குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

‘சின்னத்தம்பி’ திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளாகியுள்ளது. அதில் பிரபுவின் அப்பாவி நடிப்பா? இளையராஜாவின் இசையா? மனோரமா வின் தாய்ப்பாசமா? எதை பற்றியும் தனித்தனியாக பேசமுடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக அன்றைய தமிழக மக்களை பேச வைத்த படமிது. 9 தியேட்டர்களில் வருடக்கணக்கில் ஓடிய படம். 27 வருடங்கள் கடந்து இன்றைக்கும் இதே சின்னதம்பி என்ற பெயரை தமிழக மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். அதில், “ 'சின்னத்தம்பி’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகி விட்டது என்பதை நம்ப முடியவே இல்லை. படம் வெளியாகி அந்த சமயத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. இந்தப் படம் வெளியான பிறகு என்மேல் நீங்கள் செலுத்திய அன்பை எப்போதும் மறக்க…
Read More
விக்ரம் நடிச்ச ஜெமினி ரிலீஸாகி இன்னியோட 21 வருஷமாச்சாமில்லே!

விக்ரம் நடிச்ச ஜெமினி ரிலீஸாகி இன்னியோட 21 வருஷமாச்சாமில்லே!

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெனிமி. படம் வெற்றி என்பதைவிட இந்த படத்தில் வந்த ஓ போடு பாடல் மாபெரும் வெற்றிபெற்று பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிபெற்றுச்சு. எங்கு பார்த்தாலும் ஓ போடு, ஓ போடு என இந்த படத்தின் பாடல்தான் ஒலிச்சுது. கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான படம்தான் ஜெமினி. விக்ரம் படத்தில் நாயகனாக நடிச்சார். வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப் படம் உறுதி செய்தது. அதிலும் தேவர் ஃபிலிம்ஸ்…
Read More
ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்.. இச்சூழலில் நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு ப்ரண்ட்சுக்கு ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுக்கலின்னா தெய்வகுத்தமாயிடுமாமில்லே.. இதோ நம் கட்டிங் கண்ணையாவி சிறப்பு கட்டுரை கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படையப்பா திரைப்படம் வெளிவந்தது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இன்றும் இந்த படத்தின் வெற்றியை #Padayappa24 என்ற ஹேஷ்டாக் உடன் சமூக வலைதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும்…
Read More
ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் இதே அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53. சில முகங்களை பார்த்தவுடன் விரும்பத் தோன்றி விடும்.. அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்து கிடந்தது. ஒரு கதா பாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா…
Read More
தங்கரின் அழகி-க்கு வயது 20

தங்கரின் அழகி-க்கு வயது 20

அழகி! தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே…
Read More
சூர்யா & ஜோ காதல் கதை By கட்டிங் கண்ணையா!

சூர்யா & ஜோ காதல் கதை By கட்டிங் கண்ணையா!

இன்னிக்கு சூர்யா & ஜோ மேரேஜ் டே-வை ஒட்டி கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்.. 1999-ம் ஆண்டு... சூர்யா -ன்னு இப்போ அழைக்கப் படுறவர் அப்போ சரவணன். ஒரு ஆக்சிடெண்ட் மாதிரி நடிக்கவந்து சூர்யாவா ஆக போராடிக்கிட்டிருந்தார் . அப்போ இங்குள்ள மீடியா பையன`அழகாத்தான் இருக்கார்... ஆனா, ஆக்சனோ, டேன்சோ சரியா வரவில்லை..! காணாமல் போய்டுவார்’ -ன்னு ஆரூடம் எழுதிக்கிட்டிருந்தாய்ங்க.. ஆனா . 5-வது படமா வந்ததுதான் `பூவெல்லாம் கேட்டுப் பார்’. இந்தப் படத்திலேதான் இந்த ஜோடி மொத மொதலா இணைஞ்சிது. ஜோதிகா இந்தப் படத்துக்கு முன்னாடி ஹிந்தியில் சில படங்கள் நடிச்சிருந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் நம்பி சென்னையில் ஹால்ட் அடிச்சிருந்தார். இச் சூழலில் ஒரு டிசம்பர் மாசம். சென்னைத் திரைப்பட நகரில் `டெஸ்ட் ஷூட்' எனப்படும் பரிசோதனைக் காட்சிகளை இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கிறார். அப்போ சூர்யாவிடம், ``சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா…
Read More
உலகம் சுற்றும் வாலிபன் !💥   ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

