தில்லானா மோகனாம்பாள்- திரும்பிப் பார்ப்போமா?

தில்லானா மோகனாம்பாள்- திரும்பிப் பார்ப்போமா?

சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 52 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா வழங்கும் சிறப்புக் கட்டுரை இதோ: 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா…
Read More
ரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு

ரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு

ஆக்டர் விஜய்யிடம் ஒரு முறை எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு பட்டென்று அவர் சொன்ன பதில் அண்ணாமலை. ஆம்.. தமிழில் ஹிட் அடித்த சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒரு படம் அண்ணாமலை. ரஜினிகாந்த் நடித்து கவிதாலயா தயாரிப்பில் சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவான படம் அண்ணாமலை. முதல் முதலாக தேவா இப்படத்துக்காக ரஜினிகாந்துக்கு உருவாக்கிய டைட்டில் இசை இன்றும் பல ரஜினி படங்களுக்கு டைட்டிலில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஒரு மாஸ் ஆன இசை அது. முந்தைய தலைமுறை நடிகர்கள் நடிக்க வரும்போது பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டி விட்டு நடிக்க வந்தார்கள். அடுத்த தலைமுறை முழுக்க அண்ணாமலைக்கு அடிமை. விஜய் நடிக்க வந்த புதிதில் அவர் அப்பாவிடம் நடித்து காட்டியதும் கூட அண்ணாமலை காட்சியை தான். அந்த அளவுக்கு பெரும்பாலான நடிகர்களின் ஃபேவரைட் சினிமா…
Read More
திரையுலக “மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா!

திரையுலக “மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா!

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா. தெலுங்குத் திரையுலகில் அதிகமான படங்களை இயக்கிய விட்டலாச்சாரியா, பெரும்பாலான படங்களை அவரது ‘விட்டல் புரொடக்‌ஷன்ஸ்’ மூலமாக தயாரித்தார். ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும். ஜகன் மோகினியையும் ஜெயமாலினியையும் மறக்கமுடியாத ஐயாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம் பேர் உண்டு. இவரது படங்களில் வரும் துஷ்ட தேவதைகள்…
Read More
அன்னக்கிளி ரிலீஸ் ஆன 1976ல் இளையராஜா கொடுத்த முதல் பேட்டி!

அன்னக்கிளி ரிலீஸ் ஆன 1976ல் இளையராஜா கொடுத்த முதல் பேட்டி!

அன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், 'பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில் வாசிக்கும் பேறு பெற்றேன். ‘அன்னக்கிளி’ வெளியான இன்றைய (மே 14) சிறப்புப் பதிவாய் அது அப்படியே உங்கள் பார்வைக்கென… இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களிலேயே நூறு நாட்களைத் தாண்டி, வெள்ளி விழாக்கொண்டாடும் ஒரே படம் ‘அன்னக்கிளி’. ஒரு சாதாரண கறுப்பு வெள்ளைப் படம் ஏனைய கலர்ப்படங்களை எல்லாம் மீறி வெற்றி வாகை சூடிக்கொண்டது. அதன் வெற்றிக்குரிய பல காரணங்களில் ஒன்று, இளையராஜாவின் இனிமையான இசை. இன்று நகர வீதிகளிலும், பட்டிதொட்டிகளிலும், ‘அன்னக்கிளி’ படப்பாடல்கள் எங்கு நோக்கினும் ரீங்காரமிடுகின்றன. திரையுலக இசையமைப்பாளர்கள் அறிமுகமாவது வெகுஅபூர்வம். அப்படியே அறிமுகமானவர்களில் பலருக்கு தொடர்ந்தாற்போன்ற வாய்ப்புகளும் கிடைத்ததில்லை. ஆனால் இளையராஜா அறிமுகமான முதல் படத்தின் மூலமாகவே, இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றிடாத வரவேற்பைப் பெற்றார். ‘அன்னக்கிளி’யின் பாடல்கள் கேட்டோர் மனத்தைக்…
Read More
கில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்!

கில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்!

2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. அதுவும் அந்த ஹிட். இரண்டு மாதத்திற்குள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்னியோட 16 வருஷங்கள் ஆகுதாம். இந்த கில்லி உருவானக் கதை குறித்து நம்ம கட்டிங் கண்ணையா சொன்ன சுவையான தகவல் தொகுப்பு இதோ: மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன…
Read More
சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் பட தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் !

சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் பட தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் !

நூறாண்டுகளைக் கடந்து விட்ட சினிமாவின் வளர்ர்ச்சிகளில் பலரின் அயராத உழைப்பும் அடங்கிக் கிடக்கிறது. இப்போது புதுசாக மார்கெட்டுக்கு வந்த ஒரு கேமரா-வை அல்லது டெக்னால்ஜி வசதியை ஆன் லைபில் ஆர்டர் செய்து அடுத்த நாளே உபயோகிப்போர் அதிகம் என்றாலும் முன்னொரு கால சினிமா வளர்ச்சியை பலரும் மறந்து போவதுதான் சோகம். அந்த வகையில் 1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது ஒருபக்கம். அதே சமயம் பேசும்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களோ பாம்பே, கல்கத்தா ஸ்டுடியோ முதலாளிகளின் பிடியில் இருந்தார்கள். ஒரு பேசும் படத்தை எடுக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், நளபாக கோஷ்டி, இன்ன பிற செட் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு பெரும் குழுவாக ரயிலில் நான்கு நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெரிய குழுவைக் கட்டி இழுத்துச் செல்வதும் பராமரிப்பதும் படத் தயாரிப்பாளருக்குப் பெரிய சுமையாக இருந்தது. இதனால் பேசும்படங்கள் வந்துவிட்ட பிறகும் பலர் மவுனப் படத்…
Read More
அந்தக் காலத்திலேயே  ஹாரிபாட்டர் படமெடுத்த விட்டலாச்சார்யா!

