‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

  மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இயக்குநர் பாலா பேசியதாவது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான்…
Read More
வெற்றிமாறன் கதையில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்கவுள்ள படத்தின் பூஜை துவங்கியது!

வெற்றிமாறன் கதையில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்கவுள்ள படத்தின் பூஜை துவங்கியது!

  'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ' படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும்…
Read More
வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

‘மெளனம் பேசியதே’ படம் மூலமா கோலிவுட்டில் டைரக்டரா அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் நடிகர் ஜீவாவை வைத்து ‘ராம்’ படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்தத் திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.அதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அமீர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். இதனிடையே ‘யோகி’ படத்தில் நடிகராக களம் இறங்கிய அமீர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வடசென்னையில் இவர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது இயக்கத்தில் ‘ ஆதி பகவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஜெயம்ரவி இரட்டை வேடங்களில் நடித்த இந்தத்திரைப்படம் தோல்வி அடைந்தது . தற்போது வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை…
Read More
ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

பேட்டைக்காளி இயக்கம் - ராஜ்குமார் நடிப்பு - கலையரசன், லீலா அண்ணனுக்கு ஜே மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பேட்டைக்காளி எடுத்திருக்கிறார். ஒரு படமாக வந்திருக்க வேண்டியது கதையின் டீடெயில்களால் வெப் சீரிஸாக மாறியிருக்கலாம். ஜல்லிக்கட்டு அதன் பின்னணி அதிலுள்ள வன்மம் அன்பு நடைமுறை பழக்க வழக்கம் இதெல்லாம் இணைந்தது தான் இந்த சீரிஸ். பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது கதை. நிலம் கேட்ட கூலிப்பணியாளர்களை விரட்டியடிக்கும் பண்ணையாரின் பகை, தலைமுறைகளாக தொடர்கிறது. நிலமின்றி, பணியின்றி அகதிகளாக தனித்து வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.   இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், கவுரவம், ஆதிக்கம்…
Read More
ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது. ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஹா முன்பே சொன்னது போல, 100% தமிழ் கண்டெண்ட் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான உண்மையான ஒரு நிகழ்வு தான் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது. ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத்தொடர் ’பேட்டைக்காளி’. காளைகளை…
Read More

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

  விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார். இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில்…
Read More
ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது

  சென்னை (செப்டம்பர் 28, 2022): ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' படத்தின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜல்லிக்கட்டு' உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான 'பேட்டைக்காளி', ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது. சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள். ஏற்கனவே 'பேட்டைக்காளி' என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே 'யாரந்த பேட்டைக்காளி' என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில்நுட்பக் குழுவை கொண்டது. இயக்குநர் வெற்றிமாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் 'பேட்டைக்காளி'…
Read More
பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

கோலிவுட்டில் இசைஞானியான இளையராஜா பிரசாத் தியேட்டரில் இருந்து வெளியேற்றப் பட்ட நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வந்த RR ப்ரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி புதிய இசை ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த புதிய ஸ்டுடியோவில் பூஜை போட்டு தனது படத்தின் பணிகளை இன்று (பிப்ரவரி 3) தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இளையராஜா. அப்போது அவர் பேசியது: "சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராயின. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக…
Read More