ஊடகங்களின் ஆதரவு இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும்! “வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

ஊடகங்களின் ஆதரவு இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும்! “வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... இயக்குநர் விநாயக் துரை பேசியதாவது… வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அவர் எங்கள் படத்தை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. கேபிள்…
Read More
ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?

ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலைவழக்குகளில் ஸ்வாதி கொலை வழக்கு-கும் இடமுண்டு. அந்த வழக்கை மையமாகக் கொண்டு தயாரான ’நுங்கம்பாக்கம்’என்ற பெயரில் மாறி இருக்கும் படம் வரும் 24ம் தேதி அன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. தமிழக தலைநகர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்பட பல ரயில் நிலையங்களில் இன்று சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஸ்வாதி கொலை வழக்குதான். ஸ்வாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால்தான் இக்கொலையில் பல மர்மங்கள் நீடிக்கிறது. இந்த கொலை வழக்கிற்கு பின்னர்தான் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த சுவாதியின் கொலையில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பெண்ணை கொன்ற ராம்குமார் தற்கொலையிலும் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக புகார்கள் இருக்கின்றன. ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்து போராடி…
Read More