அடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன்.
‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.
இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு  நகைச்சுவையுணர்வு அதிகம்  உண்டு. ஆனால்  சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.
நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூ