ஆண்களின் கண்ணீர் ஆபத்தானது!- கங்கனா ரனாவத் ஆவேசம்!

ஆண்களின் கண்ணீர் ஆபத்தானது!- கங்கனா ரனாவத் ஆவேசம்!

தமிழில், தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தவர் கங்கனா ரனாவத். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். நடிக்க வந்த புதிதில் இவரை கண்டு கொள்ளாமல் ஒதுக்கினர். இன்று அவரது கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சினிமா வாழ்க்கை நன்கு அமைந்த போதிலும் கங்கனாவின் காதல் வாழ்க்கை சோகமானது. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், கங்கனா காதலித்த விவகாரம் ஏற்கனவே பல முறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக இருந்த விவகாரம் தற்போது மீண்டும் புகைய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி அளித்த கங்கனா மனக்குமுறலை கொட்டி தீர்த்தார். அவர் கூறியது: ஹிருத்திக் ரோஷனும் நானும் காதலித்தோம். கடந்த 2014ம் ஆண்டு எங்களுக்குள் பிரேக் அப் ஆகி விட்டது. ஆனால் ஒரு வருடம் என்னை கொடுமைப்படுத்தினார். இன்னொரு வரை நான் காதலித்துவிடக் கூடாது என்பதை கண்காணித்து வந்தார். எனது இ மெயிலில் ஊடுருவி என்னைப் பற்றி தகாத…
Read More
இந்திரா காந்தியின் எமர்ஜென்சி சர்ச்சையை பற்ரிய ‘இந்து சர்க்கார்’!

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி சர்ச்சையை பற்ரிய ‘இந்து சர்க்கார்’!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து ‘இந்து சர்க்கார்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே சஞ்சய் காந்தியின் மகள் என தன்னைக் கூறிவரும் பிரியா சிங் பால் என்பவர், ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 24-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரியா சிங் பால் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பிரியா சிங் பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டபோது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ‘இந்து சர்க்கார்’ திரைப்படம்…
Read More
லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால் அதிருப்தியுற்ற இந்தி பேசும் ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் பல நட்சத்திரங்களும், ரசிகர்களும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை பற்றி ஐஐஎஃப்ஏ (IIFA) நிகழ்ச்சியில் ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அவர் பதிலளிக்கையில், "இவ்வளவு வருடங்களாக மக்கள் எனக்கு தந்து வரும் ஆதரவு எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களின்றி நான் இல்லை. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். லண்டன் நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், நாங்கள் எங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தோம். , நேர்மையாக இருக்கிறோம்" என்றார். அதேநேரத்தில், அமெரிக்காவில் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை தந்தனர். ஊர்வசி ஊர்வசி பாடலை தமிழில் பாடச் சொல்லியும் பலர் அவரைக் கேட்டனர்.…
Read More
ரஜினி வழியில் சல்மான்கான் – விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி  அளிக்கிறார்!

ரஜினி வழியில் சல்மான்கான் – விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கிறார்!

கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'டியூப்லைட்'. ஜூன் 23-ம் தேதி வெளியான இப்படத்தை சல்மான்கான் மற்றும் கபீர்கான் இருவரும் இணைந்து தயாரித்தி ருந்தார்கள். இ ப்படம் வெளியான நாள் முதலே, மோசமான விமர்சனங்களைப் பெற்று தந்தது. மேலும், மக்களிடமும் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ச்சியாக வசூலும் இறங்கு முகத்திலேயே இருந்தது. சமீபத்தில் வெளியான சல்மான்கான் படங்களில் படுதோல்வியை சந்தித்த படம் என்று பாலிவுட் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிலையில், 'டியூப்லைட்' படத்தை வாங்கி விநியோகித்து நஷ்டமடைந்த விநியோ கஸ்தர்க ளுக்கு, பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார் சல்மான்கான். இதனால் விநியோகஸ்த ர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளார்கள். இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பாலிவுட் வர்த்தக நிபுணர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். முன்னதாக கோலிவுட்டில் இது போறு விநியோகச்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 'டியூப்லைட்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில், விமர்சகர்களை கடுமையாக சாடினார் சல்மான்கான்.…
Read More
ஸ்ரீதேவி in மாம் – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

ஸ்ரீதேவி in மாம் – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

நம்ம தமிழ் திரையுலகமான கோலிவுட்டில் அறிமுகமாகி பல ஹிட் அடித்து தொடர்ந்து பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஸ்ரீதேவி. இவரது நடிப்பில், மாம் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்றைய சமூக சூழலில் அம்மா மகள் உறவு எத்தனை அவசியமானது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் 'மாம்'. ஹிந்தியில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை 7ம் தேதி வெளியாகிறது. இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்குப் பின் நல்ல கதைக்காக காத்திருந்த தனக்கும், அனைத்து பெற்றோருக்கும் மாம் மிக முக்கியமான அமையும் என நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். துணைவன் திரைப்படம் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ரீதேவிக்கு திரையுலகில் இது ஐம்பதாவது ஆண்டாகும். இந்தாண்டில் கூடுதல் சிறப்பாக அவர் நடித்துள்ள 300- வது திரைப்படமும் வெளியாக உள்ளதால், இதை அனைத்தையும் கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த ஸ்ரீதேவியின் கணவர்…
Read More
அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக்கி  உருவாகும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’

அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக்கி உருவாகும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’

சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி.  இவர் தற்போது ‘பியாண்ட்  த க்ளவுட்ஸ் ’ என்ற படத்தினை ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் இயக்கி வருகிறார். ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மாளவிகா மோகனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஜீ ஸ்டீயோஸ் மற்றும் ஐகேன்டீ பிலிம்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, தயாரிப்பில் இருக்கும் போதே உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மஜித் மஜிதியின் இயக்கத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் விருப்பத்துடனும், ஆர்வமுடனும் இருக்க, பலத்த போட்டிகளுக்கிடையே ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’படத்தில் நடிக்கும் வாய்ப்பை இஷான் கட்டார் பெற்றார். தன்னுடைய தேர்வை உறுதிப்படுத்துவதற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார் இஷான்.  இஷான் கட்டார், தான் அறிமுகமாகும் இந்த படத்தில் எந்த புதுமுக நடிகரும் செய்ய தயங்கும் செயலை துணிச்சலுடன் செய்து…
Read More

ரசிகர்களை சிலிர்க்கவைக்கும் 3D, மெய்நிகர் காட்சியனுபவ அரங்க அமைப்புகள்!

42 ஆண்டுகளுக்கு பிறகு ஷோலே திரைப்படத்தில் வரும் கபார் சிங் தொடர்பான காட்சிகள் ராமநாகராம் மாவட்ட பாறைக் குன்றுகளில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவகையில் மீண்டும் பொறிக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. அதுமட்டுமின்றி ஒரு பெரிய வெற்றிப்படமான ஷோலே படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட அங்குள்ள மலைப்பாறை இடுக்குகள் ரமேஷ் சிப்பியின் திரை அனுபவத்தோடு ஒரு பெரிய இசைக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. கர்நாடகா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 42 ஆயிரத்து 184 அடிகளுக்கு ஷோலே ஒரு '3டி விர்சுவல் ரியாலிடி கிராமம்' ஒன்றை ராமநாகராம் மாவட்டத்தில் ராமதேவரா கிராமம் அருகே நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்குதான் ஷோலே திரைப்படத்தின் காட்சிகள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்பகுதி 'ஷோலே ஸ்பாட்' என்றே கர்நாடக மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 7.5 கோடி திட்டம் கர்நாடக சுற்றுலாத்துறை சமர்ப்பித்துள்ள 7.5 கோடியில் வினோதமான இந்த திட்ட வரைவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஷோலே திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக்…
Read More
பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

டெல்லி மக்களின் மனதில், பொழுதுபோக்கு அம்சங்களில் மிகவும் இடம் பிடித்த ரீகல் தியேட்டர் இன்று - 30ம் தேதியோடு இழுத்து மூடப்படுகிறது. பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா நடித்து தற்போது திரையிடப்பட்டு உள்ள ‘பில்லவ்ரி’ இந்தி சினிமாதான் ரீகல் தியேட்டரில் கடைசி படமாகும். மல்டிபிளக்ஸ் எனப்படும் ஷாப்பிங் மால், உணவகம் மற்றும் பல சினிமா அரங்குகள் ஒரே கட்டிடத்தில் அமைந்த பொழுதுபோக்கு மையங்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் காதலர்கள் சந்திக்கும் மையமாக மாறிவருகிறது. அதையடுத்து, பழைய தியேட்டர்களுக்கு கிராக்கி குறையத் தொடங்கியது. எனினும், பாரம்பரியமிக்க தியேட்டர்களை இழக்க ரசிகர்கள் இன்றளவும் விரும்பவில்லை. எனவே, 84 ஆண்டுகளாகியும், ரீகல் தியேட்டரில் நிறுத்தாமல் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இரண்டு பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, பாரம்பரிய பகுதியும், காலனி ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிரம்பியதுமான கன்னாட்பிளேசில் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் நடத்த புதுடெல்லி நகராட்சி உத்தரவிட்டு உள்ளது.…
Read More
நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)  ஏ.ஆர். ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, 'புலி'  படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது "மாம்" (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்…
Read More
பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

ஜெய்ப்பூரை அடுத்து  மகாராஷ்டிரா மாநிலத்திலும், பத்மாவதி படப்பிடிப்புத் தளத்திற்கு தீ வைத்து எரித்த கும்பல் ஒன்று, அங்கிருந்த படக்குழுவினரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரண்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பத்மாவதி என்ற வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், முகாலய அரசன் அலாவுதீன் கில்ஜி, ராஜபுத்திர ராணி பத்மாவதி மீது ஒருதலை காதல் கொண்டு, அவரை அடைவதற்காக, போர் செய்த வரலாற்றுச் செய்தியை கதையாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த படத்தை எடுக்க, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்திற்கு செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆனால், அங்கு திடீரென வந்த வன்முறையாளர்கள், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அங்கிருந்து படப்பிடிப்புத் தளம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள கோலாப்பூர்…
Read More
error: Content is protected !!