“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும்…
Read More
கமல்ஹாசன் தலைமையில் அப்துல் ஹமீது  புத்தகம் வெளியீடு

கமல்ஹாசன் தலைமையில் அப்துல் ஹமீது புத்தகம் வெளியீடு

வானலையில் ஒரு வழிபோக்கன் என்ற தலைப்பில் சிலோன் வானொலியின் பி.எச்.அப்துல் ஹமீது எழுதிய புத்தகம் வெளியிடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.  இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக்ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது உடனான நீண்ட கால தொடர்பை அவர் நினைவு கூர்ந்தார். பி. சுசீலா பேசும் போது, ஒரு ஒலிபரப்பாளர் பலராலும் பாராட்டப்படுவது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்பின் ஆழத்தை பாராட்டிய அவர், தானும் ஒரு தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட போதிலும் , தமிழ்ப் பாடல்களை ஒழுங்காகவும், கச்சிதமாகவும் பாடியதாகக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது தனது நன்றி உரையில், ஒலிபரப்பாளராகவும், நடிகராகவும் மற்றும்…
Read More
செம்பி இசை வெளியீட்டு விழா !!!

செம்பி இசை வெளியீட்டு விழா !!!

  Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நடிகை கோவை சரளா பேசியதாவது... இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து…
Read More
‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்

‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்

  ‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள் “பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவினருடன் சென்னையில் பார்வையிட்டார். படத்தைப் பார்த்தபின் அவர் பேசுகையில்,“ ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக…
Read More
உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!

  இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்) இணைந்து தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில், உலக நாயகன் கமல்ஹாசனுடன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்தது. உலக நாயகன் கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம், பிரமாண்ட ஆக்சன் காட்சிகள், பரபரப்பான திரைக்கதை, நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு என இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இதுவரையிலான பல திரைச்சாதனைகளை முறியடித்து, இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக உதயநிதி ஸ்டாலின்…
Read More
முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலயே மக்கள் உடம்புல இருந்து பிரிக்க முடியாத ரெண்டு விசயம் அரசியல் அப்புறம் சினிமா. ஆனா இந்த ரெண்டையும் தாண்டி இங்க இருக்க ஆளுங்கள கட்டி போட்டு, உணர்வுகளா நம்ம எல்லோரையும் ஒண்ணா பிணைக்கிற ஒரு விஷயம் கிரிக்கெட் சுதந்திரத்திற்கு பின்னாடி உலக நாடுகள் மத்தியில நம்ம நாட்ட தலை நிமிர வைத்த சம்பவம் தான் 83 உலககோப்பையை இந்தியா வென்ற தருணம். வரலாற்றுல இன்னைக்கும் ஒரு பொன் தருணமா இருக்கிற சம்பவம் தான் 83 கிரிக்கெட் உலககோப்பை. வரலாற்று சம்பவமாக இருக்கட்டும், உண்மை நிகழ்வாக இருக்கட்டும், வலி நிறைந்த வாழ்கையா இருக்கட்டும், இல்ல காவியமா இருக்கட்டும், அது சினிமாவா எடுக்கபடும் போது, அது வெறும் கதை தான். அது ஆழமான சம்பவம்னு யாரும் ரெண்டு நிமிஷம் எக்ஸ்ட்றா கைதட்ட மாட்டாங்க. இப்படி இருக்க நிலைமைல ஒரு கிரிக்கெட் டீம், அது வேலைக்கே ஆகாது, இதுவரையும் அந்த டீம்…
Read More