நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ஜீ தமிழ் ஒளிப்பரப்பான சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ரியாஸ் என்பவரை நடிகை ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஷாலினி மற்றும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டுள்ளார். ஷாலினியின்…
Read More
தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகு அவர் செய்யும் யாவும் வைரல் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தனது தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கெனவே வெப் சீரிஸ்களை இயக்கத் தேவையான கதையை பிலால் சித்திக் என்பவருடன் சேர்ந்து ஆர்யன் கான் எழுதிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதமே தான் கதை எழுதிக்கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதனை ஆர்யன் கான் நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யன் கான் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் தனது தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது. பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்காக அந்த விளம்பரம்…
Read More
Sisu திரை விமர்சனம்

Sisu திரை விமர்சனம்

  எழுத்து, இயக்கம் - Jalmari Helander ஒளிப்பதிவு             - Kjell Lagerroos இசை                        - Juri Seppä, Tuomas Wäinölä ஃபின்லாந்தில் 1944 ல் ஜெர்மானிய ஹிட்லர் படைகள் பின்வாங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதை. ஜான் விக் டைப் ஆக்சன் படம், ஒரு முன்னாள் ராணுவ வீரனிடம் சில்மிசம் பண்ணும் ஜெர்மானிய படையை அவர் எப்படி அழிக்கிறார் திகட்ட திகட்ட ஆக்சனில் சொல்லியிருகிறார்கள். அனுபவம் வாய்ந்த சிப்பாயான Aatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்தி தான் இந்தக் கதை சுழல்கிறது . இப்படம், முதன்முறையாக டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மிட்நைட் மேட்னஸ் (Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல்…
Read More
இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம் தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன் தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் எழுத்து, இயக்கம் : ஆதித்யா ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார் இசை: மிஷ்கின் எடிட்டர்: இளையராஜா கலை…
Read More
‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார் அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும்…
Read More
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” விரைவில் திரையில் !! நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது. ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான…
Read More
ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

  கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும்…
Read More
‘ஓ மை டாக்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.

‘ஓ மை டாக்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.

முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு…
Read More
இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம் – அசோக் செல்வன்

இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம் – அசோக் செல்வன்

  Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது... எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் கிரிஷ் குமார் கூறியதாவது... வாய்ப்பு தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 ல்…
Read More
‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான 'மாயோன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும். 'மாயோன்' பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் 'மாயோன்' பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த…
Read More