மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

சீரியல் ஒன்றில் இந்த கால திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சித்துப் பேசியதால் மக்களிடையே ட்ரெண்டானவர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார். பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய்…
Read More
ஜெயிலருக்காக முதன்முறையாக விளம்பரம் செய்யும் சன் டிவி , தோல்வி பயமா ?

ஜெயிலருக்காக முதன்முறையாக விளம்பரம் செய்யும் சன் டிவி , தோல்வி பயமா ?

சன் டிவி தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இப்படத்திற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்த விளம்பர பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து மீடியாவில் விளம்பரம் செய்து வருகிறது சன் டிவி. ஆனால்… அங்கு தான் செய்தியே. பொதுவாக தமிழ்நாட்டில் சன் டிவிக்கு இருக்கும் மதிப்பு வேறு எந்த ஒரு மீடியாவிற்கும் இல்லை. தொலைக்காட்சி வழியே வீடு வீடாக புகுந்து ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது. சன் டிவி படம் தயாரிப்பில் இறங்கிய போது பொதுவாக பத்திரிக்கை ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் பேட்டியோ, செய்தியோ எதுவும் தரப்படுவதில்லை. அது மட்டுமில்லை படத்தை விமர்சனத்திற்காக ஊடக பத்திரிகை காட்சி கூட போடாமல் நேரடியாக திரையரங்கு வெளியீடு மட்டுமே செய்து வந்தது. பீ ஆர் ஓ பொறுப்பேற்று மீடியா ஷோ போடுவது வாடிக்கை. அதற்காக படத்தில் பணியாற்றிய பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் தயவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக…
Read More
‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!

‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது சென்னை (மார்ச் 11, 2023): நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்பதை சாந்தி டாக்கீஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்தில் சுமார் 500 உள்ளூர் நடனக் கலைஞர்கள் இடம்பெற்ற முதல் சிங்கிளான- ‘சீன் ஆ சீன் ஆ' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று, தங்கள் படத்தின் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கும் ஒரு பெரிய ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் படக்குழு உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி…
Read More
இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் - சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ் .டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும். கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல  செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான். முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது. படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,"கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்…
Read More