எப்படி இருக்கிறது  டியர் திரைப்படம் ?

எப்படி இருக்கிறது டியர் திரைப்படம் ?

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர். சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!! நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில்…
Read More
வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை நந்தினி பேசியதாவது.... இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் இளவரசு பேசியதாவது.,, பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன…
Read More
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகி பாபு நடிக்கும் சிஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலர் வெளியிட்டனர்!

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகி பாபு நடிக்கும் சிஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலர் வெளியிட்டனர்!

Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெரும் பொருட்செலவில், அனைத்து வயதினரும்…
Read More
கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

  2023 ஆம் ஆண்டு, பெண்கள் செயலில் ஈடுபடும் ஆண்டாகும். இந்த முன்னணிப் பெண்கள் சினிமாவில் செயல்பாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல், முன்மாதிரிகளாகவும், ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்த ஆண்டு, திரையுலகில் புயலைக் கிளப்பிய ஆற்றல்மிக்க மற்றும் திறமையான நடிகைகளின் நட்சத்திர வரிசையுடன் பெரிய திரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கத்ரீனா கைஃப் மற்றும் ப்ரி லார்சன் ஆகியோர் ஆக்‌ஷன்-பேக் செய்யப்பட்ட காட்சிகள் முதல் சக்திவாய்ந்த நடிப்பு வரை, அவர்களின் நகர்வுகளால் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், அதிரடி-நிரம்பிய நடிப்பால் வசீகரிக்கிறார்கள். நயன்தாரா நயன்தாரா தென் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் தனது தாக்கமான நடிப்பிற்காக அறியப்பட்டவர். நடிகை சமீபத்தில் அட்லீயின் ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், SRK உடன் இணைந்து ஒரு திடமான குத்துகளை பேக் செய்தார். நடிகை தனது…
Read More
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்

  ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும். இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். ஹெல்ப்…
Read More
30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடகள போட்டியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்! ஆர்யா மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்!

30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடகள போட்டியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்! ஆர்யா மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XX Chennai District Masters Athletic Championship 2023" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது திரு மயில்வாகனன் IPS, திரு MP லக்‌ஷ்மிபதி துவக்கிவைத்த இந்த போட்டியின் முதல் நாளில் (செப்டம்பர் 23, 2023) நடிகர் இயக்குனர் SJ சூர்யா, நடிகர் ஆர்யா, நடிகர் சித்தார்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேஜு அஷ்வினி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர். விருதுகள் விவரம் 60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி…
Read More
ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டியர்’ பட அப்டேட்!

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டியர்’ பட அப்டேட்!

  Nutmeg Productions தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.…
Read More
‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

  லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்…
Read More
சொப்பன சுந்தரி காரை யாரு வச்சுருக்கா?

சொப்பன சுந்தரி காரை யாரு வச்சுருக்கா?

சொப்பன சுந்தரி திரை விமர்சனம் இயக்குனர் - எஸ் ஜி சார்லஸ் நடிகர்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் , லக்ஷ்மி ப்ரியா , தீபா ஷங்கர் , கருணாகரன் ஒளிப்பதிவு - பால முருகன் , ராஜ கோபாலன் இசை - விஷால் சந்திரசேகர் தயாரிப்பு - பாலாஜி சுப்பு விவேக் , ரவிச்சந்த்ரன் தன்னுடைய உடன் பிறந்த அண்ணன் கல்யாணத்துக்கு பின் குடும்பத்தை கைவிட்டு விட, தனது அம்மா , வாய் பேச முடியாத அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.இந்த நிலையில்தான் அவருக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. இதைத்தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்.காரை தனதாக்கி கொள்ள முயற்சிக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம். இறுதியில் அந்தக்கார் யாருக்குச் சென்றது?அதனால் வந்த…
Read More
‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன்…
Read More