நலன் குமாரசாமி டைரக்‌ஷனில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

நலன் குமாரசாமி டைரக்‌ஷனில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்…
Read More
36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

ஆம்.. இன்னியோட அக்னி நட்சத்திரம் ரிலீஸாகி 35 வருஷங்கள் நிறைவாகி போச்சு ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார். ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார். ஆனால் ‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடிச்சிருந்த நேரம். நெக்ஸ் உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பிச்சு ஃப்ர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடிச்சுப்புட்டார். இடையில் வந்ததுதான்…
Read More
கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான…
Read More
ஜப்பான் ஒரு கொடுங்கனவு !! திரை விமர்சனம்!

ஜப்பான் ஒரு கொடுங்கனவு !! திரை விமர்சனம்!

  இயக்கம் - ராஜு முருகன் கார்த்தி , அனுமோல்   ஜப்பான் கார்த்தியின் 25 வது திரைப்படம். தமிழ் சினிமாவில் கொஞ்சமேனும் கதைக்கு முக்கியத்துவம் தந்து, நல்ல இயக்குநர்களோடு நல்ல படங்கள் தரும் ஹீரோ என, பாராட்டு வாங்கி வைத்திருக்கும் கார்த்தி, நிறைய உழைப்பை போட்டு தந்திருக்கும் படம்.   கோவையில் ஒரு ஜீவல்லரி கடையில் 200 கோடி நகைகள் கொள்ளை போகிறது. செய்தது ஜப்பான் என தெரிய வருகிறது. அரசியல் வாதிகளின் அழுத்தம், போலீஸில் இரண்டு பிரிவுகள் ஜப்பானை தேடி அலைகிறது. பார்ட் டைம் நடிகர், பலே திருடன் கார்த்தி எங்கிருக்கிறார், போலீஸில் சிக்கினாரா ? அவருக்கு என்ன ஆனது? என்பதே படம்.   படம் பார்க்க ஆரம்பித்த கணத்திலிருந்து முடியும் என்ன படம் ஓடுகிறது? எதற்காக படம் பார்க்கிறோம் ? என்ன எடுத்துள்ளார்கள் எதுவும் தெரியவில்லை. மருந்துக்கூட நம்மை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு காட்சி கூட, படத்தில் இல்லை.…
Read More
கல்விக்கு பணம் கிடைக்காமல் ஏங்கியுள்ளேன்! சிவக்குமாரின் உருக்கமான பேச்சு!

கல்விக்கு பணம் கிடைக்காமல் ஏங்கியுள்ளேன்! சிவக்குமாரின் உருக்கமான பேச்சு!

  திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், 'குறள் வழி கல்வி'…
Read More
நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் கதை இதுதானா! மீண்டும் ஒரு உண்மை சம்பவம்!

நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் கதை இதுதானா! மீண்டும் ஒரு உண்மை சம்பவம்!

நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பி தற்போது முடிந்துள்ளது.  சில வருடங்களுக்கு முன் திருவாரூர் முருகன் என்ற நகைக்கடை கொள்ளையன் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லலிதா ஜுவல்லரி கடையில் ஏற்பட்ட நகை திருட்டுக்கு திருவாரூர் முருகன் தான் காரணம் என காவல் துறையால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அந்த திருவாரூர் முருகன் நகைக்கடை கொள்ளையை தழுவி தான் ’ஜப்பான்’ படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமான நிகழ்வை மட்டும் இயக்குனர் ராஜூ முருகன் மாற்றியமைத்து கார்த்தியிடம் கூறியதாக தெரிகிறது, ஆனால் கார்த்தி அதனை மாற்ற வேண்டாம் என்றும் உண்மை கதையில் இருந்தபடி ’ஜப்பான்’ படத்தின் கதையில் இருக்கட்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது இதையடுத்து நலன் குமாரசாமி…
Read More
பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கனீர் குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் பெற்ற பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அட்வைஸ் பன்ன சென்று அவரிடம் கொட்டு வாங்கிட்டு வரும் காட்சி அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தில் இவர் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனைவி மற்றும்…
Read More
தாமதமாகும் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம்

தாமதமாகும் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம்

  ''ராஜுமுருகன்இயக்கிய 'ஜோக்கர்' படத்தை தயாரித்த நிறுவனம் தான் 'ஜப்பான்' படத்தையும் தயாரித்து வருகிறது. கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல், 'புஷ்பா' சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தூத்துக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் கொடைக்கானலிலும் நடந்தது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூலுக்காக வட இந்திய பகுதிகளுக்கு கடந்த மாதமே செல்ல வேண்டியது. ஆனால், திடீரென 'இந்தியன் 2' படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அதில் இருக்க வேண்டிய சூழல் உருவானது. 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து கார்த்தியும், ரவிவர்மனும் நெருங்கிய நட்பில் இருக்கின்றனர். அந்த நட்பில் 'ஜப்பான்' படத்தில் இன்னும் இறுக்கமானது. இதனால் 'இந்தியன் 2'வை ரவி வர்மன் முடித்துவிட்டு வந்த பிறகு 'ஜப்பான்' படப்பிடிப்பை தொடரலாம் என கார்த்தியும் முடிவெடுத்துவிட்டார். இந்த இடைவெளியில் தேதிகளை வீணடிக்காமல், உடனடியாக நலன் குமாரசாமியின் படத்தையும் தொடங்கிவிட்டார். அதன்…
Read More
மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின்  இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

  “சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி…
Read More
ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என…
Read More