எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் !  ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் ! ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இப்படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த  நிகழ்வில், நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது... "எனக்கு இருக்கும் மிகச்சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். 'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே…
Read More
மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு அந்த உயரத்தை அடைய அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்ததில் இந்த இசையமைப்பாளருக்கும் பெரிய பங்குண்டு. ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் பாடல், `அட' போட வைக்கும் பின்னணி இசை, தேன் சொட்டும் காதல் பாடல்கள், கண்ணீர் கொட்டும் சென்டிமென்ட் பாடல்கள் என முழுமையான பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆம்.. ரஜினிக்கு சந்திரமுகி ,கமலுக்கு அன்பே சிவம் , அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் ,விக்ரமுக்கு தூள்,தில் ,மாதவனுக்கு ரன், விஜய்-க்கு கில்லி, தனுஷூக்கு சுள்ளான் என அவர்களின் கேரியரில் பெஸ்ட் என்று சொல்லப்படும் ஆல்பத்தைக் கொடுத்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர்! 90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் கட்டாயம் கால் பங்கு இடத்தை வித்யாசாகரின் பாடல்கள் நிரப்பி யிருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. ஆனால் `வா வா என் தேவதையே', `ஆராரோ ஆரிரரோ' என 2K கிட்ஸ்களைத்…
Read More
இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய படம்!

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய படம்!

நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, வர்த்தக வட்டாரங்களில் மிக நம்பிக்கையான நாயகனாக வலம் வருகிறார். இந்த அம்சங்கள் பொது பார்வையாளர் கள் மற்றும் விமர்சகர்களிடையே திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அவரது அடுத்தடுத்த திரைப்பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ தற்போது இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இது நடிகர் சிபி சத்யராஜின் 20வது படம். இப்படத்தை Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார். , இது மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன் இப்படம் உருவாகிறது. இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதா நாயகனுக்கும்…
Read More
அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாற்காலி’. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தை ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற எம்.ஜி.ஆர் பாடல் இடம்பெறுகிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாற்காலி’ படத்தின் ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடல் குறுந்தகடை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=Xj9aju_o7IE&feature=youtu.be
Read More