ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமானபோதே, அவருக்கு, 'கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்' தொடங்கிய மதுரை முத்துமணி காலமானார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன் கேனரி முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி விட்டாலும், முதல் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணி மீது ரஜினிக்கு எப்போதுமே தனிப் ப்ரியம் உண்டு. மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் முன்பொரு முறை பேசிய போது. “மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அதில் ரஜினி மொத்தமே 20 நிமிசங்கதான் வருவார். அதுவும் ப்ளட் கேன்சர் பேஷண்டா, சாவோடு போராடும் ரோல்ம். ஆனால் அவர் கேட்டைத் திறந்துகிட்டு அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்பவே என்னை என்னவோ…
Read More
நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவதால் மீடியாக்கள் மூலம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கிளப்பப்படு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி  யான தந்தி டிவிக்கு  அவர் அளித்த பேட்டியில் , “நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக் கூடாது என்பதால் அதை சுட்டிக் காட்டுகிறேன்.னது கருத்து அரசியல் தொடர்பானது, அதிமுக பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும் என்றார். மேலும்  அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:-  கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:-…
Read More
ரஜினி வழியில் சல்மான்கான் – விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி  அளிக்கிறார்!

ரஜினி வழியில் சல்மான்கான் – விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கிறார்!

கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'டியூப்லைட்'. ஜூன் 23-ம் தேதி வெளியான இப்படத்தை சல்மான்கான் மற்றும் கபீர்கான் இருவரும் இணைந்து தயாரித்தி ருந்தார்கள். இ ப்படம் வெளியான நாள் முதலே, மோசமான விமர்சனங்களைப் பெற்று தந்தது. மேலும், மக்களிடமும் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ச்சியாக வசூலும் இறங்கு முகத்திலேயே இருந்தது. சமீபத்தில் வெளியான சல்மான்கான் படங்களில் படுதோல்வியை சந்தித்த படம் என்று பாலிவுட் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிலையில், 'டியூப்லைட்' படத்தை வாங்கி விநியோகித்து நஷ்டமடைந்த விநியோ கஸ்தர்க ளுக்கு, பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார் சல்மான்கான். இதனால் விநியோகஸ்த ர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளார்கள். இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பாலிவுட் வர்த்தக நிபுணர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். முன்னதாக கோலிவுட்டில் இது போறு விநியோகச்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 'டியூப்லைட்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில், விமர்சகர்களை கடுமையாக சாடினார் சல்மான்கான்.…
Read More
எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் ‘2.0’ ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதாவது ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்துதான் இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது: "400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.“டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில்…
Read More
ரஜினிகாந்த் மகளுக்கு  டைவோர்ஸ் கிடைச்சுடுச்சிடுச்சு!

ரஜினிகாந்த் மகளுக்கு டைவோர்ஸ் கிடைச்சுடுச்சிடுச்சு!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஸ்பரம்  விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமா படம் தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டார். அவர் தயாரிப்பில் கோவா என்ற திரைப்படம் வெளிவந்தது. இதற்கிடையே, அஸ்வின் -  சௌந்தர்யா தம்பதியிடையே முதலில் திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் எற்பட்டது. இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் இந்த பிரச்சினை தீரவில்லை. பிரசவத்திக்கு…
Read More
விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் பேசும் போது, “ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும் .ஊடகங்கள் திரைப்படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் விமர்சனம் எழுதுவது உங்கள் வேலை, உங்கள் உரிமை…
Read More
ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ்  ரூ 110 கோடி மட்டுமே?!

ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ் ரூ 110 கோடி மட்டுமே?!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 450 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பது உறுதியான தகவல். அதேசமயம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% நிறைவடைந்துள்ளதாம். இதை ஷங்கரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாடல் மற்றும் பேட்ச் வர்க் மட்டுமே மீதியுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ. 110 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து இந்த டீலை முடித்திருக்கிறதாம்.இந்த தகவலை தயாரிப்பு நிர்வாகி ராஜூ மகாலிங்கமும் உறுதிப்படுத்தி உள்ளார்
Read More