தெலுங்கு நடிகர் விக்ராந்தின் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படம் நவம்பர் 17 வெளியாகவுள்ளது!

தெலுங்கு நடிகர் விக்ராந்தின் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படம் நவம்பர் 17 வெளியாகவுள்ளது!

இளம் நாயகன் விக்ராந்தை தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ'. மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டேஃப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விக்ராந்த் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் . டேஃப் ஃபிராக் புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'ஹிருதயம்' மற்றும் குஷி புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியான டீசரைப் பார்த்தால், பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன், காதல் போன்ற பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. மேலும், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் காட்சிப்படுத்திய பிரமாண்ட காட்சிகளும், ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. இப்படம் நவம்பர் 17ஆம் தேதி…
Read More
“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் "காந்தாரா". இதில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது. இது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.400 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க உள்ளதாகவும் மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் "காந்தாரா 2" படம் 2024ம் ஆண்டு மே மாதத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படம் மழைக்காலத்தில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத…
Read More
நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

  ``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…
Read More
“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா”  சீரிஸின் டீசர் வெளியானது !!

“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசர் வெளியானது !!

  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால்மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள் அவர்களுக்குக் கிடைக்கு ஒரே ஒரு க்ளூ ஒரே ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா" எனும் போலி முகவரி. இந்த சிக்கலான சவால்…
Read More
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம் பெறும் என ஷங்கர் கூறியுள்ளார்

இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம் பெறும் என ஷங்கர் கூறியுள்ளார்

ஷங்கரின் டைரக்ஷனில் போன 2018- ஆம் வருஷம் துவங்கப்பட்ட படம் தான் இந்தியன் 2 . முன்னதா இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பதால், இந்தியன் 2 படத்தை கமல் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் . குறிப்பாக மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கின்றார் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் விவேக், எதிர்பாராத விதமாக கடந்த 2021 -ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா இல்லை அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்கவைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என ஷங்கரிடம் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கிறார்.…
Read More
கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின். இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் - ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More
தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு 'தி கிரேட் இந்தியன் கம்பெனி' எனும் தினத்தொடர். ஜனனி அசோக் குமார், விஷ்ணு, ஆர்ஜே சரித்திரன், செளந்தர்யா நஞ்சுண்டான், வினோத் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் தொடர் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும்வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பரபரப்பான சென்னையை களமாகக் கொண்டு, இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கும் நிறுவனமான 'தி கிரேட் இந்தியன் கம்பெனி'யின் கதையையும் அதன் பணியாளர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை கலந்து பேசும் தொடர் இது. தங்கள் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகளையும் கூட்டாக எப்படி அந்தப் பணியாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் சாராம்சம்.சென்னையில் இன்று நடந்த இந்தத் தொடரின் பூஜையில் அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஆஹா…
Read More
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் ரசிகர்கள அடுத்து பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மாவீரன். மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வர இருப்பதால் தான் மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.  
Read More
முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனராக மாறியுள்ளவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்றிருக்கிறார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு-அறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படத்திற்காக ரூபாய் 10 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

'கண் சிமிட்டும் நேரங்கள்'ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் 'The Smile Man'ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். 'ருத்ரன்'ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு.பிரமாண்ட படங்களை உருவாக்குவதே கடினம். இந்த 'பி.எஸ் - 2'ஐ மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' என்றுதான் எடுத்துக்கணும். இந்த முயற்சியில் அவர் வெற்றியடைஞ்சிருக்கார். உலகளவில் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு சேர்த்திருக்கார். என்னைப் போன்ற கதையைப் படித்த சிலர் 'கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்களே'ன்னு சொல்றாங்க. ஆனாலும் அவர் பிரமிப்பா எடுத்திருக்கார்னுதான் சொல்வேன். இறுதிக் காட்சியில் நந்தினி என்னைப் பார்த்து, 'இவர் அழகுக்கு மயங்குபவர் மட்டுமல்ல, உண்மையாக என்னை நேசித்த ஒருவர்'னு சொல்வாங்க. அதைப் போல, வந்தியதேவனும் 'இவரிடம் நேரிடையா போரிட்டு வெற்றி பெற முடியாது'…
Read More