ஷுட்டிங்க் துவங்கிய  பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம் !

ஷுட்டிங்க் துவங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம் !

  18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். 'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர் சதீஷ் சூர்யா. இந்த புதிய பயணம் குறித்து தனது…
Read More
அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

  எழுத்து இயக்கம் - இரா சரவணன் நடிப்பு - ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி கதை - பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை. கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும்…
Read More
தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை விவசாயி அன்பாக குழந்தை போல் வளர்க்கும் மாடுகள் திடீரென காணமல் போகிறது. அதனை தேடப்போக அது மீடியா, அரசியல் பிரச்சனை என மாறி, அந்த குக்கிராமமே தமிழ்நாட்டின் கவனத்திற்கு உள்ளாகிறது. இறுதியில் அந்த ஏழைக்கு மாடு கிடைத்ததா என்பதே கதை. ஒரு கிராமம், ஒரு ஏழை விவசாயி அவனது மாடு அதன் பின்னணியில் ஒரு அரசியலையும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் நையாண்டி வகையில் சாட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை. அமீர்கானின் peepli live, தமிழில் வந்த ‘காக்கா முட்டை’ போல வந்திருக்க வேண்டிய படம். ஆனால் எந்த ஓர் ஈர்ப்பும் இல்லாத திரைக்கதையாக மாறியதோடல்லாமல், அமெச்சூர்தனமான மேக்கிங்கில் பாதியில் கவிழ்ந்த கப்பலாகி…
Read More
நான் இப்போ ரெகுலரா ஜிம்முக்கு போறேன்! – ஜோதிகா

நான் இப்போ ரெகுலரா ஜிம்முக்கு போறேன்! – ஜோதிகா

36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்.. வரும் செப்-15ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்த மகளிர் மட்டும் நாயகி ஜோதிகாவிடம் படம் குறித்து கேட்ட போது, “மகளிர் மட்டும் ரோட்- ட்ரிப்பில் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பது தான் கதை… இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி , சரண்யா பொன்வண்ணன் , பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படப் பிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடிய…
Read More
நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா',பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% காதல்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது. இவற்றில் ‘நாச்ச்சியா’  நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘ இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட் விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த  ‘நாச்சியார்’ படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிர காஷ் குமார் திருடனாக…
Read More
error: Content is protected !!