அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக்கி  உருவாகும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’

அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக்கி உருவாகும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’

சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி.  இவர் தற்போது ‘பியாண்ட்  த க்ளவுட்ஸ் ’ என்ற படத்தினை ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் இயக்கி வருகிறார். ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மாளவிகா மோகனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஜீ ஸ்டீயோஸ் மற்றும் ஐகேன்டீ பிலிம்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, தயாரிப்பில் இருக்கும் போதே உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மஜித் மஜிதியின் இயக்கத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் விருப்பத்துடனும், ஆர்வமுடனும் இருக்க, பலத்த போட்டிகளுக்கிடையே ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’படத்தில் நடிக்கும் வாய்ப்பை இஷான் கட்டார் பெற்றார். தன்னுடைய தேர்வை உறுதிப்படுத்துவதற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார் இஷான்.  இஷான் கட்டார், தான் அறிமுகமாகும் இந்த படத்தில் எந்த புதுமுக நடிகரும் செய்ய தயங்கும் செயலை துணிச்சலுடன் செய்து…
Read More

ரசிகர்களை சிலிர்க்கவைக்கும் 3D, மெய்நிகர் காட்சியனுபவ அரங்க அமைப்புகள்!

42 ஆண்டுகளுக்கு பிறகு ஷோலே திரைப்படத்தில் வரும் கபார் சிங் தொடர்பான காட்சிகள் ராமநாகராம் மாவட்ட பாறைக் குன்றுகளில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவகையில் மீண்டும் பொறிக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. அதுமட்டுமின்றி ஒரு பெரிய வெற்றிப்படமான ஷோலே படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட அங்குள்ள மலைப்பாறை இடுக்குகள் ரமேஷ் சிப்பியின் திரை அனுபவத்தோடு ஒரு பெரிய இசைக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. கர்நாடகா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 42 ஆயிரத்து 184 அடிகளுக்கு ஷோலே ஒரு '3டி விர்சுவல் ரியாலிடி கிராமம்' ஒன்றை ராமநாகராம் மாவட்டத்தில் ராமதேவரா கிராமம் அருகே நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்குதான் ஷோலே திரைப்படத்தின் காட்சிகள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்பகுதி 'ஷோலே ஸ்பாட்' என்றே கர்நாடக மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 7.5 கோடி திட்டம் கர்நாடக சுற்றுலாத்துறை சமர்ப்பித்துள்ள 7.5 கோடியில் வினோதமான இந்த திட்ட வரைவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஷோலே திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக்…
Read More
பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

டெல்லி மக்களின் மனதில், பொழுதுபோக்கு அம்சங்களில் மிகவும் இடம் பிடித்த ரீகல் தியேட்டர் இன்று - 30ம் தேதியோடு இழுத்து மூடப்படுகிறது. பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா நடித்து தற்போது திரையிடப்பட்டு உள்ள ‘பில்லவ்ரி’ இந்தி சினிமாதான் ரீகல் தியேட்டரில் கடைசி படமாகும். மல்டிபிளக்ஸ் எனப்படும் ஷாப்பிங் மால், உணவகம் மற்றும் பல சினிமா அரங்குகள் ஒரே கட்டிடத்தில் அமைந்த பொழுதுபோக்கு மையங்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் காதலர்கள் சந்திக்கும் மையமாக மாறிவருகிறது. அதையடுத்து, பழைய தியேட்டர்களுக்கு கிராக்கி குறையத் தொடங்கியது. எனினும், பாரம்பரியமிக்க தியேட்டர்களை இழக்க ரசிகர்கள் இன்றளவும் விரும்பவில்லை. எனவே, 84 ஆண்டுகளாகியும், ரீகல் தியேட்டரில் நிறுத்தாமல் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இரண்டு பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, பாரம்பரிய பகுதியும், காலனி ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிரம்பியதுமான கன்னாட்பிளேசில் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் நடத்த புதுடெல்லி நகராட்சி உத்தரவிட்டு உள்ளது.…
Read More
நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)  ஏ.ஆர். ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, 'புலி'  படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது "மாம்" (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்…
Read More
பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

ஜெய்ப்பூரை அடுத்து  மகாராஷ்டிரா மாநிலத்திலும், பத்மாவதி படப்பிடிப்புத் தளத்திற்கு தீ வைத்து எரித்த கும்பல் ஒன்று, அங்கிருந்த படக்குழுவினரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரண்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பத்மாவதி என்ற வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், முகாலய அரசன் அலாவுதீன் கில்ஜி, ராஜபுத்திர ராணி பத்மாவதி மீது ஒருதலை காதல் கொண்டு, அவரை அடைவதற்காக, போர் செய்த வரலாற்றுச் செய்தியை கதையாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த படத்தை எடுக்க, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்திற்கு செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆனால், அங்கு திடீரென வந்த வன்முறையாளர்கள், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அங்கிருந்து படப்பிடிப்புத் தளம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள கோலாப்பூர்…
Read More
சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை பாலிவுட்டில் உருவாகி ஹிட்டானது. சில்க்காக வித்யா பாலன் நடித்தார். இதையடுத்து முக்கிய நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க அவ்வப்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கின்றனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை தற்போது படமாகிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய்தத்தின் தாய் நர்கிஸ். இவர் பிளாக் ஒயிட் காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மனிஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நர்கிஸ் நியூயார்க் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மனிஷா கொய்ராலாவும் சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நர்கிஸ் அப்போது சிகிச்சை பெற்ற அதே நியூயார்க் மருத்துவமனையில் மனிஷாவும் தங்கி சிகிச்சை பெற்றார். கேன்சர் வலி குறித்து மனிஷாவுக்கு நன்கு தெரியும் என்பதால் நர்கிஸ் பாத்திரத்துக்கு அவரை தேர்வு செய்ததாக இயக்குனர் தெரிவித்தார். நிஜத்தில் அனுபவித்த வேதனையை…
Read More
இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜெய்கர் கோட்டையில் பத்மாவதி என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பினர் வரலாற்று புகழ் பெற்ற பத்மாவதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரையும் குழுவினரையும் அவர்கள் தாக்கினர். ஏற்கனவே கேட்டுக்கொண்டோம் பத்மாவதி படத்தின் திரைக்கதை நகலை காட்டுவதற்கு சஞ்சய் லீலா பன்சாலி முன்வரவில்லை என்ற எதிர்ப்பாளர்கள் கூறினர். செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன. பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.…
Read More
ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி 3, 4, ரம்புள் இன் தி பாக்ஸ், தி மித்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்டானி டோங் ‘குங்பூ யோகா’ படத்தை இயக்குகிறார். சீன, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் தமிழில் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தின் பல முக்கியக் காட்சிகள் ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக இந்த வாரத் துவக்கத்தில் மும்பைக்கு வந்திருந்தார் ஜாக்கிசான். இந்தியாவிலும் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, ஜாக்கி சான் படங்களுக்கென்று கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ‘கராத்தே கிட்’ படத்திற்குப் பிறகு வெளிவந்த ஜாக்கிசானின் படங்கள் இங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையை ‘குங்பூ யோகா’ போக்குமா என்பது அடுத்த வாரம்…
Read More