15
Apr
காளிதாசரால் எழுதப்பட்ட ‘சாகுந்தலம்’ எனும் புராணக்கதை தான் சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கிறார். சாபத்தால் பிரிந்த காதல் எப்படி விமோசனம் பெற்றது என்பது தான் கதை. காட்டுக்குள் அநாதையாக கிடக்கும் குழந்தைக்கு ‘சாகுந்தலம்’ எனப்பெயரிட்டு வளர்க்கிறார் கண்வ மகரிஷி. ரிஷி ஆஸ்ரமம் இருக்கும் காட்டு பகுதியில் சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சாகுந்தலாவும் துஷ்யந்தனை காதலிக்கிறாள். இருவரும் யாருக்கும் தெரியாமல் மணமுடித்துக்கொள்ள, விரைவில் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி துஷ்யந்தன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். வாக்களித்தபடி துஷ்யந்தன் வந்தாரா? இல்லையா? சாகுந்தலாவின் காதல் என்னவானது? என்பதுதான் படத்தின் கதை. ஒரு புராணக்கதை அதுவும் காதல் கதை இப்போது இவ்வளவு பிரமாண்டத்தில் ஏன் சொல்லப்பட வேண்டும். இந்தக்காலத்திற்கு ஏற்றவாறல்லாமல் முழு…