ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா !

ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா !

பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி - முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.
Read More
உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான் விஷால் ஏற்கனவே நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவி செய்து வருகிறார் என்பது சகல்ருக்கும் தெரிந்த செய்திதான். இந்த நிலையில் அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து 'V Shall' என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேசன் எதர்கு தெரியுமோ? உதவி தேவைப்படும் மற்றும் உதவும் குணம் சகலரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த ஆப் உருவாகிறதாம். இந்த அப்ளிகேசன் மூலம் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். இந்த அப்ளிகேசன் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது மேலும் இந்த ஆப் குறித்து விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட்…
Read More
அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்  ​ மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அந்த காலத்தில்…
Read More
ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! – முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் வழங்கினார்

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! – முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் வழங்கினார்

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. அதையடுத்து தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பத்து லட்சம் வழங்கினர்.. இந்நிலையில் நடிகரும் , முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவரும், எம்.எல்,ஏ-வுமான சே. கருணாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி…
Read More
சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இன்று இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு…
Read More
சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப்…
Read More
சின்னத்திரை நாயகியை திருமணம் செய்யப் போகும் நடிகர் & தயாரிப்பாளர் சுரேஷ்!

சின்னத்திரை நாயகியை திருமணம் செய்யப் போகும் நடிகர் & தயாரிப்பாளர் சுரேஷ்!

விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, விஜய் ஆன்டனி நடித்த ‘சலீம்’ படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ-9ஆர்.கே.சுரேஷ். இவர் சாட்டை, தாரைதப்பட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாலா. அதை தொடர்ந்து ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்த இவர் தற்போது விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், உதயநிதியுடன் ஒரு படம், ஹரஹரமஹாதேவகி, பள்ளிப்பருவத்திலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் பில்லாபாண்டி, வேட்டை நாய், தனிமுகன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். பில்லாபாண்டி படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்த போது தான் பெப்ஸி பிரச்சனை உருவானது குறிப்பிடத்தக்கது. தற்போது படு பிசியாக இருக்கும் ஆர்.கே. சுரேஷ் தனக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read More
நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய்  ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று காலை அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்றார். அங்கு அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீட்டில் தரையில் அமர்ந்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர்…
Read More
அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து காலமானார். இவருடைய இறுதிச்சடங்கில் அவருடன் நடித்தவர்கள் மற்றும் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் , " சுமார்ர்  36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஏன்? இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை. அல்வா வாசுவின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை  நடிகரும்…
Read More
நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் (79) இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ". சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அன்பானவன் அசறாதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம். மேலும் அண்ணாமலை, அரசியல்,செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர்…
Read More