திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த அமரன் !!

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த அமரன் !!

வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையும் அற்புதமான நடிப்பும் சேர்ந்து இந்த ஆண்டின் பெருவெற்றிப் படங்களுள் ஒன்றாக அமரன் திரைப்படத்தை உயர்த்தியிருக்கின்றன. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு சகல தரப்பினரிடமும் பாராட்டுப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அன்பான மகன், நேசமிக்க கணவன், பாசக்காரத் தகப்பன் ஆகிய முகங்களோடு, போர்க்களத்தில் தளபதியாகவும் திகழ்ந்த ஒரு போர்வீரனான முகுந்த் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்கியதோடு முகுந்த்…
Read More
‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை !

‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை !

'அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியீட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், 'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்…
Read More
சாய் பல்லவியின் பிறந்த நாளிற்கு தண்டேல் படக்குழுவின் சர்ப்ரைஸ்!

சாய் பல்லவியின் பிறந்த நாளிற்கு தண்டேல் படக்குழுவின் சர்ப்ரைஸ்!

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி 'லவ் ஸ்டோரி' எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் 'தண்டேல்' திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளிற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் பிரத்யேகமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியின் தொடக்கத்தில் நடிகை சாய் பல்லவி இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து 'தண்டேல்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் புஜ்ஜி தல்லி (சத்யா) எனும் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.…
Read More
நாகசைதன்யாவின் 23வது படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்!

நாகசைதன்யாவின் 23வது படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்!

  இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறூவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன் வழங்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் NC23 தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மிக உயர்ந்த தரத்துடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் ஒரு பகுதியாக, இப்படத்தின் முன்னணி கதாநாயகியாக நேற்று அணியில் இணைந்தார் சாய் பல்லவி. இன்று, சாய் பல்லவி இணைந்த புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாண்டமான படத்தில் கதாநாயகியாக…
Read More

நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர். லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது. அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய…
Read More
சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

  பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது, என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15ந் தேதி வெளியாகிறது. பார்த்து விட்டு கூறுங்கள். ஒளிப்பதிவு இப்படத்தில் ஸ்ரீயந்தி மற்றும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்னுடைய நண்பர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும்…
Read More
விரைவில்   வெளியாகவிருக்கும் நானியின் அடுத்த படம்!

விரைவில் வெளியாகவிருக்கும் நானியின் அடுத்த படம்!

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளார். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுவாகும். சமீபத்தில், இப்படத்தில் நானியின் இரண்டாவது பரிமாணமான வாசுவின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. பெங்காலி பாய் என்ற முதல் பரிமாணத்தைப் போலவே, இதுவும் எல்லா இடங்களில் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான நானியின் இரண்டு தோற்றங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன. இந்தப்…
Read More
தனுஷ் ஜோடி ஆகிறார் மலர் டீச்ச்சர் ‘ சாய் பல்லவி’

தனுஷ் ஜோடி ஆகிறார் மலர் டீச்ச்சர் ‘ சாய் பல்லவி’

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில், தமிழ், மலையாளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலர் டீச்சர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி'. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மலர் டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவிதான். அந்தளவிற்கு ரசிகர்கள்…
Read More