உலகம் சுற்றும் வாலிபன் !💥 ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

முன்னொருக் காலத்தில் -அதாவது 48 வருஷங்களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த 'உலகம் சுற்றும் வாலிபன்' இன்றைக்கு ரி ரிலீஸ் ஆகப் போகுது.. தியேட்டர்கள் திறந்து பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில் பல நாளிதழ்களில் இப்பட வெளியீடுக் குறித்த விளம்பரம் மட்டுமே இடம் பெற்ரு வருவதைக் கண்டு கோலிவுட்டே மிரண்டு போயிருக்கிறதாம்.. இனி நம்ம கட்டிங் கண்ணையா ரிப்போர்ட் , தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல். இந்தத் திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதித்த அன்னிய செலாவணியைக் காட்டிலும் கூடுதலாக செலவான விவரம் வருமானவரித்துறையிடம் இருந்துச்சாம். அது அப்போது தேசவிரோத குற்றத்திற்கு…
Read More
குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல் படம் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ சூப்பர் ஹிட் திரைப்படம் தான். இந்த படம் உருவானது குறிச்சு ஸ்டில்ஸ் ரவி ஒரு முறை கட்டிங் கண்ணையாவுக்கு அளிச்ச பேட்டியின் போது, “நான் இயக்குநர் பவித்ரனோட 2 படங்களுக்கு ஸ்டில்ஸ் ஒர்க் செஞ்சேன். அப்போது அவரிடத்தில் கோ டைரக்டரா  இருந்த ஷங்கர் எனக்கு நல்ல பழக்கம். நல்ல அறிவாளி. காமெடி சென்ஸ் உள்ளவர். அவர் தனியாக படங்களுக்கு முயற்சி செஞ்சுகிட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஏ.வெங்கடேஷுடன் என் வீட்டுக்கு வந்து ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதையை என்னிடத்தில் சொன்னார். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்துது. எக்ஸ்ட்ரார்டினரி கதையா தோன்றிச்சு. ஆனால், அதில் அதிகமாக இருந்த பிராமண…
Read More
காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

கோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்! இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிய நம் கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சிறப்புக் கட்டுரை! இந்த காதல் கோட்டை மூலம்தான் அகத்தியனுக்கு தமிழ் சினிமாவில் இயக்குநருக்கான தேசிய விருது கிடைச்சிது ஆம் 1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த படமாக’ தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், பல தமிழ் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், 42 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு முதல்முறையாக ‘சிறந்த இயக்குனர்’ என்ற விருதை, தமிழ் சினிமாவிற்காக பெற்று தமிழகத்தையே பெருமைப்பட வைத்தார் இந்த இயக்குநர் அகத்தியன்… பார்க்காத நட்பு என்பது இன்றையக் காலக்…
Read More
சுப்ரமணியபுரம் பட நினைவுகள் குறித்து சசிகுமார்!

சுப்ரமணியபுரம் பட நினைவுகள் குறித்து சசிகுமார்!

2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் டைரக்ட் & நடிச்சு, தயாரிச்சு இருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். எண்பதுகளின் மதுரையில் சுப்ரமணிபுரம் என்ற பகுதியில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’. அதன் காட்சியாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; திரைக்கதைக்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உருவாக்கிய சலனமும் தாக்கமும் தமிழ் சினிமாவைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வச்சது என்னவோ நிஜம்.இந்தப் படத்தை முடிச்சு வச்சிப்புட்டு ரிலீஸ் செய்ய அவர் பட்டப்பாடை விட சசிகுமாரிம் நண்பனாக இருந்த வீ.கே.சுந்தர் பட்ட மெனக்கெடல் இன்றைக்கும் நினைவில் உள்ளது.. இப்ப கொஞ்சம் பிகு பண்ணும் ஆர்டிஸ்ட் லிஸ்டில் சேர்ந்து விட்ட சசிகுமாரிடம் முன்னொரு காலம் நம்ம கட்டிங் கண்ணையா அடிக்கடி பேசுவது உண்டு. அந்த…
Read More
error: Content is protected !!