விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ளது விடுதலை 2 திரைப்படம். விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து துவங்கி அப்படியே ஆரம்பித்து வாத்தியாரின் வாழ்க்கை கதையை சொல்கிறது விடுதலை 2. வாத்தியார் கைதுக்கு பிறகு காவலதிகாரி, கலக்டர், அமைச்சர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அந்த கைதை எப்படி அறிவிக்கலாம் என விவாதிக்கிறார்கள். கைது விவரம் வெளியில் பரவ அதை தடுக்க நினைத்து, வாத்தியார் விஜய் சேதுபதியை, காட்டுக்குள் சிறு குழுவை வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள், ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன?…
Read More
தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ?

தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ?

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் சென்னைக்கு பல முகங்கள் உண்டு பல கதைகளும் உண்டு ஆனால் வட சென்னை பற்றி எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இதுவரை தென் சென்னை பற்றி யாரும் படமெடுக்கவில்லை. அந்தக்குறையை போக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது? சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் ஒரு ஹோட்டலை உருவக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும்…
Read More
கிராமியக்கலையை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் ”டப்பாங்குத்து” !!

கிராமியக்கலையை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் ”டப்பாங்குத்து” !!

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, S ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்து வீரா இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் ''டப்பாங்குத்து''. தமிழகம் மறந்து விட்ட தெருக்கூத்து கலையை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் இது. தமிழகத்துக்கென பல கலைகள் இருந்தது ஏன் சினிமா பிறந்ததே நாடகக்கலையில் இருந்து தான், ஆனால் அந்த நாடகமே தெருக்கூத்தில் இருந்து தான் பிறந்தது தான். நம் நவீன வாழ்வியல் காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும், இந்த தெருக்கூத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது இந்த படைப்பு. மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட…
Read More
தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

சொர்க்கவாசல் இன்று முதல் திரையரங்குகளில் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இது தான் படத்தின் மையம். அப்பாவி ஒருவன் அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டால் என்னாகும்? என்பது தான் ஒன் லைன். உண்மை சம்பவங்களை டீடெயிலான திரைக்கதையாக்கி, அட்டகாசமான படமாகத் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஆனால் தமிழில் அது பெரிதாக நடந்ததே இல்லை. இங்கு உண்மையைச் சொன்னால், பிரச்சனை வந்து விடும். மூலைக்கு மூலை நியாயவான்கள் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அசுர உழைப்புடன் பக்கா டீடெயிலுடன், ஒரு அருமையான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள் சொர்க்கவாசல் படக்குழுவினர். டிரெய்லர் பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்தீர்களானால், படத்தை கண்டிப்பாக பார்த்து விடுங்கள் படம் உங்களை ஏமாற்றாது. ஜெயிக் கலவரம் ஒரு கேயாஸ்! அதைச்சுற்றி கதை எழுதும்போது, எக்கசக்க கேரக்டர் இருக்கும், அதை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுவது, இன்னும் கஷ்டம், இதில் விசாரணை வழியே அந்த கலவரத்தின் பின்னணியை அலசுவதாக திரைக்கதையை…
Read More
’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’  – விமர்சனம்  

’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’  – விமர்சனம்  

  ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காதல் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தது இப்போது அது சுத்தமாக மறைந்து விட்டது அந்தக்குறையை போக்க வந்ந்திருக்கிறது இப்படம். அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் வந்திருக்கிறது ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. சென்னையில் இயக்குனர் பாலாஜி பரணீதரனிடம்  உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.தனியார் மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் அவந்திகா மிஸ்ராவைப் பார்த்து காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில்  அசோக் செல்வனின் தோழி மதுமிலா கருக்கலைப்பு செய்வதற்காக தன்னுடன் கணவனாக நடிக்கும்படி கேட்கிறார் அசோக் செல்வன் நான்தான் கணவன் என பொய் கூறி அந்த கருவை கலைப்பதற்கு உதவி செய்கிறார். இந்த விஷயம் காதலியான அவந்திகா மிஷ்ராவுக்கு தெரியா வருகிறது. இதனால் கோபமடையம்  அவந்திகா, அசோக் செல்வனை விட்டு பிரிந்து விடுகிறார்.  இறுதியில்…
Read More
சிரிக்க வைக்கிறதா ?  ஜாலியோ ஜிம்கானா?

சிரிக்க வைக்கிறதா ? ஜாலியோ ஜிம்கானா?

இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருக்கும் ஜாலியோ ஜிம்கானா படம். இயக்குநர் சக்தி சிதம்பரம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களையே இதுவரை தந்துள்ளார். அவருக்கு தீவிரமான கதை சொல்லல் பாணியெல்லாம் சரி பட்டு வராது. முழுக்க முழுக்க கலாட்டா காமெடியுடன் சிரிக்க சிரிக்க கதை சொல்லி அசத்தி விடுவார். அந்த வகையில் இந்த படம் திருப்தி செய்கிறதா ? படத்தில் பவானியின் குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். அதை அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே…
Read More
சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

தமிழில் நல்ல இயக்குநர் என பெயர் வாங்கியிருக்கும் இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்ததில் வந்துள்ள படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டத்தில்  அருகே உள்ள  கிராமத்தில்  சாலைக்கு ஒரு புறத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரி சங்கர் மறுபுறம் வேறு சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வாழ்ந்து வருகிறார்கள். அதே கிராமத்தில் இருவரும் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் நாயகி சங்கீதா  இதே ஊரில் பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டை, தண்ணீர் தொட்டி பிரச்சனை இரு ஊருக்கும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் ஜூஸ் நிறுவனத்திற்கு  இரு சாதியினை சேர்ந்த  மக்களும் 3 மாத வேலைக்காக செல்கின்றனர். இதே சமயம் ஹீரோ ஹரி சங்கரை மற்றொரு வகுப்பைச் சேர்ந்த ப்ரேம்நாத் கர்நாடகாவில்…
Read More
பணி – மூவி லவ்வர்ஸுக்கு Treat !!

பணி – மூவி லவ்வர்ஸுக்கு Treat !!

மலையாளத்தில் பிரபல நடிகராக புகழ் பெற்றிருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் பணி. அவரும் நிறைய கொரிய படங்கள் பார்ப்பார் போல.. இந்தப்படம் அப்படியே அச்சு அசலாக ஒரு கொரியன் டார்க் ஆக்சன் திரில்லர் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. படம் முழுக்கவே கொரியன் பட ஸ்டைலில் அதே மாதிரி தான் எடுக்கப்பட்டிருக்கிறது. திருச்சூர் பகுதியில் ஒரு பெரிய குடும்பம் அந்த ஏரியாவில் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பம், ஐந்து பேர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், உறவாகி ஒன்றாக வாழ்கிறார்கள். கிட்டதட்ட டான் குடும்பம். அப்படிபட்ட ஜோஜு ஜார்ஜிடம் புதிதாக முளைத்த இரண்டு சைக்கோ இளைஞர்கள் தெரிந்தே கை வைத்து விட்டு? ஓடிப்போய் விடுகிறார்கள். ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் ஜோஜு குடும்பம் என, அவர்களைத் தேடுகிறது. இன்னொரு பக்கம் சைக்கோ இளைஞர்களின் கொட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. எப்போதடா ஹீரோ கையில் சிக்குவார்கள் என…
Read More
நிறங்கள் மூன்று திரைப்படம் எப்படி இருக்கிறது ?

நிறங்கள் மூன்று திரைப்படம் எப்படி இருக்கிறது ?

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அடுத்தடுத்து சரியான படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறினார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வா முரளி, அம்மு அபிராமி சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா, ரகுமான், சரத்குமார் என மூவருப் கதைகளை ஆந்தாலஜி போல தனித்தனியாக சொல்லி அதை இறுதியில் இணைத்திருக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஶ்ரீஜித் சரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அதை இந்தப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா என்றால் பாதிகிணறு தாண்டிய கதைதான் கார்த்திக் நரேனிடன் சினிமா தொழில் நுட்பம் அறிந்த நல்ல மேக்கிங் இருக்கிறது.…
Read More
மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2 !!

மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2 !!

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, வரலாற்றுக் காவியப்படம், கிளாடியேட்டர் ரிட்லி ஸ்காட் இயக்கி, ரஸ்ஸல் க்ரோவின் சிறப்பான நடிப்பில்2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரோமானிய பேரரசின் காலகட்டத்தில் மனிதர்களை மிருகங்களாக, அடிமைகளாக பயன்படுத்தி, நடந்த கிளாடியேட்டர் விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து வந்த படம் ஆஸ்கர் விருது வரை கலக்கியது. கிளாடியேட்டராகும் வஞ்சிக்கப்பட்ட படைத்தலைவன் மேக்சிமஸ், தனது குடும்பத்தினருக்காகப் ரோமப் பேரரசை பழிவாங்க , முயற்சிப்பது தான் அப்படத்தின் மையக்கரு. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த செளண்ட் எஃபெக்ட்ஸ், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் 73 ஆவது அகாடெமி விருதுகளை வென்றது. முதல் பாகம் நிகழ்ந்தேறிய 16 வருடங்களுப் பிறகு, இப்படத்தின் கதை துவங்குகிறது. மேக்சிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆகின்றான். அவனது மனைவியை ரோமப் பேரரசின் படைத்தலைவனான மார்கஸ்…
Read More