பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன்…
Read More
ஒரு படத்துக்கு மூன்று முறை இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் !!

ஒரு படத்துக்கு மூன்று முறை இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் !!

மலையாளத்தில் புகழ்பெற்ற நாவலான ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து, நடிகர் பிருத்விராஜ் நடிப்பில், இயக்குவர் பிளஸி இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது தி கோட் லைஃப் படம். இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மூன்று முறை இசையமைத்துள்ளார். ஆடு ஜீவிதம் படத்திற்காக இதுவரை மூன்று முறை இசையமைத்திருக்கிறேன்'''' அப்படின்னு ARR இன்டர்வியூ கொடுத்துருக்கார். அந்த இன்டர்வியூல '''''ஒவ்வொரு தடவை ஆடுஜீவிதம் படத்தை பார்க்கும்போதும், இதை விட இன்னும் நல்லா இசையமைக்கணும் அப்படின்னு தோணும். அப்படி யோசிச்சு யோசிச்சு, இதுவரைக்கும் மூணு தடவை அந்தப் படத்துக்கு மியூசிக் ஸ்கோர் பண்ணிருக்கேன்''''.ன்னு சொல்லிருக்கார். ' 'இந்தப் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் செயல்களுக்கு எதிர்வினை புரியும்படி இசையமைத்திருக்கிறேன். கதாபாத்திரம் அழுகிறது என்றால், அதன் கூடவே சேர்ந்து அழும் இசையை உருவாக்காமல், அந்தக் கதாபாத்திரத்தை அணைத்துக் கொள்வது போல இசையை அளித்திருக்கிறேன்' அப்படின்னும் ஏ.ஆர்.ஆர் சொல்லிருக்கார் விற்பனை பிரதிநிதி வேலை என்று…
Read More
ராம்சரண் ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர் !!

ராம்சரண் ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர் !!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான 'RC 16' படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர்.‌ தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர். இப்படத்தை தனது முதல் திரைப்படமான 'உப்பென்னா' படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.‌ 'RC16' படத்தின் தொடக்க விழாவில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா…
Read More
மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் AR ரஹ்மான், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி, அர்ஜூன்துரை ஆகியோர் உடனிருந்தனர்.   இவ்விழாவினில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது . படம் வெற்றி பெறக்…
Read More
ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது. தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ…
Read More
புனேயில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

புனேயில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

  புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத் தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரவு 10 மணிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். உடனே இசை நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் உடனே மேடையிலிருந்து இறங்கிச்சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் போலீஸாரின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே இது குறித்து புனே போலீஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இரவு 10 மணி ஆனதால்தான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும், அதைப் புரிந்துகொண்டு விழா நடத்திய குழுவினரும் ஏ.ஆர்.ரஹ்மானும் முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய புனே…
Read More
உலகதரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகதரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். https://youtu.be/OmizuGpm2sU
Read More
இயக்குனர் ரகுமானின் படத்தை பார்த்த ரஜினிகாந்த்

இயக்குனர் ரகுமானின் படத்தை பார்த்த ரஜினிகாந்த்

இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளார். முன்னதாக ‘99 சாங்ஸ்’ படத்துக்கு கதை எழுதி இசையமைத்திருந்தார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாக 'லே மஸ்க்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடும் இப்படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. லேமஸ்க் படத்தின் கதை என்ன? ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள…
Read More
வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!!

வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!!

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் கூறியதாவது.., இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நடிகை ராதிகா கூறியதாவது.., இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும்…
Read More
விஜய் சேதுபதியின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,

விஜய் சேதுபதியின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’, வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர். Zee Studios, தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி. இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின்…
Read More