பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ்  நெகிழ்ச்சி!

பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ் நெகிழ்ச்சி!

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், 'பாகுபலி 2' செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள். இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் அனுப்பிய ஓர் அறிக்கையில், “இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.  என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான்…
Read More
சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும் போது, முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியின் உரிமையா ளர்கள் என்னைத் தேர்வுசெய்தி ருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார். மேலும் கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தமிழ் தலைவாஸ் அணி, புரோ கபடி லீக் தொடரில் முதல்…
Read More
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’- செப்டம்பரில் வெளியாகிறது!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’- செப்டம்பரில் வெளியாகிறது!

 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்கள். சென்னை, கொச்சின், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு இயக்குநர் ரமேஷ் கண்ணா வசனங்கள் எழுதியுள்ளார். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துவங்கவுள்ளது. செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் கதையாகும். இசை – அம்ரேஷ் பாடல்கள் – பா விஜய், விவேகா வசனம் – ரமேஷ் கண்ணா ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன் எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர் புரொடக்ஷன்…
Read More
லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘ஹெளஸ் ஓனர்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். தமிழ் பெயர், வரிவிலக்கு மாதிரியான பஞ்சாயத்து எல்லாம் இனிமே கிடையாது என்பதால் இப்படி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டாராம்.அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் " ஹௌஸ் ஓனர்" ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறினார். அவரிடம் மேலும் படம் பற்றி கேட்ட போது" நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று…
Read More
என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

கமல்ஹாசன் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சபாஷ் நாயுடு வெளிவராது என்று செய்திகள் வெளியாவதை கமல் தரப்பு மறுத்து உள்ளது. .   முன்னதாக இந்த சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு…
Read More
வீதிக்கு வந்து போராடு – என்ன மாதிரி படம்?

வீதிக்கு வந்து போராடு – என்ன மாதிரி படம்?

வி.பீப்பிள்  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘வீதிக்கு வந்து போராடு’ இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தன்னெ ழுச்சியாக போராடினர். அதிலிருந்து தமிழகத்தில் போராட்டங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குடிநீர் பிரச்னை போராட்டம், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்காக நடத்தும் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தற்போது கதிராமங்கல போராட்டம் என தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை போராட்டத்துக்கே செலவழித்து வருகின்றனர். மக்கள் உயிரை குடிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது தெரிந்திருக்கிறது. .  ஆக இப்போது பல  பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல்  தீர்க்க முடியாது என்பதுதான் இப்போதைக்கு நம்  நாட்டின் உண்மையான  நிலைமையாக  உள்ளது.  இதை  மையமாக  வைத்து  உருவாகியுள்ள  படம்தான்  இந்த ‘வீதிக்கு வந்து போராடு’ திரைப்படம். படம் குறித்து கேட்ட போது  இன்று  நம்  நாட்டில்  நாளொரு  பிரச்சினையும்,  பொழுதொரு  போராட்டமுமாக  இருந்து  வருகிறது. எதையும்  போராடியே  பெற  வேண்டியிருக்கிறது.  போராட  வேண்டியவை  நிறையவே இருக்கின்றன.…
Read More
ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகி றார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களும் உண்டுதான் . ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். ஆனால்'இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க' என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம். ரகுவரனின் சட்டையைப்பிடித்து அவரது மனைவி ஷாலினி குடிக்கலல்ல அப்பறம் என்ன ஊது என சொல்வது, பலருக்கும் கல்யாண வீடியோவை…
Read More
விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

விஜய் பாணியில் அஜித்-சிலை ரெடியாகுது!

நம்ம கோலிவுட்டில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாகக் எகிறிக்கொண்டே போகும் டாப் ஹீரோ அஜித். எந்த ஒரு நடிகருமே தங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்ததாக சரித்திரமில்லை, ஆனால் திடீரென்று "நான் எனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன். முதலில் குடும்பத்தை கவனியுங்கள்" என்று கூறிய பிறகு இவரின் ஃபேன்ஸ் கூட்டம் முன்னிலும் பல மடங்கு எகிறி விட்டதாம். இந்நிலையில் நம் தமிழின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டாடும்விதமாய் அவர்களின் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் பிறந்த நாளின் போதும் கட் அவுட், போஸ்டர், ரத்த தானம் என்று செய்து  வருகின்றனர். அதையும் தாண்டி ஒரு சிலருக்கு  ரசிகர்கள் சிலை வடித்து வரும் போக்கும் ஆரம்பித்து விட்டது. அந்த வகையில்  விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை எடுத்திருந்தனர். இதையடுத்து தர்போது கும்பகோணத்தைச் சார்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்துக்கு சிலை எடுத்து வருகின்றனர். அஜித்-தின் ‘விவேகம்’ படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று…
Read More