ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘முன்னோடி’ எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, இன்னொருவர் 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார். தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார். இதற்கும் முன் ஷூட்டிங்கைக் கூட வேடிக்கைப் பார்த்தது இல்லையாம். படத்தின் டைட்டிலுக்கேற்ப இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் தங்கள் முன்னோடிகளான தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களையும் தங்கள் இனிஷியலில் சேர்த்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார்…
Read More
புலிமுருகன் – தமிழ்லே- அதுவும் 3டி யிலே ரிலீஸாகுது!

புலிமுருகன் – தமிழ்லே- அதுவும் 3டி யிலே ரிலீஸாகுது!

கேரளாவில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் `புலிமுருகன்'. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகபதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட  இந்தத் திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. `புலிமுருகன்' திரைப்படம் முதலில் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவுசெய்துவிட்டது. தமிழில் ஜூன் முதல் வாரம் ரிலீஸ் செய்யப்படும் `புலிமுருகன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று  நடந்தது. விழாவில் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.பிரபு, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், டப்பிங் யூனியன் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கே.டி.குஞ்சுமோன், நடிகர் நடராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர். பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, "நான் இந்தப் படத்தில் ரெண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒரு பாடல் அம்மா சென்டிமென்ட் பாடல். இந்தப் பாடல்…
Read More
துப்பறிவாளன் நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்! – மிஷ்கின் பேட்டி

துப்பறிவாளன் நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்! – மிஷ்கின் பேட்டி

​விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“. இப்படத்தில் அனு இம்மானுவேல் , பிரசன்னா , வினை , கே.பாக்யராஜ் .ஆண்ட்ரியா , ஷாஜி , தீரஜ் , அபிஷேக் , ஜெயப்ரகாஷ் , தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு படத்தொகுப்பு அருண் , இசை அருள் கொரோல்லி , ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறிதாவது , தற்போது உருவாகிவரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசரை மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாகும். இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ ஷெர்லாக் ஹோம்ஸ் “ மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ துப்பறியும் சாம்பு “ போன்ற ஒரு கதையாக இருக்கும். தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை “ துப்பறிவாளன் “…
Read More
தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

 சில வாரங்களுக்கு முன்னர் நம் தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால் வருகின்ற மே 30 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும்…
Read More
சரவணன் இருக்க பயமேன் – பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

சரவணன் இருக்க பயமேன் – பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எல்லா படங்களையும் நான் திரையரங்கில்  தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களை பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைனா திட்டிக் கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள். நான் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன், அதனாலேயே பார்த்த உடனே நடிப்பில் யார் தேறுவார்கள் என சொல்லி விடுவேன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் படங்கள் பார்த்திருக்கிறேன், அவர் பெரிய ஹீரோவாக நிச்சயம் வருவார். ரெஜினா கஸாண்ட்ரா…
Read More
அகரம் பவுண்டேஷனுக்கு தனது வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்

அகரம் பவுண்டேஷனுக்கு தனது வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்

நடிகர் சிவ குமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள “ லக்ஷ்மி இல்லம் “ சென்றுள்ளனர். நடிகர் சிவகுமார்  சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில் தான் சூர்யா , கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர். இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன் , பேத்திகள் பிறந்தது இங்கே தான். இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் “ லக்ஷ்மி இல்லத்திற்க்கு “ சென்றுள்ளனர். அதே சமயம் ஒவ்வொருவரும்  கல்வி பயில வேண்டும்…
Read More
நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்; தமிழ் திரையுலகம் அஞ்சலி

நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்; தமிழ் திரையுலகம் அஞ்சலி

நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான 'குருசிஷ்யன்', 'அண்ணாமலை', 'அருணாசலம்', 'நாட்டாமை', 'மாப்பிளை கவுண்டர்', 'நினைத்தேன் வந்தாய்', 'ஜெமினி', 'முனி', 'தேசிங்கு ராஜா', 'வாயை மூடி பேசவும்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் 'கரும்பு வில்', 500வது படம் 'சின்னத்தாயி'. ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' ஆயிரமாவது படம். கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 'வண்டிச்சக்கரம்' படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்த வினு…
Read More
வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ ஜெட்லி “ வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே  மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படமே “ ஜெட்லி “ உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக “ ஜெட்லி “ உருவாகிக் கொண்டிருக்கிறது. முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர்..இசை வெளியீட்டு விழாவன்று…
Read More
மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்-தின் விவேகம்  டீசரில் என்ன ஸ்பெஷல்?

மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்-தின் விவேகம் டீசரில் என்ன ஸ்பெஷல்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியாவில் கலந்து கொண்டுள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்,  போன ஒரு மாத காலமாகவே அஜித் ரசிகர்கள் தூக்கத்தைத் தொலைத்து சுறுசுறுப்பாகியிருக்கிறார்கள்.  எல்லாம் வருகிற மே மாதம் 1 ம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் வந்த உற்சாகம் தான் தான். ஒரு பக்கம் தல பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட வேண்டுமென்கிற முனைப்பு இருந்தாலும் அன்றைய தினம் அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகுமா என்று காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ‘விவேகம்’ படத்தின் டீஸர் ம்22 1-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக…
Read More
பாகுபலி -க்கு வந்த தடைப் பிரச்னைய  பஞ்சாயத்து பேசி தீர்த்தது புரொடியூசர் கவுன்சில்!

பாகுபலி -க்கு வந்த தடைப் பிரச்னைய பஞ்சாயத்து பேசி தீர்த்தது புரொடியூசர் கவுன்சில்!

பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது.இந்நிலையில் பாகுபலி 2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தது. அதில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால்…
Read More