வழக்கமான போலீஸ் கதையல்ல இந்த இபிகோ 302- கஸ்தூரி பிராமிஸ்!

வழக்கமான போலீஸ் கதையல்ல இந்த இபிகோ 302- கஸ்தூரி பிராமிஸ்!

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ இ.பி.கோ 302 “ இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி க்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது.. இந்த படத்தில் இப்படியொரு கேரக்டரை கொடுத்த டைரக்டர் சலங்கைத்துரை-க்கு முதல் நன்றி. தமிழில் நான் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். என்…
Read More
சூறாவளிப் படக் கதை இதுதானுங்கோ!

சூறாவளிப் படக் கதை இதுதானுங்கோ!

வடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண் களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது. ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள் (கதாநாயகி), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா? எக்ஸ்ட்ரா நியூஸ்! தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது…
Read More
“காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ஏகப்பட்ட தியேட்டகளில் ரிலீஸ் !

“காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ஏகப்பட்ட தியேட்டகளில் ரிலீஸ் !

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மொத்த படக் குழுவும் முன் திரையிடல் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பிலும், பாராட்டிலும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தினை பற்றி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, நிறைய திரையரங்குகளில் படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது. Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது... ஒரு அற்புதமான பயணம் “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் எனக்கு அமைந்தது. பல்வேறு இடர்பாடுகளையும், பெரும் தடைகளையும் தாண்டி இப்படம் வெளி வந்து உள்ளது. இப் படகுழுவின் அயராத உழைப்பும், ஒன்றினைந்த உற்சாகத்திற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. இந்த நீண்ட பொது முடக்க காலத்திலும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது. தியேட்டரில் வெளியாகும்போது கண்டிப்பாக பெரும் பாராட்டுக்களை குவித்து, அனைவரையும் ஈர்க்கும் என உறுதியாக நம்பினேன். பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு ஊடக…
Read More
காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27  ரிலீஸ்!

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் வெளியகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றினார். கூடவே, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வெற்றி மாறன். இதையடுத்து, 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இந்த கொரோனா & ஊரடங்கால் தள்ளி போன நிலையில் நவம்பர் 27-ம்…
Read More
சஸ்பென்ஸ் திரில்லரா உருவாகி இருக்கும் ‘காளிதாஸ்’!

சஸ்பென்ஸ் திரில்லரா உருவாகி இருக்கும் ‘காளிதாஸ்’!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக் கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின்…
Read More
இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை. என்னுடைய பெயரை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்திவர்கள் மீதே புகார் அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். ஆர் .ஜே. மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இங்கிலிஷ் படம். புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த  'இங்கிலிஷ் படம்' இயக்குநர் மீது ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது, அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், அது குறித்து தனது விளக்கத்தைக் கடிதமாக வெளியிட்டுள்ளார். "இங்கிலிஷ் படம்…
Read More
மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.  கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...'…
Read More
ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகி யுள்ள படம் தான் 'களத்தூர் கிராமம்' . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர 'தகராறு  'சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர​, ​​ஜினி மகா தேவ​ய்​யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை என்ன? இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவ மதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள் .…
Read More
என்னை நிஜப் போலீஸூன்னு நினைச்சாங்க !- ராஜா ரங்குஸ்கி ஷிரிஷ் ஹேப்பி

என்னை நிஜப் போலீஸூன்னு நினைச்சாங்க !- ராஜா ரங்குஸ்கி ஷிரிஷ் ஹேப்பி

"மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்" என்று கூறுகிறார் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் கதாநாயகன் ஷிரிஷ் 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும் போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய…
Read More