அந்தக் காலத்திலேயே ஹாரிபாட்டர் படமெடுத்த விட்டலாச்சார்யா!

சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத் தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். 'மாய மோதிரம்', 'ஜெகன் மோகினி' போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக் கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை. அதாவது நம்ம சின்ன வயதில் நம் பாட்டி சொல்லும் மந்திரக் கதைகளில் இடம்பெறும் வரிகள், ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர்…
Read More
கண்ணீர் வரவழைக்கும் யேசுதாஸ் வாழ்க்கைக் கதை!

கண்ணீர் வரவழைக்கும் யேசுதாஸ் வாழ்க்கைக் கதை!

உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத் துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளது. ஏழு முறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளாவின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒரு உச்ச்நட்சத்திரமாக மாரிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன் நிறுத்தினார். பல்வேறு கர்நாடக இசைக்கச்சேரிகளை உலகமெங்கும் நிகழ்த்தினார். இப்போதும் அவரது கச்சேரிகள் நிகழ்கின்றன. கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்க முயன்றவர்களில் முதலிடத்தில் இருப்பது யேசுதாஸே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அவரது பக்திப்பாடல்கள் இதயத்தை உருகவைப்பவை என பல பக்தர்கள் கருதுகிறார்கள். வயதையும் காலத்தையும் கடந்த, என்றும் இனிமையான பாடகராகவே அவரை அவரது பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுகிறார்கள். அதனால் அவர் குறித்து இங்கே கொடுத்திருப்பது கொஞ்சம் நீளமான பதிவுதான்…
Read More
கோலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் போட்ட நாகிரெட்டி!

கோலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் போட்ட நாகிரெட்டி!

படிக்கும் வழக்கமே குறைந்து போய் விட்ட இந்த நவீனமயமாகிவிட்ட சூழலில் மறந்து விட்ட சாதனையாளர் நாகிரெட்டி காலமான நாளின்று: சினிமாவுக்கு முன்னால் பத்திரிகை அதிபராக அதுவும் நம் சென்னையில் அச்சடித்து இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 21 மொழிகளில் (அடிசினலாக கண் பார்வையற்றோருக்காக தனி இதழ்) கொண்டு வந்த பெருமையை இது வரை யாரும் முறியடிக்கவில்லை. மேலும் சினிமா-வுக்கென தனி இதழ்கள் பொம்மை, இதழை உருவாக்கி சக்கைப்போட வைத்தவரிவர். இன்னொரு விஷயம் தெரியுமா? மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்டோகிராஃப் போடும் போது ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்திடுவார். இப்படி எழுத அவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பி. நாகி ரெட்டியார்தான். அதிலும் நம் தமிழ்த் திரையை இந்திய அளவில் கொண்டு போய் சேர்ந்த ஜாம்பவான்களில் நாகி ரெட்டியார் பங்களிப்பும் பங்கேற்பும் ரொம்பவே அதிகம். இத்தனைக்கும் வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தவர்தான் நாகிரெட்டி. ஒரு முறை, இவரின் வெங்காயம்…
Read More
தென்னிந்திய திரையுலகம் கண்ட அசாத்தியமான நடிகைகளில் ஒருவர் எஸ்.என்.லட்சுமி!

தென்னிந்திய திரையுலகம் கண்ட அசாத்தியமான நடிகைகளில் ஒருவர் எஸ்.என்.லட்சுமி!

தமிழின் சிறந்த நடிகைகளின் பட்டியலைத் தயாரித்தால் முதல் பத்துக்குள் இடம் பிடிப்பார் எஸ். என். லட்சுமி. மூன்று தலைமுறை ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்த மகத்தான நடிகை இவர். வயதானவர்களுக்கு சர்வர் சுந்தரம், துலாபாரம் முதலியன இவர் நடித்தப் படங்களில் மறக்க முடியாதவை. அதே போல் மிடில் வயதினருக்கு மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி என கமலின் பல படங்கள். பின்னர் சின்னதிரை அடிமைகளாகி போன இல்லத்தரசி களுக்கு பல தொலைக்காட்சி தொடர்கள். நகைச்சுவை, குணச்சித்திரம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் அனாயசமாக நடித்த இவர் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்.எஸ்.லட்சுமி. என்.எஸ்.கே. எம்ஜிஆர், சிவாஜி என தமிழின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் நடிப்பு மீதிருந்த காதலால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எக்கச்சக்கமான திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்துள்ள இவர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன்…
Read More