தேவதாஸுக்கு இன்றும் உயிர்ப்பு இருக்கிறது!

தேவதாஸுக்கு இன்றும் உயிர்ப்பு இருக்கிறது!

ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, அமராவதி – அம்பிகாபதி, ஷாஜகான் – மும்தாஜ் ஆகிய காதலர்கள் வரிசையில் தேவதாஸ் – பார்வதி காதலர்களும் இணைந்துள்ளனர்.வரலாறு மற்றும் புராண காதல் ஜோடிகளோடு திரைப்படத்தில் வந்த ஒரு காதல் ஜோடியும் இணைத்து வைத்து பேசப்படுவது திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்த கலைஞர் களின் வெற்றியுமாகும். 1953ம் ஆண்டின் வெளியான தேவதாஸ் படத்தின் கதாநாயகன் நாகேஸ்வர ராவ். இன்றைக்கும் யாராவது காதலில் தோல்வியடைந்து தாடி வைத்திருந்தால், என்ன பெரிய தேவதாஸ் என்று நினைப்போ என்று கேட்கப்படுகிறது. இவ்வாறு  கேட்பவர் களில் பலர் தேவதாஸ் படத்தைக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் காதல் தோல்விக்கு அடையாளமாக தேவதாஸ் மாறிப் போய்விட்டான். தமிழ் சினிமாவில் காதல் தோல்வி படங்கள் எத்தனையோ வந்திருக் கின்றன. ஆனால் அத்தனைக்கும் மூலப் பிரதியாக விளங்குவது தேவதாஸ்தான். இந்த படத்தில் இடம் பெற்ற, ‘உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையேது…
Read More
சாண்டோ சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்.அதிலும் தமிழ் திரையுலக வரலாற்றில் முத்திரை பதித்துச்சென்ற தயாரிப்பாளர்கள் பலர் இருந் தாலும் ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் பட்டியலிடும் முதல் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பதேவர். கோயம்புத்தூரை தாய்மண்ணாக கொண்ட சாதாரண ஒரு மில் தொழிலாளியான தேவர், தற்காப்புக் காக கற்று வைத்திருந்த மல்யுத்த கலைதான் அவரை கலையுலகத்துக்குள் கொண்டு வந்தது. அபார உடல்க ட்டும், மல்யுத்தம் போன்ற கலைகளையும் அறிந்தவர்களை சாண்டோ என்று அழைப்பார்கள். பின்னாளில் அதுவே அவருக்கு அடைமொழியாகவும் மாறிப்போனது. 1940-ல் வெளிவந்த திலோத்தமா என்கிற படத்தில் சின்னப்பதேவர் மல்யுத்த வீரனாக ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். பிறகு எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டு அவர் ஹீரோவாக…
Read More
வியட்நாம் வீடு சுந்தரம்!

வியட்நாம் வீடு சுந்தரம்!

இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவர் சுந்தரம். தமிழ் திரையில் குடும்பப் பாங்கான கதைகளும், புராண, வரலாற்று கதைகளும் மறக்க முடியாத தெறிக்க விடும் வசனங்களும் தனியிடம் பிடித்திருந்த அந்தக் காலத்துத் திரைப்படங்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். தமிழ் சினிமா நாடகத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடாத அந்தக் காலகட்டத்தில் நாடக அரங்கிலிருந்து சினிமாவுக்கு வந்த திறமைசாலிகளில் ஒருவர் சுந்தரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1970-ல் வெளியான ‘வியட்நாம் வீடு’ படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர். இவர் பி.கே.சிவசாமி, தர்மாம்பாள் இணையரின் மகனாக 1943-ம் ஆண்டு ஜூலை 31 அன்று தஞ்சாவூரில் பிறந்தார்.தாயாரின் ஊரான தஞ்சையில் தொடக்கக் கல்வி பயின்ற சுந்தரம் தந்தையின் ஊரான திருச்சியில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலையில் சேர்ந்தார். சென்னையில் டன்லப் டயர் கம்பெனியில்…
Read More
“நடிகையர் திலகம்” சாவித்திரி – ரியல் ஸ்டோரி தெரியுமா?

“நடிகையர் திலகம்” சாவித்திரி – ரியல் ஸ்டோரி தெரியுமா?

ஹைடெக்காகிப் போய் செல்போனில் உலகை வைத்துள்ள இப்போதைய தலைமுறயினரில் பலருக்கும் தெரியாத பெயர் சாவித்திரி. நம் தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்ட இவர் ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றவராக்கும். தயாரிப்பாளர், இயக்குநராகவும் கூட பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று கூட அழைக்கப்பட்டார். அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்தான் சாவித்திரி. ஆம்.. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் சாவித்திரி. அதிலும் முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில், ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில், பெண் கதா…
Read More
தமிழ்த் திரையுலகின் அம்புலிமாமா ’ராம நாராயணன்’!

தமிழ்த் திரையுலகின் அம்புலிமாமா ’ராம நாராயணன்’!

குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி மாறன், குமார ராஜா, வசந்த பாலன் என்று அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதே சமுதாயத்திடம் சற்று காலங்கள் பின்னோக்கி, இதே கேள்வியை கேட்டுப் பார்த்தால், கண்டிப்பாக ராம நாராயணன்  அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகித்திருப்பார். ராம நாராயணன்... இவர் குழந்தைகளின் இயக்குநர். இன்றையச் சூழலில் மார்வெல், டி.சீ.காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் மிகுந்த பிரபலமாகிவிட்டது. சிறுவர்கள் அயர்ன் மேன், ஸ்பைடேர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை எல்லாம் பார்த்து திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1980களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை சென்று பார்த்தோமானால், அன்றைய சூழலில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ ராமசாமி'யாக வரும் யானை நாகேஸ்வரியாக வரும் பாம்பு.…
Read More
“சோகங்களின் அரசி” மீனாகுமாரி !

“சோகங்களின் அரசி” மீனாகுமாரி !

இந்தி திரையுலகில் “சோகங்களின் அரசி” (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பத்து ஐந்து ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும். வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து கொள்வதற்குமுன் இக்பால்பேகம் என்ற பெயரி ல் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறி னார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும் பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ அருகில் குடியிருந் ததால் இவர்களது இரண்டாவது சிறிய பெண் குழந்தை மஹா ஜாபீன் ஸ்டுடியோ அருகில் விளையாட செல்வதுண்டு. எதிர்பார்த் தபடி இசைத் துறையில் வாய்ப்பு கிடைக்காததால் குடும்பத்தை காப் பாற்ற வழி தெரியாமல் அலி பக்ஸ் தவித்தார். சிறுவயதிலேயே தனது மூன்று மகள்களையும் சினிமாவில்…
Read More
டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த நாளின்று

டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த நாளின்று

தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். செளந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு இதே மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக் கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அதிலும் தன் திறமையை மெருகேற்றிக் கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக…
Read More
மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான  ரகுவரன்!

மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான ரகுவரன்!

ரகுவரன்- மிகப்பெரிய, யாரும் எதிர்பார்க்க முடியாத திறமைகளுக்குச் சொந்தக்காரர். சினிமா ரசிகர் ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரிந்தவரும் கூட. 1980-ல் திரைப்படக் கல்லூரி மாணவராயிருந்த ஹரிஹரன், தனது சக மாணவரான ரகுவரனை வைத்து இயக்கிய படம் ஏழாவது மனிதன். தொழிற்சாலைக் கழிவுகளின் கெடுதலை விளக்கிய அந்தப் படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்து ஸ்ரீதர் இயக்கிய ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் சுமலதாவின் ஜோடியாக நடித்தார். இளையராஜாவின் நல்ல பாடல்கள், ஸ்ரீதரின் திரைக்கதை என எல்லாம் இரும்தும் வணிக ரீதியான வெற்றி கிட்டவில்லை அந்தப் படத்துக்கு. பின்னர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் இந்திரகுமாரி தயாரித்த ‘நீ தொடும்போது’ எனும் படத்தில் ராஜேஷ் – லட்சுமியுடன் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற ஏவிஎம்மின் 13 வார தொடர் ஒன்றில் நடித்தார். தனியார் தொலைக்காட்சிகள் வராத அந்த நாட்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.மீண்டும் ஏவிஎம்மின்…
Read More
காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழும் கே.வி. மகாதேவன்

காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழும் கே.வி. மகாதேவன்

சிறுவயதிலேயே நாடக மேடையில் ஏறிய கே.வி.மகாதேவன், பிறகு துணை இசை அமைப்பாளராகப் பணிபுரிந்து, இசை அமைப்பாளராக உயர்ந்தார். கே.வி.மகாதேவனின் சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் ஆகும். தந்தை - வெங்கடாசலம். தாயார்- லட்சுமி அம்மாள். மகாதேவனின் தந்தை வெங்கடாசலம், இசைஞானம் உடையவர். அதனால் சிறு வயதிலேயே மகாதேவன் தந்தையிடம் பாடக்கற்றுக் கொண்டார். பின்னர் திருச்சியில், விஸ்வநாத பாகவதரிடம் பயிற்சி பெற்று, மேடை கச்சேரிகளில் பாடினார். அந்த காலத்தில் பார்க்க அழகாக இருந்து, பாடவும் தெரிந்த சிறுவர்களை பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி டி.வி.சாரி என்பவர் மகாதேவனை சென்னைக்கு அழைத்து வந்து, பாலகந்தர்வகானசபா'வில் சேர்த்து விட்டார். அப்போது மகாதேவனுக்கு 13 வயது. 'சந்திராவளி' என்ற நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தார். பின்னர், மற்ற கம்பெனி நாடகங்களிலும் நடித்தார். பெங்களூரில் நாடகம் நடிக்கச் சென்றபோது, உடன் வந்த நடிகர்கள் மகாதேவனை விட்டு விட்டு சென்று விட்டனர். அங்கிருந்து டிக்கெட்…
Read More
சூர்யா-வை மூன்றாவது முறை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!

சூர்யா-வை மூன்றாவது முறை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!

செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார். கே.வி.ஆனந்த் இது குறித்து, ‘தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும அறிவித்துள்ளதோடு இந்த படத்தில் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கலை இயக்குனர் கிரண் ஆகியோருடன் தான் பணியாற்றவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு Gavmic Ary ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். காத்திக் சுப்புராஜ இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் Gavmic Ary. இவர் இந்த படங்கள் தவிர சில ஹிந்தி…
Read More