‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர் !!

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர் !!

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர். ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க…
Read More
இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ' சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது... இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த 'தமிழ்க்குடிமகன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக 'தமிழ்க்குடிமகன்' இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த…
Read More
பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கனீர் குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் பெற்ற பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அட்வைஸ் பன்ன சென்று அவரிடம் கொட்டு வாங்கிட்டு வரும் காட்சி அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தில் இவர் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனைவி மற்றும்…
Read More
அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.…
Read More
“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் –  தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. தமிழின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  “நிலமெல்லாம் ரத்தம்” எனும்  ஜீ5 பிரத்யேக தொடரை அறிவித்தார்.  இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில்  ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர்,  நடிகை ராதிகா…
Read More
கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

‘ஆமா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் வீரன் குறிச்சு நம்ம  கட்டிங் கண்ணையா சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிறக்காக தயார் செய்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ” நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைஞ்சுது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் வெளியான தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப்…
Read More
சூரியை வைத்து ஒரு படம் செய்யவுள்ளேன் – இயக்குநர் அமீர் !

சூரியை வைத்து ஒரு படம் செய்யவுள்ளேன் – இயக்குநர் அமீர் !

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இவ்விழாவினில் இயக்குநர் அமீர் பேசியதாவது… இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா. ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா. பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின்…
Read More
அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் முதலாக குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்து திறமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தைத் தான் இயக்கியிருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ளதாகக்.கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதுகிறாராம். வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகறார். அந்தப் படத்திலும் சூரி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது அமீர் படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக சூரியை இனி ஹீரோவாக மட்டுமே பார்க்கலாம் போலிருக்கிறது.
Read More
அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாற்காலி’. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தை ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற எம்.ஜி.ஆர் பாடல் இடம்பெறுகிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாற்காலி’ படத்தின் ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடல் குறுந்தகடை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=Xj9aju_o7IE&feature=youtu.be
Read More