கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து  இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…
Read More
தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

 சில வாரங்களுக்கு முன்னர் நம் தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால் வருகின்ற மே 30 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும்…
Read More
மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரை உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால் விஷா லின் இந்த முடிவுக்கு பல திரையங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இம்முடிவுக்கு குறித்து ஆலோசிப்பதற்காக விரைவில் சங்கக் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்து கோயம்புத்தூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசிய போது, "தமிழக அரசை விஷால் முறைப்படி அணுகி கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்காமல் வேலைநிறுத்தம் என்பது எந்த விதத்தில் நியாயம். விஷால் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில்…
Read More