மரகதநாணயம் பார்ட் டூ தயாராகுதாமில்லே!

மரகதநாணயம் பார்ட் டூ தயாராகுதாமில்லே!

ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ராமதாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 16-ஆம் தேதி வெளியான படம் ‘மரகதநாணயம்’. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுடன் வெற்றிகரமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் நாலு நாட்கள் தியேட்டர் ஸ்ட்ரைக் முடிந்து திறக்க்கப்பட்ட நிலையிலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு அதற்கான களப் பணியையும் செய்து வருக்கிறாராம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன். ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு கதையை இயக்கவிருப்பதாகவும் இப்படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக ‘மரகதநாண யம்-2’வை இயக்க ஏ.ஆர்.கே.சரவன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் சரவனிடம் கேட்டபோது, “ஆமாம், ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இருக்கிறது. ஆனால், அதை உடனே எடுத்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும். அதனால் அதை மூணாவது படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். மேலும்,…
Read More
ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் =  ‘ மரகத நாணயம்’

ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் = ‘ மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமையான  ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு. முன்னதாக இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும்.…
Read More