வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து வரும் 30ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 2,300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர். கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது.” விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. ஆனாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார். அணி விவரம்: புது…
Read More
ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் – கொஞ்சம் புது தகவல்கள்!

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் – கொஞ்சம் புது தகவல்கள்!

ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ ரிலீஸாகி சக்ஸாக ஓடி வருகிறது. இதனிடையே யங் எனர்ஜெட்டிக் ஹீரோவான ஜெயம் ரவி கைவசம் சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ மற்றும் சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதைக்களம் கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே அதிகம் பரிச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டதாம். ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் குறித்து ரசிகர்கள் புது தகவல்கள் வராதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த புது டிக் டிக் டிக்-கில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒருநாள் கூத்து' பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறாராம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்று கிறார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’…
Read More
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

சக பத்திரிகை நண்பர்  ஒருவர் குறிப்பிட்டது போல், ‘எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி... இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு... இவைதாம் 82 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையா ளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர்’ இந்த ‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடுக்கும் பொதுநல வழக்குகள் அவருக்கு ஊடக ஆதரவைத் தேடிக்கொடுத்தன. அவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அநேகமாக அனைத்து தமிழ்…
Read More
நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா',பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% காதல்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது. இவற்றில் ‘நாச்ச்சியா’  நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘ இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட் விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த  ‘நாச்சியார்’ படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிர காஷ் குமார் திருடனாக…
Read More
அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ -ஜூலை 28 ரிலீஸ் கன்ஃபார்ம்!

அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ -ஜூலை 28 ரிலீஸ் கன்ஃபார்ம்!

ஆக்ஷன் கிங்'அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28அன்று வெளி வர உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான 'நிபுணன்' திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் 'நிபுணன்' திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் 'நிபுணன்" திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். ”நிபுணன்” என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனை யாளனின் கதை தான் நிபுணன். ஹோலி வுட் படங்களை…
Read More
பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

சுமார் 500 படங்களுக்கு மேல் ஃபைனான்சியராக, விநியோகஸ்தராக புகழ்பெற்ற நிறுவனம் விஸ்வநாதனின் பரதன் பிலிம்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து பரதன் என்பவா் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பாக்கணும் போல இருக்கு.விஜய் நடித்த சுறா, பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி படங்களை இயக்கிய S.P.ராஜ்குமார் இயக்குகி இருக்கிறார். பரதன் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக திரிஷ்யம் ஹன்சிபா நடிக்க சூரி, கஞ்சாகருப்பு, லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ் மற்றும் பலா் நடிக்கும்தான் படம் பாக்கணும் போல இருக்கு. தொடர் நகைச்சுவைத் தோரணங்களுடன் சின்ன பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் காதலிக்கும் வயது எது..? கல்யாண வயது எது..? எப்போது காதலிக்க வேண்டும்..? எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை சொல்லும்விதமாக படமெடுத்திருக்கிறார் கள். அதிலும் சூரி, கஞ்சா கருப்புவின் நகைச்சுவையில் படத்தில் ஒரு சிறிய பகுதிகூட போரடிக்கவில்லை..! நாளை- வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. காமெடிக்கும், கதைக்கும் கியாரண்டியுடன் வந்திருக்கிறது. இதில் வரும் இரட்டை ஜடை கூப்பிடுதே முத்தம்மா என்ற…
Read More
‘டூ பா டூ’ 88  திரைப்பட இசையுரிமையை பெற்றுள்ளது!

‘டூ பா டூ’ 88 திரைப்பட இசையுரிமையை பெற்றுள்ளது!

சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட '88' வரும் நாளை (ஜூலை 21ம் தேதி) ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். இந்த 88 படம் பற்றி இயக்குநர் மதன் கொஞ்சம் விவரித்த போது, ““இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம்தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் இந்தப்படத்தில் அலசி இருக்கிறோம்..அதிலும் பெண்கள் எதையெல்லாம் செல்போனில் பகிரங்கமாகப் பேச கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.இதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்..” என்றார். இதனிடையே பிரபல இசை நிறுவனம் 'டூ பா டூ' இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால் '88' குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு…
Read More
நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வணக்கம், இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராத வர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி தான். நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி…
Read More