மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.  கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...'…
Read More
அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர்  சிவா அப்செட்!

அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர் சிவா அப்செட்!

திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் அஜித்துக்கு சிலை அமைக்க, அவருடைய ரசிகர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்கள். மேலும், அஜித் சிலையின் புகைப்படங்களும் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக "அஜித்துக்கு சிலை வைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே. இது குறித்து அஜித்திடம் ஏதேனும் பேசியுள்ளீர்களா" என இயக்குநர் சிவாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, "அஜித் சாருக்கு இது சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சார் எப்போதும் சொல்வது ஒன்று தான். அம்மா, அப்பா, பார்க்கும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்றது அனைத்துமே. நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருந்து ஒரு சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஜெயிப்பது மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும்.…
Read More
‘தரமணி’  படத்துக்கு A  சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

‘தரமணி’ படத்துக்கு A சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர். ஆம். ’கற்றது தமிழ்’ ராம் படைத்துள்ள  தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம். இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார். ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்றுதான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது.. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க," என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது தரமணி. ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது…
Read More
லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘ஹெளஸ் ஓனர்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். தமிழ் பெயர், வரிவிலக்கு மாதிரியான பஞ்சாயத்து எல்லாம் இனிமே கிடையாது என்பதால் இப்படி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டாராம்.அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் " ஹௌஸ் ஓனர்" ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறினார். அவரிடம் மேலும் படம் பற்றி கேட்ட போது" நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று…
Read More