27
May
சேத்துமான் இயக்கம் : தமிழ் கதை : ‘வறுகறி’ - பெருமாள் முருகன் சிறுகதை இசை பிந்து மாலினி கேமரா - பிரதீப் காளிராஜ் சேத்துமான் என தெரியப்படும் பன்றியை சமைத்து சாப்பிட சிலர் விருப்பபட அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது என்பது தான் கதை. உணவு அரசியலை பற்றி பேசிய முக்கியமான படங்களில் சேத்துமான் திரைப்படமும் ஒன்று. ஒரு பன்றி கறியை சாப்பிட எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது என்பதை காட்சிகள் மூலமாக விவரிக்க முயற்சி செய்துள்ளனர். அது பாராட்டுதலுக்கு உரியதே. பார்வையாளர்களும் பன்றி கறி மீதான அனுபவத்தை இந்த படம் மூலமாக தான் உணருவார்கள் என்னும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுயாதீன திரைப்பட உருவாக்குதல் முயற்சியில் இந்த சேத்துமான் உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களின் வரவு என்பது ஒவ்வொரு மொழிகளிலும் தேவையான ஒன்று. அது தான் அந்த மொழி மக்களின் நுட்பமான வாழ்வியல் முறையை…