூடி அணிந்த வில்லன் அவரை மிரட்ட ஆரம்பிக்கிறான் போலீஸ் உதவி கொண்டு…
Read More
இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக…
Read More
இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ' சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது... இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த 'தமிழ்க்குடிமகன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக 'தமிழ்க்குடிமகன்' இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

"போடா போடி" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் "தாரை தப்பட்டை" மற்றும் "விக்ரம் வேதா" போன்ற பல வெற்றிப் படங்களில் நடிச்சிருக்கார். அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று இருக்கார். நடிப்பு மட்டுமின்றி, வரலட்சுமி சமூக பணிகளில் ஈடுபட்டு உள்ளார். மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு வலுவான வக்கீல் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்பது இல்லாமல் பெண்கள் சார்ந்த படங்களின் அதிகமாக கவனம் செலுத்தி வாறார். இவர் தற்போது 50 படங்கள் நடித்து இருக்கிறார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..அது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.…
Read More
வசூல் சாதனை படைத்த போர் தொழில் திரைப்படத்தின் வெற்றி விழா! இத்தனை கோடியா!

வசூல் சாதனை படைத்த போர் தொழில் திரைப்படத்தின் வெற்றி விழா! இத்தனை கோடியா!

  அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு…
Read More
போர் தொழில் – திரை விமர்சனம் !!

போர் தொழில் – திரை விமர்சனம் !!

போர் தொழில் இயக்கம் - விக்னேஷ் ராஜா நடிகர்கள் - சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல். இசை - ஜேக்ஸ் பிஜாய் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் திரில்லர் படம். ஹாலிவுட் கனகச்சிதமாக எடுக்கப்படும் இந்த ஜானர் தமிழுக்கு மட்டும் ஏனோ செட்டாவதில்லை. எப்போதாவது அரிதாக ஒரு நல்ல திரில்லர் படம் வரும். ராட்சசன் மாதிரி விதிவிலக்கான படமாக மிரட்டலாக வந்திருக்கிறது போர் தொழில். திடீரென திருச்சி அருகில் இளம்பெண்கள் கொடூரமாக ஒரே முறையில் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அந்த கொலையை கண்டுபிடிக்க சரத்குமார் நியமிக்கப்படுகிறார். புதிதாக பணிக்கு சேரும் அசோக்செல்வனை டிரெய்ன் செய்ய சொல்லி அவருடன் அனுப்புகிறார்கள். இருவரும் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பதே படம். இந்த மாதிரி சைக்கோ கொலை படங்களுக்கு திரைக்கதை ரொம்ப முக்கியம். கொலை விசாரணையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி ரசிகனை கூட இழுத்து சென்று, இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பத்தை தர வேண்டும். அதை அட்டகாசமாக…
Read More
அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய…
Read More
கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது

கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது! கௌதம் கார்த்திக்-சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனை அடுத்து, நேற்று பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது. 'கிரிமினல்’ படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.இப்படத்தின் டீசர்,…
Read More
‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

'கண் சிமிட்டும் நேரங்கள்'ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் 'The Smile Man'ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். 'ருத்ரன்'ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு.பிரமாண்ட படங்களை உருவாக்குவதே கடினம். இந்த 'பி.எஸ் - 2'ஐ மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' என்றுதான் எடுத்துக்கணும். இந்த முயற்சியில் அவர் வெற்றியடைஞ்சிருக்கார். உலகளவில் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு சேர்த்திருக்கார். என்னைப் போன்ற கதையைப் படித்த சிலர் 'கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்களே'ன்னு சொல்றாங்க. ஆனாலும் அவர் பிரமிப்பா எடுத்திருக்கார்னுதான் சொல்வேன். இறுதிக் காட்சியில் நந்தினி என்னைப் பார்த்து, 'இவர் அழகுக்கு மயங்குபவர் மட்டுமல்ல, உண்மையாக என்னை நேசித்த ஒருவர்'னு சொல்வாங்க. அதைப் போல, வந்தியதேவனும் 'இவரிடம் நேரிடையா போரிட்டு வெற்றி பெற முடியாது'…
Read More