‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான…
Read More
ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!

ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!

  Bade Miyan Chote Miyan: அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படே மியான் சோட் மியான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது. அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள படே மியான் சோட் மியான் இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈத் வெளியீடாக இருந்து வருகிறது. இதுவரை படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரையரங்கில் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். இந்தியாவில் ஈத் பண்டிகை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படமாக இருக்கும் வகையில் படத்தை பண்டிகை நாளில் மட்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அக்ஷய் மற்றும் டைகர் இடையேயான நட்புறவு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது, எனவே திரையரங்கில் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஷாருக்கானின் பிளாக்பஸ்டர்…
Read More
படே மியான் சோட் மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குனர்!

படே மியான் சோட் மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குனர்!

  பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே 'படே மியான் சோட் மியான்' படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான, 'படே மியான் சோட் மியான்,' அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'படே மியான் சோட் மியான்' திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு பிளாக்பஸ்டர் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்‌ஷன் இயக்குனராக இணைந்துள்ளார். கிரேக்…
Read More
பழம் பெரும் கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்!

பழம் பெரும் கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்!

இசை உலகின் முடிசூடா மன்னனாகப் போற்றப்பட்ட பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ் (72) காலமானார். இது இசைப் பிரியர்களையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டில் காலத்தால் அழியாத பல கிளாசிக் ஹிட் பாடல்கலைக் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் . ஜமீன்தார் குடும்பத்தில், கடந்த 1951 மே 17 அன்று குஜராத் மாநிலம் ஜெட்பூரில் பிறந்தார். இவரது குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் இவர்தான் இளையவர். இவருடைய குடும்பம் ராஜ்கோட் அருகே உள்ள சர்க்காடி என்ற ஊரைச் சேர்ந்தது. அவரது தாத்தாவும் பாவ்நகர் மாநிலத்தின் ஜமீன்தார் மற்றும் திவானாக இருந்தார். அவரது தந்தை கேசுபாய் உதாஸ் ஒரு அரசு ஊழியர் மற்றும் இவரது தாயார் ஜிதுபென் உதாஸ் பாடல்களை மிகவும் விரும்பி பாடுவார். பங்கஜ் உதாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இசையில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து…
Read More
69வது ஃபிலிம்பேர் விருதில் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

69வது ஃபிலிம்பேர் விருதில் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

  69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக ஆட்சி செய்தார் கிங்கான் SRK. பதான் மற்றும் ஜவான் மூலம், SRK திரையுலகில் 2600 கோடிகள் அளவில் பாலிவுட்டின் வருவாயில் பங்களிப்பு செய்துள்ளார்! இந்த ஆண்டு முழுவதும் வெற்றி அலைகளை உருவாக்கி வரும் நிலையில், அவரது பிளாக்பஸ்டர்களான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் இப்போது, 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜவான் மற்றும் டங்கி படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். SRK டங்கி படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) பிரிவிலும் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பதான் திரைப்படம் சிறந்த இயக்குநர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில், ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ மற்றும் பதான் படத்திற்காக சித்தார்த்…
Read More
பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்காக திரையிடப்பட்ட ஷாருக்கானின் டங்கி திரைப்படம்

பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்காக திரையிடப்பட்ட ஷாருக்கானின் டங்கி திரைப்படம்

  சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது டங்கி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று பல்வேறு நாடுகளின் துணைத் தூதரகங்களுக்குச் சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டங்கி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தன, இந்த படம் உண்மையில் அதன் அழுத்தமான கதையினால், ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லியுள்ளது. பலரும் இப்படத்தின் கதையைப் பாராட்டி வருகிறார்கள், குறிப்பாக, உலகளாவிய பார்வையாளர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளும்படி அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது இப்படம். சட்டத்திற்குப் புறம்பாக நாடு தாண்டுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தை பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் பார்ப்பது மிகவும் பொருத்தமானது. ஹங்கேரி, அமெரிக்கா,…
Read More
உலக அளவில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கிய ஷாருக்கான் ! 250 கோடி வசூலை பெற்றுள்ளது !

உலக அளவில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கிய ஷாருக்கான் ! 250 கோடி வசூலை பெற்றுள்ளது !

ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌ இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌ இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான 'டங்கி' திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு…
Read More
டங்கி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது ! ஷாருக்கானின் ரொமாண்டிக் வரிசையில் மற்றுமொரு பாடல்!

டங்கி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது ! ஷாருக்கானின் ரொமாண்டிக் வரிசையில் மற்றுமொரு பாடல்!

  இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 - வை வெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது. புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல். ஒரு தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான…
Read More
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

  இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். டங்கி திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!. நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1", ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை,…
Read More
அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

  அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற பிறகு தமிழ் பார்வையாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் இருப்பதற்கு மற்றொரு காரணத்தை அளித்து, அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது. பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. அனிமல் திரைப்படம் மனித ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மனிதன் ஆதி குணமான விலங்கின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் பிரதான சினிமாவின் வழக்கமான…
Read More