விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

  திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'லாந்தர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விதார்த், சுவேதா டோரத்தி,விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படம் - புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக புதிய கோணத்தில் உருவாக உள்ளது. இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் 'லாந்தர்' என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம் 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் இயக்குநர் செல்லா அய்யாவு உடன் 'கட்டா குஸ்தி' திரைப்படத்திலும் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான 'விடியும் வரை காத்திரு' திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. 'லாந்தர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம், "இது வரை யாரும் சொல்லாத…
Read More
மலையாள படத்தின் ரீமேக் “பயணிகள் கவனிக்கவும்” எப்படி இருக்கு?

மலையாள படத்தின் ரீமேக் “பயணிகள் கவனிக்கவும்” எப்படி இருக்கு?

பயணிகள் கவனிக்கவும் - ஆஹா தமிழ் எழுத்து : அஜீஷ் தாமஸ் இயக்கம்: சக்திவேல் நடிகர்கள்: விதார்த், கருணாகரன், லட்சுமி சந்திரமௌலி,   தவறான தகவலை பரப்புவது, சமூகத்தில் நடக்கும் தீவிரவாதம் என கூற முயற்சிக்கிறது படம். மெட்ரோ ரயிலில் தூங்கி கொண்டிருக்கும் அப்பாவி ஒருவரை போட்டோ எடுத்து குடித்துவிட்டு தூங்குகிறார் என சமூக வலைதளத்தில் பரப்பிடும் ஒருவர், அதனால் பாதிக்கபடும் அந்த அப்பாவி, இவர்கள் இருவருக்கும் நிகழும் எதிர்வினைகள் தான் கதை. விதார்த் தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, தனது நடிப்பின் மூலம் அப்ளாஸ்களையும் வாங்கிகொண்டிருக்கிறார். அவரது நடிப்பு இந்த படத்திலும் தெளிவாகவே உள்ளது. வாய் பேசமுடியாத நபராய் அவரது நடிப்பு, மிகையில்லாமல் துல்லியத்தின் துளியாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் காட்சியின் ஆழத்தையும், கதையையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். சமூகவலைதள பகிர்வினால் ஒரு அப்பாவி எவ்வளவு பாதிக்கபடுகிறான், அதிலிருந்து மீண்டு…
Read More